Saturday, January 30, 2016

யார்,எது,என்ன?

1.  சஞ்சயன் வாய்மொழி........ அ.   சிவபெருமான்
2.  காண்டீபம் ..........................ஆ.   பரத முனிவர்.
3.  வாகீசன் .............................. இ.   அக்னி பகவான்.
4.  காதலாகிக் கசிந்து ............   ஈ    அமைச்சர்.
5.  பாசுபத அஸ்திரம் ...............உ.  ஞானசம்பந்தர்.
6.  பரத நாட்டிய சாஸ்திரம்......ஊ  சிரஞ்சீவி.
7.  சைதன்ய மகாபிரபு ............. எ.  சுந்தரர்.
8.  ஜாம்பவான் .......................... ஏ  மேற்கு வங்கம்.
9.  பித்தா பிறைசூடி ..................ஐ.  திருநாவுக்கரசர்.
10.விபீஷணன் ......................... ஒ.  பகவத் கீதை.
விடை :
1.  சஞ்சயன் வாய்மொழி -- கண்ணன் அர்ஜுனனுக்குச் சொன்ன கீதையை சஞ்சயன் ஞான திருஷ்டியால் கண்டு  திருதராஷ்டிரனுக்குச் சொல்கிறான்.
2.  காண்டீபம் என்னும் வில்லை அர்ச்சுனனுக்குக் கொடுத்தார் அக்னி பகவான்.
3.  வாகீசன் என்று திருநாவுக்கரசரைக் குறிப்பிடுவர்.
4.  காதலாகிக் கசிந்து என்று தொடங்கும் பாடலை எழுதியவர் ஞானசம்பந்தர்.
5.  பாசுபத அஸ்திரத்தை அர்ச்சுனனுக்கு அளித்தவர் சிவபெருமான்.
6.  பரத நாட்டிய சாஸ்திரம் நூலை எழுதியவர் பரதமுனிவர்.
7.  சைதன்ய மகாபிரபு மேற்கு வங்கத்தில் பிறந்தவர்.
8.  ஜாம்பவான், சுக்ரீவனின் அமைச்சர்.
9.  பித்தா பிறைசூடி எனத் தொடங்கும் பாடலை எழுதியவர் சுந்தரர்.
10.விபீஷணன் ஏழு சிரஞ்சீவிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
-- ஆனந்த ஜோதி.
--  'தி இந்து' நாளிதழ். வியாழன், மார்ச் 20,2014. 

No comments: