Thursday, February 11, 2016

தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி!

   சான்சன் & சான்சன் ( Johnsaon & Johnsan ) நிறுவனத்தின் தயாரிப்புகளான பேபி ஆயில், சாம்பு, பவுடர், சோப்பு இவைகள் குழந்தைகளுக்கு பயன்படுத்தும் மிக நம்பகமான தயாரிப்பு என்று மக்களால் காலம் காலமாக நம்பப்பட்டு வருகிறது.  ஆனால், இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை குழந்தைகளுக்கு பயன்படுத்தினால், குழந்தைகளுக்கு ஒவ்வாமை, இளைப்பு, புற்றுநோய் போன்ற நோய்களையும் சில நேரங்களில் உடனே மரணத்தைக் கூட உண்டாக்கக் கூடிய அளவுக்கு ஆபத்தானது என்பது தெரியவந்துள்ளது.
     கேரளா உணவு தரக்கட்டுப்பாடு வாரியத்தில் இருந்து தொடரப்பட்ட வழக்குக்கு பின்னர் இந்த நிறுவனம் சிறிய கண்ணுக்குத் தெரியாத எச்சரிக்கை வாசகத்தை அதில் அச்சிட்டுள்ளது.  இதைக் குழந்தைகள் தொட வேண்டாம் என்று எழுதி இருக்கிறார்கள்.  இதைக் குழந்தைகள் தெரியாமல் குடித்துவிட்டாலோ அல்லது சுவாசித்தாலோ பெரிய ஆபத்து உண்டாகும் என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.
     குழந்தைகளுக்கான தயாரிப்பு என்று சொல்லி விட்டு குழந்தைகளைத் தொடவேண்டாம் என்று சொல்வதில் இருந்து இதன் பயங்கர நச்சு தன்மையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
     இந்த நிறுவனத்தின் தயாரிப்ப்புகள் அனைத்தும் சுத்திகரிக்கப்படாத பெட்ரோல்களின் கழிவில் இருந்து தயாரிக்கப்படுவதாகும்.  இது குறித்து உலக அளவில் இயங்கும் சுகாதார நிறுவனங்கள் இந்த நிறுவனத்தின் தயாரிப்புக்களைப் புறக்கணிக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளன.
     இதில் வேடிக்கை என்னவென்றால், இதன் தயாரிப்புகளைஉபயோகப்படுத்தி அதன் மூலம் வரும் ஒவ்வாமை மற்றும் நோய்களுக்கு இந்த நிறுவனமே மருந்துகளையும் தயாரித்து விற்கிறது.
     எப்படிக் கணினிகளை தயாரித்து விற்றுவிட்டு, அந்தக் கணினியை செயலிழக்கச் செய்யும் கிருமிகளை பரப்புவதும், அதை சரி செய்யேன்று எதிர்ப்புக் கிருமியை வாங்குங்கள் என்று வியாபாரம் செய்வது போன்ற அதே பன்னாட்டுக் கொள்ளைதான் மனித உயிகளிலும் விளையாடுகிறது.  அதுவும் ஒன்றும் அறியாத பச்சிளம் குழந்தைகளின் உயிரோடு விளையாடுகிறார்கள்.
     பெற்றோர்களே!  எச்சரிக்கையாய் இருங்கள்.  இந்த நாசகார சான்சன் & சான்சன் தயாரிப்புகளைப் புறக்கணிப்போம்!  நமது குழந்தைகளை பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாப்போம்!
( பின் குறிப்பு ) : ஜான்சன் & ஜான்சன் கம்பெனி லைசென்ஸ் ரத்து . செய்யப்பட்டது.
-- மருத்துவர் சாமிதுரை.
-- மூத்தகுடி  அரசியல்  மாத இதழ் . திசம்பர் 2013.
-- இதழ் உதவி : கனக.கண்ணன்.  செல்லூர்.  

No comments: