Friday, January 29, 2016

வெற்றிலைத் தாம்பூலம்

  சாப்பிட்டதும் வெற்றிலை போடுவது நம்மிடம் இருந்த ஒரு பழக்கம்.  ஆனால் இன்று வெற்றிலை போடுவது நாகரிகமற்ற செயலாகப் பார்க்கப்படுகிறது.  வெற்றிலை ஒரு போதைப் பொருள் அல்ல.  அதன் மருத்துவ குணத்தால் வீட்டு விஷேச நிகழ்ச்சிகளிலும் வெற்றிலை தாம்பூலத்திற்குத் தனி இடமுண்டு.  வெற்றிலையுடன் பாக்கு, சுண்ணாம்பு, ஏலக்காய், கிராம்பு, வால் மிளகு, சாதிக்காய் ஆகியவற்றைச் சேர்த்துப் மெல்லும்போது பல விதமான மருத்துவப் பலன்கள் நம் உடலுக்குக் கிடைக்கின்றன.
     வெற்றிலை - வாயில் நறுமணம் உண்டாகும்.  பாக்கு - மலச்சிக்கலை நீக்கும். கோழை, கிருமியை நீக்கும்.  சுண்ணாம்பு - உணவை எளிதில் சீரணிக்கும். பற்களுக்கு உறுதியளிக்கும்.  உடலுக்கு இன்றியமையாததான சுண்ணாம்புஸ் சத்தை ( calclum) வழங்கும்.  ஏலம் - தொண்டை, வாய் இவைகளில் உண்டாகும் நோய்களை நீக்கும்.  வால்மிளகு - தாகம், வயிற்றுப்புண் நீக்கும். பசி உண்டாக்கும்.  சாதிக்காய் - வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், பசி மந்தம் நீங்கும்.  கிராம்பு - முகக் களிப்புண்டாகும்.
---சுந்தர லட்சுமி.   வாழ்வு இனிது.
-- 'தி இந்து' நாளிதழ்.  சனி. மார்ச் 15, 2014.     

No comments: