Thursday, April 21, 2016

புலி...சில புள்ளிவிவரங்கள்.

*   இந்தியாவில் புலி வேட்டையாடத் தடை உள்ளது.  நாட்டில் இப்போது புலிகளுக்கென உள்ள 39 புகலிடங்களில் மூன்று   தமிழகத்தில் உள்ளன.
*   புலிகளின் உடல் மீதுள்ள வரிகள் ஒவ்வொரு புலிக்கும் மாறுபடும்.  அதைக் கொண்டுதான் புலிகளின் எண்ணிக்கை   கணக்கிடப்படும்.
*   இரை விலங்கை பதுங்கியோ, பின் தொடர்ந்தோ, ஒளிந்து தாக்கியோதான் புலி வேட்டையாடும்.  மூன்று பக்கமும்   சூழப்பட்டுவிட்டோம்  என்று உணர்ந்தால் மட்டுமே, மனிதர்களை
    நேருக்குநேர் பாய்ந்து தாக்கும்!
*   புலி பிராண்டிய குறிகள், பற் கடிகள், காலடித் தடங்களை வைத்து, அது ஆணா, பெண்ணா, எந்த திசையில் செல்கிறது, இந்த    இடத்தைவிட்டு சென்று எவ்வளவு நேரமாகிறது,  அதன்
    வாழிடம் எங்கே, கடைசியாக மனிதனைத் தாக்கியுள்ளதா என்பன  உள்ளிட்ட பல விவரங்களை அறியமுடியும்.
-- ச.ஜே.ரவி.
--  ஆனந்த விகடன்.  29-1-2014.  

No comments: