Friday, March 4, 2016

யார், எது, எப்படி ?

1.  அஷ்ட வசுக்கள்........................ சிவஞானபோதம்
2.  மீமாம்சை.................................. அப்பர்.
3.  அஷ்டாங்க யோகம்................. அனுமன்.
4.  யயாதி ....................................... தத்துவம்.
5.  அஞ்சிலே ஒன்று பெற்றான் .... திருஞானசம்பந்தர்.
6.  ஞானப்பால் .............................. தாரணை.
7.  உழவாரப்பணி ........................  நாலாயிர திவ்விய பிரபந்தம்.
8.  பொலிக பொலிக...................... கங்கா தேவி.
9.  மெய்கண்டார்............................ தேவயானி.
*    பூலோகத்தில் பிறக்க வேண்டும் என்று அஷ்ட வசுக்களை வசிஷ்டர் சபித்தார்.  பூலோகத்தில் கங்காதேவிக்கு அவர்கள்
     பிறந்தார்கள்.
*   மீமாம்சை என்பது ஷட் தரிசனங்கள் எனச் சொல்லப்படும் ஆறுவகை தத்துவ தரிசங்களில் ஒன்று.
*   அஷ்டாங்க யோகம் எனச் சொல்லப்படும் யோகத்தின் எட்டு அங்கங்களில் ஒன்று தாரணை.
*   மன்னன் யயாதி சுக்கிராச்சாரியாரின் மகள் தேவயானியின் கணவன்.
*    அஞ்சிலே ஒன்று பெற்றான்  என்பது அனுமனைக் குறிக்கும்.  ஐம்பூதங்களில் ஒன்றான வாயுவின் புத்ல்வன் என்பதால்
     அனுமனைக் கம்பர் ஓரிடத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார்.
*   ஞானப்பால் உண்டவர் திருஞானசம்பந்தர் என்று புராணம் கூறுகிறது.
*   உழவாரப்பணி எனச் சொல்லப்படும் கோவில் துப்புறவுப் பணியைச் சிரமேற்கொண்டு செய்தவர் அப்பர்.
*   பொலிக பொலிக எனத் தொடங்கும் பாடல் ஒன்று நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் உள்ளது.
*   மெய்கண்டார் இயற்றிய நூல் சிவஞானபோதம்.
-- ஆனந்த ஜோதி.
-- 'தி இந்து' நாளிதழ்.  வியாழன்,  ஏப்ரல்  3, 2014. 

No comments: