Wednesday, April 27, 2016

போக்கிரிகள்.

"போக்கிரிகளை எப்படிச் சமாளிக்க வேண்டும் ?"
     "நாங்கள் சமீபத்தில் உயிரியல் பூங்காவுக்குச் சென்றிருந்தபோது, அங்கிருந்த கொரில்லா குரங்கைப் பார்த்து பூங்கா ஊழியரிடம், 'இது ஆணா, பெண்ணா, அதை எப்படிக் கண்டுபிடிப்பது?' என்று ஓர் இளைஞன் கேட்டான்.  சுற்றிலும் குழந்தைகள், பெண்கள் இருந்ததால் அவர் சிரித்துச் சமாளித்தார்.  ஆனால், விடாமல் மீண்டும் மீண்டும் அவன் கேட்டுக்கொண்டே இருந்தான்.  அந்த ஊழியர் எதுவுமே சொல்லாமல் அமைதியாக இருந்தார்.  ஒருகட்டத்தில் அவன் கிண்டலும் நக்கலும் அத்துமீறிப் போகவே, 'தம்பி... அது ஆணா, பெண்ணா என்பதைத் தெரிந்துகோள்ள இன்னொரு கொரில்லாவுக்குத்தான் அக்கறை வேண்டும்.  நீ எதற்காக அதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறாய்?' என்று கேட்டார்.  அதுவரை பூங்கா ஊழியரை வம்புக்கு இழுத்த அந்த இளஞரின் முகம் போன போக்கு இருக்கிறதே!"
-- கே.சரஸ்வதி, ஈரோடு-12.. ( நானே கேள்வி... நானே பதில்! ).
--  ஆனந்த விகடன்.  9-10-2013.     

No comments: