Sunday, January 17, 2016

கேள்வி - பதில்!

*  திருச்சி தி.மு.க. மாநாட்டில் பேசுவதற்காக சென்னை கன்னிமாரா நூலகம் சென்று குறிப்பெடுத்த தி.மு.க. பிரபலம் யார்?
    -- : குஷ்பு  --  'ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்' என்ற தலைப்பில் பேசுவதற்காக அவர் குறிப்புகள் சேகரித்தார்.
*  மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கும் இந்தியரின் பெயர் என்ன?
    -- : சத்யா நாதெள்ளா.
*  நரேந்திர மோடிக்கு ஆதரவாக அரை நிர்வாண போஸ் கொடுத்த இந்தி நடிகை யார்?
    -- : மேக்னா படேல்.
*  ஐ.பி.எல். ஏலத்தில் அதிக ட்கொகைக்கு ஏலம் போன இந்திய கிரிக்கெட் வீரர் யார்?  அது எவ்வளவு தொகை?
    -- : யுவராஜ் சிங்.  --  14 கோடி ரூபாய்.
*  தமிழகத்தில் 'அம்மா' என்ற பெயருடன் தொடங்கவிருக்கும் அடுத்த திட்டம் என்ன?
    -- : 'அம்மா மருந்தகங்கள்' !
*  கட்சியின் கூட்டணி வியூகம் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் மொபைல் போன் மூலம் பேட்டியளித்த கட்சித் தலைவர்
    யார்?              
    -- : நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் கார்த்திக்.
-- ம.கா.செந்தில்குமார் .  நா.சிபிச்சக்கரவர்த்தி.
-- ஆனந்த விகடன்.26-02-2014.   

No comments: