Thursday, April 7, 2016

ஆன்மிகம்.

*  அபிமன்யுவின் தாய் சுபத்திரை.
*  ஜனகர், ராஜ ரிஷி என அழைக்கப்படுகிறார்.
*  மனீஷா பஞ்சகம் என்னும் நூலை இயற்றியவர் ஆதிசங்கரர்.
*  பீமன், அனுமனின் தம்பி.  இருவருமே வாயு பகவானின் புதல்வர்கள்.
*  'மதி வேண்டும் நின் கருணை நிதி வேண்டும்' எனப் பாடியவர் வள்ளலார்.
*  வைணவத் தத்துவத்தின் முக்கியமான அம்சங்களில் ஒன்று இறைவனிடம் சரணாகதி அடைதல்.
*  உலகெலாம் என்பது சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தின் முதல் அடி.  இறைவனே முதல் அடி எடுத்துக் கொடுத்ததாக
    ஐதீகம்.
*  ஆறு விதமான தத்துவப் பார்வைகள் ஷட் தரிசனங்கள் எனப்படுகின்றன.  வைசேஷிகம் அவற்றில் ஒன்று.
*  ராமகிருஷ்ண பரமஹம்சர் தட்சினேசுவரத்தில் காளி கோயில் பூசாரியாக இருந்தார்.
*  ருத்ரம் என்பது யஜுர் வேதத்தின் ஒரு பகுதி.
-- ஆனந்த ஜோதி.
-- 'தி இந்து' நாளிதழ். வியாழன், ஏப்ரல் 17,2014.   

No comments: