Saturday, February 20, 2016

சிம்பன்ஸி வழிகாட்டும்!

வனத்தில் வழிதவறினால் சிம்பன்ஸி வழிகாட்டும்!
* நியூயார்க் *
     அடர்ந்த காட்டுக்குள் வழிதவறிவிட்டால், வழியைக் கண்டுபிடிக்க சிம்பன்ஸியிடம் உதவி கோரலாம்.  சிம்பன்ஸிகள் எளிதில் வழியைக் கண்டுபிடிப்பதுடன், உணவு இருக்கும் இடத்தையும் கண்டுபிடித்துக் கொடுக்கும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
     சிம்பன்ஸிகள் சைகை மூலம் வழியைக் காட்டிக் கொடுக்கின்றன என்பது தெரியவந்தது.  இதனை பரிசோதித்துப் பார்க்க, பரந்த வனப்பரப்பில் ஓரிடத்தில் உணவு மறைத்து வைக்கப்பட்டது.  காட்டுக்குள் விடப்பட்ட மனிதர் தானாக முயன்று அந்த இடத்தைக் கண்டுபிடிக்க முயன்றும் முடியவில்லை.  ஆனால், சிம்பன்ஸிகள் இருந்த இடத்தில் இருந்த மனிதரவற்றின் உதவியை சைகை மூலம் கோரவே, அவை உணவு இருந்த இடத்தை எளிதில் கண்டுபிடித்துக் கொடுத்தன.  இந்த ஆய்வு முடிவு மொழிகள் எப்படி உருப்பெற்றன என்பதற்கான ஆய்வில் மிகவும் உதவிகரமாகைருக்கும்.
     இதற்கு முந்தைய ஆய்வுகள் சிம்பன்ஸிகளின் சைகை மொழியில் நெகிழ்வுத் தன்மை இருப்பதைச் சுட்டிக்காட்டின.  தர்போது, மிகவும் சிக்கலான சூழலில் அவற்றின் அறிவுத்திறனை வெளிப்படுத்த முடியும் எனத் தெரியவந்துள்ளது.
--- ஐ.ஏ.என்.எஸ்.  சர்வதேசம்.
-- 'தி இந்து' நாளிதழ்.  திங்கள், ஜனவரி 20, 2014.   

No comments: