Tuesday, January 5, 2016

பிரசவம்

  பிரசவத்தின்  போது  நம்  தாய்  57  டெல்  யூனிட்  வலியை  நமக்காக  தாங்கிக்  கொள்கிறார்.  இது,  ஒரே  நேரத்தில்  20  எலும்புகள்  உடையும்போது  உணரப்படும்  வலிக்கு  சமமாகும்.
சரியான  நேரத்தில்  தண்ணீர்  அருந்துவதால்  ஏற்படும்  பலன் :
     *  விழித்ததும்  அருந்தும்  2  கிளாஸ்  நீரால்  உள்ளூருப்புகள்  சுறுசுறுப்படையும்.
     *  உணவுக்கு  30  நிமிடங்களுக்கு  முன்  அருந்தும்  1  கிளாஸ்  நீரால்  ஜீரணம்  அதிகரிக்கும்.
     *  குளிப்பதற்கு  முன்  அருந்தும்  1  கிளாஸ்  நீரால்  குறைந்த  ரத்த  அழுத்தம்  குணமாகும்.
     *  தூங்குவதற்கு  முன்  அருந்தும்  ஒரு  கிளாஸ்  நீரால்  மாரடைபிலிருந்து  தப்பலாம்.
-- 'பேஸ்புக்'கில்  படித்தது.  சி.பன்னீர்செல்வன்,  செங்கற்பட்டு.
அதிகமாகச்  சாப்பிட்டுவிட்டால்...
     சிறிதளவு  புதினா  இலைகள்,  ஒரு  சிறிய  துண்டு  இஞ்சி,  சிறிதளாவு  பெருங்காயம்  ஆகியவற்றை  எடுத்துக்கொண்டு  புதினாவையும்  இஞ்சியையும்  சிறுசிறு  துண்டுகளாக  நறுக்கி  பெருங்காயம்  சேர்த்து  ஒரு  டம்ளர்  மோரில்  போட்டு  குடித்து  விடவும்.  இவ்வாறு  செய்தால்  இது  செரிமானத்தைத்  தூண்டி  வயிற்றைச்  சரிபடுத்திவிடும்.
-- ஷீலா பாஸ்கரன்,முதியால்பேட்டை.
-- தினமணி கதிர்.  17-5-2015.
-- இதழ்  உதவி :  செல்லூர் கண்ணன்.

No comments: