Sunday, March 6, 2016

பாதித்த சம்பவம்.

"சமீபத்தில் உங்கள் மனதைப் பாதித்த சம்பவம்.?"
     "சமீபத்தில், நாளிதழில் படித்த செய்தி ஒன்று... பவானியில் வயதான தம்பதியினர் ஆட்டோ ஒன்றில் ஏறி பவானி காவிரி ஆறு சங்கமிக்கும் கூடுதுறைக்கு போகச் சொல்லியுள்ளனர்.  ஆட்டோ அங்கு சென்றதும் இருவரும் தட்டுத்தடுமாறி இறங்கிச் சென்று, சென்ற வேகத்தில் திரும்பி வந்திருக்கிறார்கள்.  வந்தவர்கள், 'அந்த ஆற்றங்கரைக்குப் போ... இந்த படித்துறைக்குப் போ...' என ஆட்டோகாரரை அலைக்கழித்திருக்கிறார்கள்.   ஆனால், இறங்கிச் சென்ற அனைத்து இடங்களிலும் சென்ற வேகத்தில் திரும்பி வந்திருக்கிறார்கள்.  சந்தேகத்தில், 'என்ன விஷயம்?' என விசாரிக்க,  'நாங்கள் எங்கள் பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்கள்.  ஆற்றில் மூழ்கி தற்கொலை செய்யலாம் எனச் சென்றால் எங்குமே முழங்கால் அளவுக்கு மேல் தண்ணீர் வரவில்லை' எனக் கதறினார்களாம்.
      அவர்களை காவல் நிலையத்தில் விட்டார் ஆட்டோக்காரர்.  தம்பதியினரின் பிள்ளைகளை வரவழைத்து அறிவுறை கூறி அனுப்பிவைத்திருக்கனர் போலீஸார்.  இதில் தற்கொலை செய்துகொள்ள விரும்பிய பெற்றொரின் துயரம் ஒரு புறம் என்றால், ஆறுகள் 'கொலை' செய்யப்பட்ட வேதனை மறுபுறம் !"
-- சத்தி ஏ.ஜே.ஜப்பார், சத்தியமங்கலம். ( நானே கேள்வி... நானே பதில்!  பகுதியில்.)
-- ஆனந்த விகடன்.  09-04-2014.  

No comments: