Thursday, March 24, 2016

வாத்துகளைக் கையாளும் விதம்

  பொதுவாக மனிதர்கள் பிற உயிரினங்களை குறைந்தபட்ச கவனம் செலுத்தி கையாளவேண்டும்.  இல்லை எனில் அது மனிதருக்கோ அல்லது அந்த விலங்குக்கோ ஏதேனும் ஆபத்து ஏற்படலாம்.
     எனவே, மனிதன் கையாளும் முக்கியமான உயிரினங்களான முயல்களை அவற்றின் இரண்டு காதுகளைப் பிடித்து தூக்குகிறான்.  பூனையை பிடரியைப் பிடித்து தூக்குகிறான்.  கோழிகளை கால்களைப் பிடித்து தூக்குகிறான்.  ஆனால், வாத்துகளை மட்டும் கழுத்தைப்பிடித்துதான் தூக்க வேண்டும்.  பிற பறவை இனங்களில் கழுத்தைப்பிடித்து தூக்குவது என்பது அது ஒரு கொலை முயற்சியாகத்தான் இருக்கும்.
     வாத்துகளின் கால்கள் எளிதில் உடைய கூடியதாக இருக்கும்.
     வாத்தின் கழுத்தில் உள்ள சுவாச குழாய் பிவிசி குழாய் போல உறுதியாக இருக்கும்.  அதனால் கழுத்தைப் பிடித்துதான் தூக்கவேண்டும்.
-- டால்டர் ஆர். கோவிந்தராஜ்.
-- தினமலர். சிறுவர்மலர். ஏப்ரல் 11, 2014.    

No comments: