Sunday, January 3, 2016

பாவனைகள்

  மூன்று  விதமான  பாவனையில்  உலகில்  மனிதர்கள்  வாழ்கிறார்கள்.  அவை :  பிரம்ம  பாவனை,  கர்ம  பாவனை,  உபய  பாவனை.
     கடவுளையே  எப்போதும்  தியானித்து  பக்தி  செலுத்துவது  பிரம்ம  பாவனை.  நம்மாழ்வார்  போன்ற  ஆழ்வார்கள்  அனைவரும்  இந்த  பாவனையில்  வாழ்ந்தவர்கள்.
     வேலை,  சம்பாத்தியம்,  குடும்பப்  பொறுப்பு  என  எப்போதும்  கடமையில்  ஈடுபட்டு  இருப்பது  கர்ம  பாவனை.
     ஆனால்,  மனிதர்கள்  பெரும்பாலும்  பிரம்ம,  கர்ம  என்ற  இரண்டு  நிலையிலும்  கலந்து  வாழவே  விரும்புகிறார்கள்.  இந்தக்  கலப்புக்கு  உபயபாவனை  என்று  பெயர்.
-- வேளூக்குடி  உ.வே. கிருஷ்ணன்  சுவாமி.  ( நினைத்தாலே  இனிக்கும் )  தொடரில்....
-- - தினமலர்.  ஆன்மிக மலர்.  இணைப்பு. சென்னை  பதிப்பு . நவம்பர்  18, 2014.
-- இதழ்  உதவி :  SB. மாதவன்,  விருகம்பாக்கம்.  சென்னை . 92.

No comments: