Monday, May 16, 2016

கலிலியோவின் விரல்!

  'புகழ்பெற்றவர்களின் உடல் அழிந்தாலும் அவர்களின் சாதனைகள் நிலைத்து நிற்கும்' என்று சொல்வார்கள்.  இந்த அறிவியல் யுகத்தில், உடல் பாகங்களையும் பாதுகாத்துவைக்க முடியும் என்பதற்கு உதாரணம் இது.
     கலிலியோ இறந்து 100 ஆண்டுகளுக்குப் பின் 1737-ல், அவரது உடலின் எஞ்சிய பாகங்கள் கல்லறையில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு, 'சாண்டோகுரோஸ்' என்ற தேவாலயத்தின் நினைவு மண்டபத்தில் அடக்கம் செய்யப்பட்டது.  அப்போது, கலிலியோவின் வலது கை நடுவிரலை எடுத்துப் பத்திரப்படுத்தினார்கள்.  அந்த விரல், பதப்படுத்தப்பட்டு, இத்தாலியின் ஃப்ளோரன்ஸ் நகர அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது.  இப்போதும் அதைப் பார்வையாளர்கள் பார்க்கலாம்.
-- வெ.லெட்சுமணன், நான்குனேரி.
--   சுட்டி விகடன். 15-01-2014.
-- இதழ் உதவி : P.K.ஸ்ரீபாலா, பச்சூர், காரைக்கால்.  

No comments: