Saturday, December 31, 2016

விமான ரகசியங்கள்!

முகமூடி ரகசியம்
     விமானத்தில் ஏதேனும் நெருக்கடி ஏற்பட்டு,  உங்கள் முகத்துக்கு நேராக திடீரென ஆக்சிஜன் மாஸ்குகள் தொங்கும்.  விமானத்தின் கூரை முழுக்க ஆக்சிஜனாக நிரப்பியிருப்பார்கள்.  எவ்வளாவு நேரம் வேண்டுமானாலும் தாங்கும் என்ற மிதப்பு வேண்டாம்.  அதிகபட்சம் அது 15 நிமிடங்களுக்குத்தான்.  ஐயயோ! அவ்வளவுதான் என்று அலறவும் வேண்டாம்.  அதற்குள் பைலட் , விமானம் பறக்கும் உயரத்தைக் குறைத்து ஆக்சிஜன் இருக்கும் காற்று மண்டலத்திற்குக் கொண்டுவந்துவிடுவார்.  எனவே, ஆக்சிஜன் மாஸ்கை முதலில் நீங்கள் மாட்டிக்கொள்ளுங்கள்.  குழந்தை மீது உள்ள பாசத்தில் அதற்கு முதலில் ஆக்சிஜனை வழங்க எத்தனிக்க வேண்டாம்.  குழந்தை உங்களைவிட அதிக வினாடிகள் ஆக்சிஜன் இல்லாமல் தாக்குப் பிடிக்கும்.  முதலில் நீங்கள் சுருண்டுவிழாமல் பார்த்துக்கொண்டு, பிறகு நிதானமாகக் குழந்தைக்கும் மாஸ்கைப் பொருத்துங்கள்.
தண்ணீர் ரகசியம்
     விமானத்தில் பாட்டிலில் தரப்படும் தண்ணீரை மட்டும் குடியுங்கள்.  ஏனென்றால், குடிக்கவும், விமானக் கழிவறையில் பயன்படுத்தவும் பெரும்பாலும் ஒரே இடத்தில்தான் தண்ணீரை நிரப்புகிறார்கள்.  இரு பயன்பாட்டுகளுக்குமான தண்ணீர் தொட்டி ஓரடி இடைவெளியில்தான் இருக்கின்றன.  அதேபோல, குறிப்பிட்ட சில இடைவெளிகளில்தான் தண்ணீர் தொட்டியைச் சுஹ்தப்படுத்துகிறார்கள்.  அந்த நீரில் ஒட்டுண்ணிகள் இருக்க வாய்ப்புண்டு.  அந்த ஒட்டுண்ணிகள் பல நாடுகளைச் சுற்றிவருவதால் எந்த பூச்சிக்கொல்லிக்கும் சாகாமல் இருக்க வரம் பெற்றவை!  குடிப்பது மட்டுமல்ல, கையைக் கழுவுவது, வாயைக் கொப்பளிப்பதுகூட ஆபத்துதான்!
-- ஜூரி.  (கருத்துப் பேழை ).
-- 'தி இந்து' நாளிதழ்,  திங்கள், ஜூன் 9, 2014.      

Friday, December 30, 2016

தெரியுமா? - தெரியுமே!

*  ராமபிரானுக்கு  உதவிய  கழுகின்  பெயர்  ஜடாயு.  இது  இறந்தபின்  ராமபிரான்  அதை  எரியூட்டிய  இடம்  ஜடாயு  குண்டம்.  இது  வைத்தீஸ்வரன்
   கோயில்  வைத்தியநாதர்  கோயிலின்  உட்புறத்தில்  உள்ளது.  இந்த  வரலாற்றைச்  சொல்லும்  சிற்பங்களும்  அங்கு  உண்டு.
*  சப்தரிஷிகள் : மரீசி,  அத்திரி,  ஆங்கிரஸ,  பிருகு,  கிருது,  புவஸ்தியர்,  வசிட்டர் ( ஏழாவது தலைமுறை ), பரத்துவர்கள் என்பவர் ஆவர்.
*  கேரளத்தில் தற்போது கரங்கனூர் என்றழைக்கப்படும் துறைமுகம் அந்தக் காலத்தில் முசிறி என்ற பெயரில் புகழ்பெற்றிருந்தது.
*  'நவ' என்ற சொல்லுக்கு புதியது என்றும், ஒன்பது என்றும் பொருள் உண்டு.  உத்தராயண காலத்தில் ( தை - ஆனி ) நடுவில் வருவது வசந்த ருது ( சித்திரை )
   தட்சிணாயண காலத்தில் ( ஆடி - மார்கழி ) நடுவில் வருவது சரத் ருது ( புரட்டாசி ).  இவ்விரு பருவ காலங்களும் எமதர்மனின் இரு கோரைப்பற்களைக்
   குறிக்கும் என்று தேவி பாகவதம் சொல்கிறது.
*  பர்வத ராஜகுமாரியாக விளங்கும் பார்வதிக்கு 'உமா' என்று ஒரு பெயருண்டு.
*  'உமா' என்பதை 'சக்தி பிரணவ மந்திரம்' என்று சாஸ்திரம் கூறுகிறது.
*  'ஓம்' என்னும் பிரணவத்தில் இருப்பது போல, அகாரம், உகாரம், மகாரம் என்னும் மூன்றும் 'உமா' என்ற மந்திரத்திலும் அடங்கியுள்ளது.
*  முள்ளம் பன்றியை நீரில்  அமிழ்த்தி மூழ்கடிக்கவே முடியாது.  காரணம், அதன் மேலுள்ள முட்கள். இந்த முட்களில் வெற்றிடம் நிரம்பியுள்ளது.  இவை பலூன்
   போல முள்ளம் பன்றியை மேலே  மிதக்க வைக்கத்தான் செய்யுமே தவிர மூழ்கடிக்காது. 

Thursday, December 29, 2016

திருநீறு.

   நெற்றியில் நாம் அணியும் திருநீறு அவை தயாரிக்கப்படும் முறையில் நான்கு வகைப்படும்.
     1. கல்பம் : வியாதியில்லாத கன்றுடன் கூடிய பசுவின் சாணத்தை பூமியில் விழாமல் தாமரை இலையில் வாங்கி,
         உருண்டையாக்கி எரிக்கும்போது மந்திரங்கள் ஜபித்து சிவாக்கினியில் தயாரிப்பது.
     2. அணுகல்பம் : காடுகளில் கிடைக்கும் சாணங்களை கொண்டு சிவாக்கினியில் தயாரிப்பது.
     3. உபகல்பம் : மாட்டுத்தொழுவங்களில் இருந்தும், மாடுகள் இருக்கும் இடங்களில் இருந்தும் சாணத்தை எடுத்து சாதாரண
         தீயில் எரித்து பின் மீண்டும் சிவாக்கினியில் தயாரிப்பது.
     4. அகல்பம் : மந்திரங்கள் இல்லாமல் எல்லோராலும் சேகரித்த சாணத்தைக் கொண்டு சுள்ளீகளால் எரிக்கப்பட்டு தயாரிப்பது.
--  தினமலர். பக்திமலர். 27-11-2014.           

Wednesday, December 28, 2016

திருவண்ணாமலை

   தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய கோயில்களில் ஒன்று திருவண்ணாமலை.  இங்கு 9 கோபுரங்கள்,  2 தீர்த்தங்கள்,  25 ஏக்கர் நிலப்பரப்பு உள்ளன.  இக்கோயிலின் உயரம் 217 அடி.
     இக்கோயிலில் ஆண்டு முழுவதும் திரு விழாக்கள் நடைபெறும்.  பெரிய திருவிழா கார்த்திகை தீபத் திருவிழா.  அவ்விழாவின் 10-ம் நாள் சிவபெருமான் அம்பாளுக்கு உடலில் இடப்பாகத்தை கொடுத்து பக்தர்களுக்கு ஒரு நிமிடம் அர்த்த நாரீஸ்வரர் தரிசனம் கொடுப்பார்.  தீபத் திருவிழா தொடங்கி 10-ம் நாள் 2 ஆயிரத்து 668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் மாலை 6 மணிக்கு மாலை தீபம் ஏற்றப்படும்.  தீபம் ஏற்ற 6 அடிக்கு மேல் உயரம் உள்ள கொப்பரை பயன்படுத்தப்படும்.  மொத்தம் 3 ஆயிரம் கிலோ நெய்,  ஆயிரம் மீட்டர் காடா துணியும் பயன்படுத்தப்படும்.
     முதல் நாள் தீபத்திற்கு 600 லிட்டர் நெய், இரண்டு மூட்டை பஞ்சு, 15 மீட்டர் காடா துணி மற்றும் 2 கிலோ கற்பூரம் கொண்டு மலை மீது மகாதீபம் ஏற்றப்படும்.  11 நாட்கள் இந்த மகாதீபம் ஏற்றப்படும்.  மகா தீபம் ஏற்ற உரிமை பெற்றவர்கள் பருவதராஜ குலத்தினர்.
-- தினமலர். பக்திமலர். 27-11-2014.  

Tuesday, December 27, 2016

பதார்த்த குண சிந்தாமணி

பதார்த்த குண சிந்தாமணி எனும் பழம்பெரும் சித்த நூல் சொல்லும் சில நலவாழ்வுப் பழக்கங்கள் :
*   நாளுக்கு இரண்டு முறை மலம் கழிப்பது.
*   வாரத்துக்கு ஒரு முறை எண்ணெய்க் குளியல்.
*   மாதத்திற்கு ஒரு முறை உடலுறவு.
*   45 நாட்களுக்கு ஒரு முறை நாசியில் ( nasal drops )  மருந்து விடுவது.
*   நான்கு மாதங்களுக்கு ஒரு முறை பேதி மருந்து சாப்பிடுவது.
*   வருடத்துக்கு இரண்டு முறை வாந்தி மருந்து சாப்பிடுவது.
செய்யக் கூடாத விஷயங்கள் :
*   முதல் நாள் சமைத்த உணவு அமுதமாக இருந்தாலும் சாப்பிடக் கூடாது.
*   கருணைக்கிழங்கு தவிர பிற கிழங்குகளைச் சாப்பிடக் கூடாது.
*   பகலில் தூக்கமும் புணர்ச்சியும் கூடாது.
*   நாளுக்கு இரண்டு பொழுதுகள் தவிர மூன்று பொழுதுகள் சாப்பிடக் கூடாது.
*   பசிக்காமல் உணவு அருந்தக் கூடாது.
*   உணவு உண்ணும்போது இடையிடையே நீர் அருந்தக் கூடாது.
*   தும்மல்,  சிறுநீர்,  மலம்,  கொட்டாவி,  பசி,  தாகம்,  வாந்தி,  இருமல்,  ஆயாசம்,  தூக்கம்,  கண்ணீர்,  உடலுறவில் சுக்கிலம்,
    கீழ்க்காற்று,  மூச்சு இவற்றை அடக்கக் கூடாது.
கண்டிப்பாகச் செய்ய வேண்டியவை :
*   உணவு சாப்பிட்ட பிறகு குறு நடை.
*   நீரைச் சுருக்கி,  மோரைப் பெருக்கி,  நெய்யை உருக்கி உண்பது.
*   வாழைப்பழத்தைக் கனியாக அல்லாமல் இளம்பிஞ்சாகச் சாப்பிடுவது.
*   எண்ணெய்க் குளியலின்போது வெந்நீரில் குளிப்பது.
-- மருத்துவர்  கு.சிவராமன் .  (  நலம் 360 0  )
  ஆனந்த விகடன்.  8-11- 2014.       

Monday, December 26, 2016

கார் தயாரிப்பில் 'கூகுள்'

 டிரைவரில்லாமல் இயங்கும் தானியங்கி கார் தயாரிக்கும் பணியை, 'கூகுள்' இணைய தள நிறுவனம் துவக்கியுள்ளது.  மற்ற கார்களைப் போன்று காட்சியளித்தாலும், ஸ்டீயரிங் இல்லாமல், தானியங்கி முறையில் இயங்கும் வகையில் இந்தக் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
     ஸ்டீயரிங் மற்றும் ஆக்சிலேட்டர்கள் இல்லாததால், டிரைவர் தேவையில்லை.  அதற்கு பதிலாக, ஆன் - ஆப் பட்டன்கள் இருக்கும்.  ஸ்மார்ட்போன் தொழில் நுட்பத்தில் இயங்கும் இந்தக் காரில்,  நாம் செல்ல வேண்டிய இலக்கை பதிவு செய்துவிட்டால், கூகுள் வரைபட உதவியுடன், தானியங்கி முறையில் செல்லும்.
     கார் செல்லும் சாலை வரைபடத்தில், நெடுஞ்சாலைகளிலுள்ள சிக்னல்கள் மற்றும் முன்னால் செல்லும் வாகங்களுக்கு இடையிலான தூரம் ஆகியவை தெரியும்.
     மின்சாரத்தில் இயங்கும் இந்த காரில் இரண்டு இருக்கைகளுடன், பொருட்களை வைப்பதற்குத் தேவையான இட வசதியும் செய்யப்பட்டுள்ளது.  துவக்கத்தில், மணிக்கு 40 கி.மீ., வேகத்தில் செல்லும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.  காரில் கேமரா, லேசர் மற்றும் ரேடார் சென்சார்களும் பொருத்தப்பட்டுள்ளன.
-- தினமலர்  சென்னை  ஞாயிறு 1-6-2014. 

Sunday, December 25, 2016

வலைபாயுதே

*   twitter.com/ raju_ kanthan :
    பணத்தின் மதிப்பு தெரிய வேண்டும் என்றால்,  செலவு செய்யுங்கள்!  உங்களின் மதிப்பு தெரிய வேண்டும் என்றால், கடன்
    கேளுங்கள்!
*   twitter.com/ navi_n :
    ஓர் ஆண் தன் வாழ்நாளில் அதிக முறை யோசித்த விஷயம், தன் மனைவி இப்போது என்ன காரணத்துக்காகக் கோபித்துக்
    கொண்டிருக்கிறாள் என்பதே!
*   twitter.com/ puthi_ yavan :
    டாஸ்மாக்ல ஆண்களும்,  ஜவுளிக்கடையில பெண்களும் ஈசியா ஃப்ரெண்ட் ஆகிடுறாங்க!
*   twitter.com/ Aruns 212 :
    அப்பா எவ்வளவு பெரிய விஞ்ஞானியா இருந்தாலும்,  குழந்தை அழுவதற்கான காரணத்தை அம்மாவால்தான் கண்டு பிடிக்க
    முடியும்!
*   twitter.com/arattaigirl :
    'இன்னைக்கு என்ன சமைக்கலம்?'  என்ற ஓயாத சிந்தனையில் உருவான வார்த்தைதான் 'குழம்பு'!
--சைபர் ஸ்பைடர்.
--  ஆனந்த விகடன்.  11-06- 2014.     

Saturday, December 24, 2016

டைட்டனபோ ( Titanoboa ).

  அனகோண்டா மலைப்பாம்புகள்தான் உலகிலேயே 'பிரமாண்ட டெரர்' என்ற நினைப்பை மாற்றிக் கொள்ளுங்கள்.  அதைவிட 10 மடங்கு பெரிதான பாம்பு வகையைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
     டைட்டனபோ ( Titanoboa ) என்று அழைக்கப்படும் அந்த பாம்புகள், சுமார் 50 அடி நீளமும்,  1200 கிலோ எடையுடன் 6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் உலவியிருக்கின்றன.  வாழ்நாளின் பெரும் பகுதியை கடலிலேயே கழித்திருக்கும் இந்தப் பாம்புகள் வாழ்ந்ததற்கான தடயங்கள் இப்போது கொலம்பியாவின் நதிப் படிமங்களில் கிடைத்திருக்கின்றன.  --  ஹாலிவுட்  சினிமாவுக்கு லீட் சிக்கிருச்சுடோய்!
-- இன்பாக்ஸ்.
-- ஆனந்த விகடன்.  11-06- 2014.

Friday, December 23, 2016

ஸ்மார்ட்போன்.

*   உங்கள் போனை எப்போதுமே பாஸ்கோடு கொடுத்து லாக் செய்து வைத்திருங்கள்.
*   வைஃபை இலவசமாகக் கிடைக்கிறதே என்பதற்காக ஷாப்பிங் மால்,  காபி கிளப் என எங்கே சென்றாலும் அதன் மூலம்
     போன் பேங்கிங்,  நெட் பேங்கிங் உள்ளிட்ட வசதிகளைப் பயன்படுத்த வேண்டாம்.  அதன் மூலம்தான் உங்கள் போனை
    ஹேக் செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன!
*   உங்கள் போனில் உள்ள தகவல்களை ஐக்ளவுட்  அல்லது கம்ப்யூட்டரிலோ பேக்-அப் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
    இதனால் போன் காணாமல்போனாலும் தகவல்கள் பத்திரமாக இருக்கும்.  அதே சமயம் ரிமோட் ஆக்சஸ் மூலம் போனில்
    இருக்கும் தகவல்களை அழிக்கவும் முடியும்!
*   ஆப்பிள்,  ஆண்ட் ராய்டு, நோக்கியா என இயங்கு மென்பொருளைப் பொறுத்து அவர்களே சாஃப்ட்வேர் அப்டேட்களை 
    அனுப்புவார்கள்.  அதைத் தவறாமல் அப்டேட் செய்தாலே வைரஸ் பிரச்னைகள் வராது.
-- சார்லஸ்.  ( டெக் டாக் ) பகுதியில்...
--   ஆனந்த விகடன்  18- 06- 2014. 

Thursday, December 22, 2016

வினா - விடை.

*   "சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படும் கடையேழு வள்ளல்கள் யார்?"
      -- எழினி,  காரி,  ஓரி,  நள்ளி,  பாரி,  பேகன்,  மலையன்.
*   "ஐஸ்டர்யா ராயின் மகள் பெயர் என்ன?"
     -- ஆராத்யா.
*   "லோக் சபாவில் நரேந்திர மோடிக்கு அடுத்த இடத்தில் அமர வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டு,  ஆனால் அந்த
     வாய்ப்பு வழங்கப்படாத எம்.பி. யார்?"
     -- அத்வானி.
*   "தன் பிறந்த நாளை, விசேஷக் காரணத்துக்காக ஒரு நாள் முன்னதாகவே கொண்டாடுவார் தமிழ் சினிமா பிரபலம் ஒருவர்.
     அவர் யார்?  என்ன காரணம்?"
     -- அந்தப் பிரபலம் இளையராஜா.  கருணாநிதி, இளையராஜா இருவரும் ஜூன் 3-ம் தேதி பிறந்தவர்கள்.  கருணாநிதியின்
      பிறந்த நாளின் முக்கியத்துவம் கருதி, ஒரு நாள் முன்பாக ஜூன் 2-ம் தேதியே தன் பிறந்த நாளைக் கொண்டாடுவது என்று
      பழக்கப்படுத்திக்கொண்டார் இளையராஜா.
*   "சென்னை வட்டாரங்களில் மண்ணெண்ணெயை ஏன் கிருஷ்ணாயில் என்று குறிப்பிடுகிறார்கள்?"
     -- கெரசின் ஆயில் என்ற ஆங்கிலப் பதமேபழக்கத்தில் 'கிருஷ்ணாயில்' என்று மாறிவிட்டதாகச் சொல்கிறார்கள்.
--நா. சிபிச்சக்கரவர்த்தி.
--  ஆனந்த விகடன்  18- 06- 2014.   

Wednesday, December 21, 2016

"தேசப்பற்று"

"தேசப்பற்று என்பதன் எல்லை என்ன?"
     "பகத் சிங்கை, ஆங்கிலேயர்கள் தூக்கிலிடத் தீர்மானித்து,  தூக்கு மேடை முன்பு அவரை நிறுத்தினர்.  'தூக்கில் இடுவதற்கு முன்பு ஏதாவது சொல்ல விரும்பினால் சொல்லலாம்' என்று அனுமதி கொடுத்தனர்.  தான் இறப்பது குறித்து துளியும் வருந்தாத பகத் சிங், தன்னை ஒரு குற்றவாளியாகக் கருதி தூக்கில் போடுவதை மட்டும் விரும்பவில்லை.  'என்னை எதிரியாகக் கருதி சுட்டுவிடுங்கள்.  இதுதான் என் இறுதி ஆசை' என்றார்.
     'நீ எப்படியும் இறக்கத்தான் போகிறாய்.  உன்னை எப்படிக் கொன்றால் என்ன?'  என்று ஆங்கிலேய அதிகாரிகள் அலட்சியமாகக் கேட்டனர்.
     அதற்கு பகத் சிங், 'தூக்கிலிடும்போது என் கால்கள் என்னுடைய தாய் மண்ணைத் தொட முடியாத உயரத்தில் இருக்கும்.  ஆனால், துப்பாக்கியால் சுடும்போது என்னுடைய தாய் மண்ணைத் தழுவியபடியே உயிர் விடுவேன்.  அதுவே எனக்கு மகிழ்ச்சி'  என்றார்.  பற்று என்றால் இது பற்று".
-- கங்கை பிரபாகரன், சென்னை.
-- ( நானே கேள்வி ... நானே பதில் ! )  பகுதியில்...
-- ஆனந்த விகடன்  18- 06- 2014.          

Tuesday, December 20, 2016

கவனமாய் இருப்போம் !

*  வழிநெடுகிலும் வாகனங்கள்
    பயணங்களில் கவனமாய் இருப்போம் !
*  வார்த்தைகள் வாழ்க்கையை தீர்மானிக்கின்றன
    பேசுவதில் கவனமாய் இருப்போம் !
*   சிந்தனையே செயலை முடிவு செய்கிறது
    எண்ணங்களில் கவனமாய் இருப்போம் !
*  எழுத்துகள் எப்போதும் ஆதாரம்
    கையெழுத்தில் கவனமாய் இருப்போம் !
*   சாதிக்க குணங்களே சந்தர்ப்பம் தருகின்றன
    நடத்தையில் கவனமாய் இருப்போம் !
*  வறுமையில் பணத்தின் அருமை தெரிகிறது
   சேமிப்பில் கவனமாய் இருப்போம் !
*  பிரிவில்தான் பாசத்தின் பெருமை தெரிகிறது
   நேசத்தில் கவனமாய் இருப்போம் !
*  கல்விதான் அறிவை தீர்மானிக்கிறது
   படிப்பில் கவனமாய் இருப்போம் !
*  முகம் தான் நினைப்பதை வெளியே காட்டுகிறது
   அக அழகினில் கவனமாய் இருப்போம் !
*  பொய்தான் நம்பகத்தன்மையை அடையாளப்படுத்துகிறது
   உண்மையில் கவனமாய் இருப்போம் !
*  வேலையின் விளைச்சலே பதவியை உயர்த்திடும்
   உழைப்பத்தில் கவனமாய் இருப்போம் !
*  தயக்கத்தில்தான் வெற்றிகள் தள்ளிப்போகிறது
   தைரியத்தில் கவனமாய் இருப்போம் !
*  வாழ்க்கை என்பது நிரந்தரமற்றது
   மகிழ்ச்சியில் கவனமாய் இருப்போம் !
*  'எனது' என்பது நிரந்தரமற்றது
   ஈகையில் கவனமாய் இருப்போம் !
*  புகழ் ஒன்றே காலத்தால் அழியாதது
   சாதனையில் கவனமாய் இருப்போம் !
-- என்.ஏகம்பவாணன்,  சென்னை.  ( கவிதைச்சோலை ! ).
-- தினமலர்.  வாரமலர்  சென்னை பதிப்பு. ஜூன் 15, 2014.      

Monday, December 19, 2016

பூச்சிகொல்லிகள்

   மனித இனம் இன்றைக்கு சந்திக்கும் பெரும்பாலான நோய்களுக்கு பூச்சிகொல்லிகளூம் ஒரு காரணம்.  பயிர்களில் தெளிக்கப்படும் பூச்சிகொல்லி நஞ்சுகள் காற்று, மண், நீரில் எஞ்சிவிடுகின்றன.  இந்த எஞ்சிய நஞ்சு, பயிர்கள் மற்றும் உணவுப்பொருட்கள் வழியாக நம் உடலுக்குள் சென்று தங்கி மெள்ள மெள்ளக் கொல்லும் விஷமாக மாறுகின்றன.  100 மில்லி பூச்சிகொல்லியைக் குடித்தால், உடனே மரணம்.  அதே பூச்சிகொல்லி பல்வேறு காரணிகள் வழியாக, மனித உடலில் கொஞ்சம் கொஞ்சமாகப் படிந்து 10, 15 ஆண்டுகளில் 100 மில்லி அளவை எட்டும்போது, உடனடி மரணம் நிகழாவிட்டாலும் உள் உறுப்புகள் கடுமையாகப் பாதிக்கப்படும்.  சிறுநீரகம், மூளை, எலும்புகள், ரத்தம் எனப் பல இடங்களிலும் இந்த நஞ்சு பரவும்போது, ரத்த அழுத்தம், பார்வைக் குறைபாடு, ஆஸ்துமா, சிறுநீரகக் கோளாறு என நோய்கள் உருவாகத் தொடங்குகின்றன.  இதையெல்லாம்விட தற்போது சந்தையில் கிடைக்கும் ஐந்தாம் தலைமுறை பூச்சிகொல்லிகளால், மனித இனம் மிகப் பெரிய ஆபத்தை சந்திக்கப்போகிறது.
--  ஆர்.குமரேசன்.  ( விகடன் பார்வை ).
-- ஆனந்த விகடன். 12-11-2014.   

Sunday, December 18, 2016

உணவில் விஷம்!

   தற்போது தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லிகளில் வீரியம் குறைந்தது எண்டோசல்பான்.  இந்தப் பூச்சிக்கொல்லி ஏற்படுத்தும் பேரழிவிற்கு உதாரணம், கேரள மாநிலத்தில் உள்ள காசர்கோடு பகுதி.  ஒரு காலத்தில் இயர்கை எழில் கொஞ்சும் பகுதியாக  இருந்த காசர்கோட்டில் மாநில அரசுக்கு சொந்தமான முந்திரி தோப்புகளில், 1978-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை ஹெலிகாப்டர் மூலமாக எண்டோசல்பான் தெளிக்கப்பட்டது.  அதன் பலன், இன்றைக்கும் அந்தப் பகுதியில் மனிதர்களும் கால்நடைகளும் நரம்பு மண்டலப் பாதிப்பு, மனநலப்பாதிப்புகளுடன் நடைபிணங்களாகத் திரிகிறார்கள்.  வீரியம் குறைந்த எண்டோசல்பானுக்கே இப்படி என்றால், தற்போது பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள் அதைவிட பல மடங்கு வீரியமானவை.  பசுமைப் புரட்சியின் விளைவாக கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக,  நாடு முழுவதும் அபரிமிதமாக அதிகரித்துவிட்ட ரசாயனப் பூச்சிகொல்லிகள் பயன்பாடு, பல்வேறு நோய்களாக விகார விஸ்வரூபம் எடுக்கின்றன!
-- ஆர்.குமரேசன்.  ( விகடன் பார்வை ).
-- ஆனந்த விகடன். 12-11-2014.   

Saturday, December 17, 2016

தாஜ்மகால்

  உலக அதிசயமாகவும், காதலர்களின் நினைவுச் சின்னமாகவும் விளங்கும் தாஜ்மகாலின் அழகை, மேலும் பொலிவூட்ட , தொல்லியல் துறை அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
     உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுவது, உ.பி., மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மகால், மொகலாய மன்னர் ஷாஜகான், தன் மனைவி மும்தாஜ் மீது கொண்ட காதலின் அடையாளமாக, இதை கட்டினான்.  கி.பி., 1632 - 1654 ஆகிய காலத்தில் கட்டப்பட்ட இந்த அழகோவியம், வெண் பளிங்கு கற்களால் உருவானது.  இன்றும் காதலர்களின் நினைவுச் சின்னமாக விளங்குகிறது.
     சமீபகாலமாக, ஆக்ராவில், சுற்றுச்சூழல் மாசு அடைந்துள்ளது.  இதனால், தாஜ்மகாலின் மீதும், தூசுப் படலம் படிந்து, வெளித் தோற்றம் மஞ்சள் நிறத்தில் காட்சி அளிக்கிறது.  இந்த தூசுப் படலத்தை அகற்றி, தாஜ்மகாலின் அழகை மெருகூட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
      இதுகுறித்து, தொல்லியல் துறை அதிகாரிகள் கூறியதாவது :
     தற்போது, பெண்கள், தங்கள் முகத்தை அழகூட்டுவதற்காக, 'முல்தானி மட்டி' என்ற 'பேசியல்' முறையை பின்பற்றுகின்றனர்.
இதேபோன்று, தாஜ்மகாலின் அழகையும் திரும்ப பெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.  மண்ணில் சில ரசாயனங்களை கலந்து, சேற்று களிம்பு தயாரித்து, அவற்றை தாஜ்மகாலில், தூசுப் படலம் சூழ்ந்துள்ள இடங்களில், 2 மி.மீ., அளவுக்கு பூசுவோம்.
     அந்த களிம்பு காய்ந்ததும், அதன் மீது, பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட தண்ணீர் கரைசலை பீய்ச்சி அடிப்போம்.  பின், அந்த களிம்பை மென்மையான துணியால் துடைப்போம்.  இதன்மூலம், தாஜ்மகாலின் அழகு, மீண்டும் பொலிவடைந்து விடும்.
     கடந்த, 1994, 2001, 2008 ஆகிய ஆண்டுகளிலும், தாஜ்மகாலை, இதேபோன்ற முரையில் தூய்மை படுத்தி உள்ளோம்.  இவ்வாறு, அவர்கள் கூறினர்.
--   தினமலர்  சென்னை  திங்கள் 9-6-2014.   

Friday, December 16, 2016

புனித கங்கை

சில தகவல்கள் :
*   நதியின் நீளம்  --  2,525 கி.மீ.,
*   நதியோரம் வாழும் மக்கள்  --  50 கோடி
*   ஆண்டுக்கு, 40 ஆயிரம் பிணங்கள் எரிப்பு
*   ஆண்டுக்கு 15 ஆயிரம் டன் சாம்பல் நதியில் கலப்பு
*   200 டன், அரைகுறையாக எரிந்த மனித உடல்கள் வீசப்படுகின்றன.
*   1,800 டால்பின் மீன்கள் வசிக்கின்றன
*   சுத்தப்படுத்த உத்தேச செலவு  --  2 லட்சம் கோடி ரூபாய்
கங்கையில் கலக்கும் பிற நதிகள் :
யமுனா,  ராமகங்கா,  கோமதி,  காகாரா,  கான்டாக்,  தமோதர்,  கோசி,  காளி,  சம்பல்,  பெட்வா,  கென்,  டோன்ஸ்,  சோனே.
கங்கை நதிக்கரை தொழில் நகரங்கள் :
*   ஹரித்துவார்
*   கான்பூர்
*   அலகாபாத்
*   வாரணாசி.
இந்தியாவின் புனித நதி :
கங்கை நீரை வீட்டில் வைத்து வழிபடுபவர்கள் ஏராளம்.  கங்கையில் நீராடினால் பாவங்கள் தொலையும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.  கங்கோத்ரி,  யமுனோத்ரி,  பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் ஆகிய நான்கு வழிபாட்டு தலங்களும், கங்கையை அடிப்படையாக கொண்டவை.  ஆண்டுதோறும், 2 கோடி இந்துக்கள் இந்த நான்கு வழிபாட்டு தலங்களிலும் வழிபடுகின்றனர்.
-- தினமலர்  சென்னை  சனி 7-6-2014.    

Thursday, December 15, 2016

திருமணம்

  கம்பராமாயணத்தில் திருமணம், முடிசூட்டல் போன்ற நிகழ்ச்சிகளுக்கு நன்னாள் நியமித்த செய்தி பேசப்பட்டிருக்கிறது.  அந்தக் காலத்தில் ரிஷப ராசியில் ரோகிணி நட்சத்திர சாரத்தில் சந்திரன் வந்து நின்று உச்சம் பெறுகின்ற நாளில் திருமணம் நடந்தால், பிற்காலத்தில் மிகவும் சிறப்புற்று விளங்கும் என்று நம்பினார்கள்.
அரண்மனை அமைக்க:
     சங்க இலக்கியத்தில் அரண்மனை அமைக்க மனையடி சாஸ்திர விதியை நாடினர்.  ஜோதிட அறிஞர்கள் நாழிகை கணக்குப் பார்த்து திருமுறைபார்த்து செய்திருக்கிறார்கள்.
     சித்திரை மாதம் 10-ம் தேதி முதல் 20-ம் தேதிக்குள் ஏதேனும் ஒரு நாளில் பகல் பொழுதில் 15 நாழிகை அளவில் சூரியன் நடு உச்சியில் இருக்கும்போது நிலத்தில் இரண்டு கம்புகளை நாட்டி,, நிழல் எந்தத் திசையிலும் சற்றும் விழாத நிலையை அறிந்து மனைக்கு அடிக்கல் இட்டு திருமுறை சார்த்திய செய்தியை
     விரிகதிர் பரப்பிய வியன்வாய் மண்டிலம்
     இருக்கோற் குறிநிலை வழுக்காது குடக்கோல்
     பொறுதிறந் சாரா அரை நாள் அமையத்து
     நூலறி புலவர் நுண்ணுதிற் கயிறிட்டுத்
     தே எங் கொண்டு தெய்வம் நோக்கி
     பெரும் பெயர் மன்னர்க்கொப்ப மனைவகுத்து
     உலவுத் தலைவந்த பெருநாள் அமையத்து
     இருசுடர் தம்முள் நோக்கி ஒரு சுடர்
     புன்கண் மாலை மலை மறைந்தாங்கு
என்கிற சங்கப் பாடல் கூறுகிறது.
--  ( ஜோதிடம் தெளிவோம் )  பகுதியில்...
-- ஜோதிட ரத்னா மன்னை ஸ்ரீமதி வி. அகிலாண்டேஸ்வரி ஐயர்.
--  'தி இந்து' நாளிதழ்.  பெண் இன்று . ஞாயிறு , நவம்பர் 23, 2014.   

Wednesday, December 14, 2016

'காஸ் சிலிண்டர்'

'காஸ் சிலிண்டர்' எப்போது வெடிக்கும்!
     'காஸ் சிலிண்டர்' எனும் சமையல் எரிவாயு உருளைக்குள் அடைக்கப்பட்டிருக்கும், 'புரோப்பேன், பூட்டேன்' ஆகியவை, திரவ வடிவில் தான் இருக்கும்.  ஆனால், அது அடுப்புக்கு, வாயு வடிவில் வருகிறது.  சிலிண்டரில் இருந்து, 'காஸ் லீக்'  ஆகும்போது, அதை எளிதில் உணர, 'எத்தில் மெர்கேப்டன்' என்ற ரசாயனம் சேர்க்கப்பட்டு இருக்கும்.
     இந்த ரசாயனம் தான் 'காஸ் லீக்' ஆவதை, வாசனை மூலம் எச்சரிக்கை செய்யும்.  எனவே, இவ்வாசனையை உனர்ந்ததும், உடனடியாக உஷாராகி செயல்பட வேண்டும்.  இல்லையென்றால், சிலிண்டரில் இருந்து வெளிவரும் திரவம், காற்றைவிட கனமானது என்பதால், புகையை போல் மேலே பரவாமல், தரையில் பரவி விடும்.
     அப்படி கீழே தங்கியிருக்கும் காஸ் மீது, சிறிய தீப்பொறி பட்டாலும், பெரிய அளவில் தீப்பற்றி எரிய ஆரம்பிக்கும்.  இப்படி, சிலிண்டரை சுற்றி தீ தொடர்ந்து எரிவதால், சிலிண்டரின் உட்புறம் உள்ள திரவ நிலை எரிவாயு, அதிக அழுத்தம் அடைந்து, சிலிண்டரின், 'டெஸ்ட் பிரஷர்' எனும், அதிகபட்ச அழுத்தத்தை அடைந்து வெடிக்கிறது.
     காஸ் கசிவு ஏற்பட்டவுடன், தீ விபத்தை தடுக்க, சிலிண்டரின் மீதுள்ள, 'ரெகுலேட்டரை'  கழற்றி விட்டு, சிலிண்டரின் மேல் பகுதியில் சிறு கயிற்றால் கட்டி தொங்கவிடப்பட்டிருக்கும் வெள்ளை நிற பிளாஸ்டிக் மூடியை, சிலிண்டரின் வால்வின் மீது பொருத்தி, விபத்தை தடுக்கலாம்.
     பெரும்பாலான வீடுகளில் இரவு சமையல் முடிந்து ரெகுலேட்டரை, 'ஆப்' செய்யாமல் தூங்கிவிடுவதால் தான், 70 சதவீத விபத்துகள் ஏற்படுகின்றன.  நைந்த, 'ரப்பர் டியூப்' பயன்படுத்துவதும் மற்றொரு காரணம்.  எனவே, தரம் குறைந்த பச்சை நிற ரப்பர் டியூப் பொருத்தியிருந்தால், ஆரஞ்சு நிற ரப்பர் டியூபை, வினியோகிப்பாளரிடம் பெற்று, அவர்களின் மெக்கானிக்கால் சரியானபடி பொருத்தித் தரச் சொல்லுங்கள்.  மேலும், தினமும் வேலை முடிந்ததும், அடுப்பை துடைப்பது தான் நல்லது.
--சாமிவேலு, அனைந்திந்திய பாரத் காஸ் வினியோகஸ்தர்கள் சங்க துணை தலைவர். சென்னை.
-- செகண்ட் பிரன்ட் பேஜ்.
-- தினமலர்  சென்னை  ஞாயிறு 8-6-2014. 

Tuesday, December 13, 2016

சர்க்கரை, ரத்த அழுத்தம்?

   வயிற்றில் எதுவும் இல்லாதபோது ( அதாவது காலை வேளையில் காப்பிகூட குடிக்காத நிலையில் ) ரத்தத்திலுள்ள சர்க்கரை அழுத்தம் 79.2 லிருந்து 110 mg/dt வரை இருக்க வேண்டும்.  சர்க்கரை நோயாளிகளுக்கு இது 90விலிருந்து 130 வரை இருக்கலாம் என்கிறார்கள்.  சாப்பிட்ட இரண்டு மணி நேரத்தில் ரத்தத்திலுள்ள சர்க்கரை அளவு 160க்குள் இருந்தால் அது நார்மல்.  என்றாலும் இந்த புள்ளி விவரங்கள் மருத்துவர்களிடையே மாறுபடுகின்றன.
     இதயம் விரியும்போது ஒருவரது ரத்த அழுத்தம் 80 என்றும், சுருங்கும்போது 120 என்றும் இருக்க வேண்டும்.  அதாவது ஓய்வெடுக்கும்போது இருக்க வேண்டிய ரத்த அழுத்தம் 130/80 mm Hg.
-- ஜி.எஸ்.எஸ்.  ( குட்டீஸ் சந்தேக மேடை.) பகுதியில்...
-- தினமலர் - சிறுவர் மலர்.  நவம்பர் 21, 2014.  

Monday, December 12, 2016

ஹலோ !

  ஹலோ!  இது ஒரு வார்த்தை இல்லை.  உணர்வின் வெளிப்பாடு!
     அன்பை சொல்ல,  நம்மை அறிமுகப்படுத்த,  ஆசையாய் பேச,  நலம் அறிய ... இப்படி எத்தனையோ உணர்வு பரிமாற்றங்களுக்கான ஓர் அர்த்தமுள்ள சொல்தான் ஹலோ.
     எகிப்து மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே நடந்த போர் 1973ம் ஆண்டில் முடிவுக்கு வந்ததை அடுத்து, அதனை உலக ஹலோ தினமாக ( நவம்பர் , 21 ) கொண்டாடினர்.  இப்போது 180 நாடுகளில் இதை கொண்டாடுகின்றன.
     ஒவ்வொருவரும் உலக அமைதிக்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
-- தினமலர். பக்தி மலர்.  நவம்பர், 21, 2014.  

Sunday, December 11, 2016

ஜோக்ஸ் காலனி

*   "ஐந்தில் விளையாததுஐம்பதில் விளையாது -ங்கிற பழமொழிக்கு தலைவர் புதுசா விளக்கம் கொடுத்திருக்காரே?"
    "என்ன சொன்னார்?"
    "5 வருஷத்துல சம்பாதிக்க முடியாதவனால 50 வருஷம் பதவில இருந்தாலும் சம்பாதிக்க முடியாது'ன்னு சொல்லியிருக்கார்.
*   "பாழாப்போன சந்தேகத்தாலதான் மாட்டிக்கிட்டேன்"
    "அப்படியென்ன சந்தேகம் உனக்கு?"
    "திருடி வச்சது எல்லாத்தையும் எடுத்துக்கிட்டோமான்னு பார்க்க மறுபடியும் உள்ளே போனப்ப மாட்டிக்கிட்டேன்"
*   "என்னங்க, நம்ம வீட்டுக்கு உடனே ஒரு இன்வெர்ட்டர் வாங்கிப் போடுங்க."
     "ஏன்?"
     "நாளைக்கு உங்க மாமியார் வர்றாங்க."
*   ஆசிரியர்: "எங்கே! பாரதியார் பாடல் ஒன்றை பாடு!"
    அரசியல்வாதி மகன்: "காலி நிலம் வேண்டும் பராசக்தி, காலி நிலம் வேண்டும்!"
-- - கல்கி.  மே, 4 2014.
-- இதழ் உதவி : செல்லூர் கண்ணன்.

Saturday, December 10, 2016

நியூஸ் ஏந்தி பவன்

*   கிறிஸ்துவுக்கு முன் ஐஸ்!
    கிறிஸ்து பிறப்பதற்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெருக்களில் ஐஸ்கிரீம் விற்றதாக மார்க்கோபோலோ எழுதி உள்ளார்.    
 *   திபெத்தியர்கள்  மீனைத் தெய்வமாகக் கருதுகின்றனர்.  எனவே அவர்கள் மீன் சாப்பிடுவதில்லை.
*   கைரேகையை வைத்துக் குற்ரவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறையைக் கண்டறிந்தவர் எட்வர்ட் ஹென்றி.
*   ஜப்பானில், மாணவர்களுக்கு இரு கைகளாலும் எழுதப் பயிற்சியளிக்கிறார்கள்.
*   உலகில் மிகச் சிறிய கடற்கரை உள்ள நாடு மொனாகோ ( 5 1/2 கி.மீட்டர் நீளம் ).
-- வாசகர் பகுதி.
-- கல்கி.  மே, 4 2014.
-- இதழ் உதவி : செல்லூர் கண்ணன்.   

Friday, December 9, 2016

மழை நீர்

  மனித உடலில் பெரும்பகுதி நீராலானது.  தாவர உடலிலும் 90 விழுக்காடு அளவுக்கு நீர் நிறைந்துள்ளது.  வளர்ந்த ஜெல்லிமீன் போன்றவற்றின் உடலில் 96 விழுக்காடு வரையும் நீர்தான்.  இது நீரின்றி உயிரில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறது.  உயிர்வாழ்வுக்கும் புறத்தூய்மைக்கும் நீர் அவசியம்.  இவ்வுலகு நீரால் சூழப்பட்டது எனினும் நாம் பயன்படுத்தத்தக்க நந்னீரின் அளவு நாளுக்குநாள் குறைந்துகொண்டே செல்கிறது.
     மழையைச் சிறுமழை என்றும் பெருமழை என்றும் பிரித்தறிந்து செயல்பட த் தகுந்த அளவுகோல்கள் அன்று இருந்தன.  நெல் குத்த உதவும் உரலே கிராமத்து மழைமானி ஆகும்.  உரல் நிறைந்த மழை ஓர் அங்குல மழைக்குச் சமம் என்பர்.  நிலத்தில் கலப்பையின் கொழுமுனை மண்ணில் இறங்கத்தக்க அளவைவிடக் கூடுதல் மழையெனில் அது மாமழை எனப்பட்டது.
-- கண்ணன் ஸ்ரீஹரி.
-- பச்சை பூமி.  ஆகஸ்ட் - 2014.
-- இதழ் உதவி : செல்லூர் கண்ணன்.   

Thursday, December 8, 2016

மெமரி ஸ்கேல்.

  பிட்,  பைட் என்ற அளவு குறித்து அனைவரும் அறிந்திருப்பீர்கள்.  பெரிய அளவுகளில் டேட்டாக்கள் அடையும் போது, அவற்றின் அலகுச் சொற்கள் என்னவென்று, சட் என நமக்கு நினைவிற்கு வராது.  சிடி ராம்,  ஹார்டு ட்ரைவ்,  யு.எஸ்.பி. பிளாஷ் ட்ரைவ்,  டிவிடி ராம்,  புளூரே டிஸ்க் ஆகியவற்றின் அளவுகளைக் குறிக்கையில் இந்த அலகு சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.  கிலோ பைட்,  கிகா பைட்,  டெரா பைட் அளவில் நாம் ஓரளவு இவற்றை உணர்கிறோம்.  அதற்கும் மேலாகவும் அலகுச் சொற்கள் வந்துள்ளன.  எனவே அவற்றை இங்கு காணலாம்.
ஒரு கிலோ பைட் ( kilobyte )  =  1.024 பைட்ஸ்
ஒரு மெகா பைட் ( megabyte )  =  1.024 கிலோ பைட்ஸ்
ஒரு கிகா பைட் ( gigabyte )  =  1.024 மெகா பைட்ஸ்
ஒரு டெரா பைட் ( terabyte )  =  1.024 கிகா பைட்ஸ்
ஒரு பெட்டா பைட் ( pettabyte )  =  1.024 டெரா பைட்ஸ்
ஒரு எக்ஸா பைட் ( exa byte )  =  1.024 பெட்டா பைட்ஸ்
ஒரு ஸெட்டா பைட் ( zetta byte )  =  1.024 எக்ஸா பைட்ஸ்
ஒரு யோட்டா பைட் ( yotta byte )  =  1.024 ஸெட்டா பைட்ஸ்
     கம்ப்யூட்டர் கணக்கில் ஒரு கிலோ என்பது 2 டு த பவர் ஆப் 10 ( 2^10 ).  அதனால்தான் 1.024 எனக் கிடைக்கிறது.  ஒரு சிலை இதை 10 டு த பவர் ஆப் 3 ( 10 ^ 3 ) என எடுத்துக் கொள்கிறார்கள்.  ட்ரைவ்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் கூட இது போல சயங்களில் எடுத்துக் கொள்வதால்தான், நமக்கு 1.024 க்குப் பதிலாக 1.000 கிடைக்கிறது.
     எக்சல்லில் செல்களைக் கட்டமிட :
     எக்சல் தொகுப்பில் டேட்டாக்களைக் கொடுத்து பணியாற்றிக் கொண்டிருக்கையில் குறிப்பிட்ட செல்கள் ஒரு குரூப்பாகக் கட்டம் கட்ட வேண்டும் என எண்ணுகிறீர்களா?  அப்போது நீங்கள் கட்டமிட விரும்பும் செல்களை ஹைலைட் செய்து தேர்ந்தெடுத்து பின் Ctrl + Shift + &  அழுத்துங்கள்.  அழகாகக் கட்டம் கட்டி காணப்படும்.  அதன்பின் கட்டமிட்ட செல்களில் பார்டரை எப்படி நீக்குவது என யோசிக்கிறீர்களா?  முன்பு போலவே கட்டமிட்ட செல்கலை ஹைலை செய்து தேர்ந்தெடுத்து பின் Ctrl + Shift + ஆகிய கீகளை அழுத்தவும்.  அனைத்து பார்டர்கள் நீக்கப்பட்டுவிடும்.
-- தினமலர்.  18-11-2014.
-- இதழ் உதவி : இரா. தாமோதரன்.  மருதூர் . வடலூர்.

Wednesday, December 7, 2016

புன்னகைப் பக்கம்!

*   "அந்தக்கால சாமியார்களுக்கும் இந்தக்கால சாமியார்களுக்கும் ஒரே ஒரு எழுத்துதான் வித்தியாசம்."
     "எப்படி?"
     "அந்தக்கால சாமியார்கள் பெண்களை தாயாகப் பார்த்தாங்க.  இந்தக்கால சாமியார்கள் தாயாக்கப் பார்க்குறாங்க."
*   "இதைப் பார்த்தீங்களா?  ரோட்டுல ஒரு நாய் செத்துக்கிடக்கு.  சிங்கப்பூர்ல இது நடக்குமா?"
    "நாய் செத்துட்டா சிங்கப்பூர்லயும் நடக்காதுடி!"
*   "நோட்டாவுக்கு விழுந்திருக்கற வாக்குகளைப் பார்த்ததும் தலைவர் என்ன சொன்னார்?"
    "அடுத்த முறை தேர்தல்லே நிக்கும்போது அதையே நம்ம கட்சி சின்னமா வச்சுடலாம்னு சொன்னார்!"
*   "சார்! நம்ம ஆபீஸ் பியூன் மயக்கம் போட்டு விழுந்துட்டான்."
    "தண்ணி அடிச்சுப் பார்த்தீங்களா?"
    "ஏற்கனவே தண்ணி ய்டிச்சுத்தான் விழுந்திருக்கான்!"
*   "ஹலோ இன்ஸ்பெக்டர்!  சோமநகர் ஏழாவது தீருவுல விபசாரம் நடக்குது.  உடனே வர்றீங்களா?"
    "சீச்சீ... வைய்யா போனை.  நான் அந்த மாதிரியான ஆள் கிடையாது!"
-- குமுதம்.  4-6-2014.          

Tuesday, December 6, 2016

ஆர்யபட்டர் - வராகமிகிரர்

  உலகின் முதல் வான சாஸ்திர நிபுணர், குப்தர்கள் காலத்தில் வாழ்ந்த ஆர்யபட்டர் ஆவார்.  இவர்தான் முதலில் 'பஞ்சாங்கம்' கணித்து வெளியிட்டார்.  இவருடன் சமகாலத்தில் வாழ்ந்த வராகமிகிரரும் ஒரே அரசவையில் ஆஸ்தான வித்வான்களாகப் பதவி வகித்தார்கள்.  இருவருமே வான சாஸ்திரக் கலையில் உயர்ந்தவர்கள்.
     ஆறியபட்டர் பூமி உருண்டை என்றும் பூமி உட்பட சில கோள்கள் வான மண்டலத்தில் தன்னிச்சையாக ஒரு குறிப்பிட்ட நியமத்துடன் வலம் வந்துகொண்டே இருக்கின்றன என்றும் அந்தக் காலத்திலேயே கண்டரிந்து கூறியவர்.  இவர், தான் கண்ட உண்மைகளை வரிசைப்படுத்தி
     வாரம் ( கிழமைகள் ) = 7
     திதிகள் ( 15 + 15 ) = 30
     நட்சத்திரங்கள் = 27
    யோகம் = 27
    கர்ணம் = 11
    என்ற ஐந்து விதமான அங்கங்களின் கணிதம்,  அன்றாட நடைமுறை ஆகியவர்றை விளக்கும் வகையில் ஆண்டுதோறும் பஞ்சாங்கங்களைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.  அந்நூலில் ஒரு நாளில் விளங்கும் மேற்கண்ட பஞ்ச அங்கங்களைத் தெளிவாக வெளியிட்ட காரணத்தல்தான் அதற்குப் பஞ்சாங்கம் எனப்பெயர் வந்தது.
--  ( ஜோதிடம் தெளிவோம் )  பகுதியில்...
-- ஜோதிட ரத்னா மன்னை ஸ்ரீமதி வி. அகிலாண்டேஸ்வரி ஐயர்.
--  'தி இந்து' நாளிதழ்.  பெண் இன்று . ஞாயிறு , நவம்பர் 16, 2014.   

Monday, December 5, 2016

இளம்பெண் எலும்பு கண்டுபிடிப்பு

13 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இளம்பெண் எலும்பு கண்டுபிடிப்பு.
     தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்சிகோவின் யுகாடன் தீபகற்ப பகுதி குகையில் இருந்து 13 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இளம்பெண்ணின் கடைவாய் பல் மற்றும் விலா எலும்லின் சில பகுதிகள் கிடைத்துள்ளன.
      கடைவாய் பல் மற்றும் விலா எலும்லின் சில பகுதிகள், 13 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இளம்பெண்ணின் எலும்புக்கூட்டில் சிதற்யவையாக இருக்கலாம்.  அந்தப் பெண், இப்பகுதியை கடந்து சென்றபோது, தவறி குகையில் விழுந்து இறந்திருக்கக்கூடும்.  இந்த எலும்புக்கூடுக்கு, 'நையா' என்று பெயரிடப்படுள்ளது.
      கடந்த 2007ல்,  இந்த குகையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட எலும்புகளில் இருந்து, இந்தப் பெண்ணின் எலும்புக்கூட்டை பிரித்தெடுக்கும் முயர்சியை துவக்கியுள்ளோம்.  பல ஆண்டுகளுக்கு முன், ஆசியாவில் இருந்து அமெரிக்காவுக்கு பாலம் அமைத்து, அதன் வழியாக மக்கள் குடியேறியதற்கு, இந்த எலும்புக்கூடு ஆதாரமாக உள்ளது எண தொல்லியல் துறை ஆய்வாளர் பிலர் லூனா கூறினார்.
--  தினமலர்.  சென்னை. ஞாயிறு, 25-05-2014.  

Sunday, December 4, 2016

பறக்கும் பைக்

   உலகின் முதல் பறக்கும் பைக், அமெரிக்காவின், 'ஏரோ எக்ஸ்'  நிறுவனம்,வரும் 2017ல் அறிமுகப்படுத்த உள்ளது.  'ஏர் பேக்ஸ்' பொருத்தப்பட்ட , இந்த பைக்கில் இரண்டு பேர் பயணம் செய்யலாம்.  மணிக்கு, 72 கி.மீ., வேகத்தில், 10 அடி உயரத்தில், இது பறக்கக்கூடியது.
     'ஏரோ எக்ஸ் ஹோவர்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பைக், செங்குத்தாக பறக்கவும், இறங்கவும் செய்யும்.
      டீசலில் இயங்கும் இந்த பைக்கின் எடை , 356 கிலோ;  140 கிலோ எடையுடன் பறக்கக்கூடியது.  இதன் உடல் பகுதி கார்பன் பைபரால் உருவாக்கப்பட்டுள்ளது.  ஒரு முறை எரிபொருளை நிரப்பனால், 75 நிமிடங்கள் பறக்கும்;  இந்த பைக்கின் விலை, 51 லட்சம்.
      இதை வாங்க விரும்புபவர்கள், 2.93 லட்ச ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.  பைக்கை பெறும் போது இந்த தொகை திரும்ப வழங்கப்படும்.  முன்பதிவு செய்தவர்களுக்கு, நான்கு வார பயிற்சி வழங்கப்படும் என்றும், இந்த பைக் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
-- தினமலர்.  சென்னை. ஞாயிறு, 25-05-2014.  

Saturday, December 3, 2016

ஒரு வீட்டுக்குள்ளே....

ஒரு வீட்டுக்குள்ளே இவ்வளவு விஷயம் இருக்குது !
     அந்தக்காலத்தில் ஒரு வீட்டை வைத்தே வாழ்க்கை பாடம் நடத்தினர்.  படி, நடை, கூடம், முற்றம், வெளி என பல பகுதிகள் வீட்டுக்குள் இருக்கும்.  முதலில் வாழ்வில் நல்லது எது கெட்டது எது என்பதை தெரிந்து கொள்ள படிக்க வேண்டும்.  படிப்படியாக வாழ்வில் ஏறுவதற்கு படிக்கட்டும்,  படிப்பும் ஒருவனுக்கு துணை செய்கிறது.  படியில் ஏறினால் வருவது நடை ( வீட்டு வாசல் ).  படித்ததைப் பின்பற்றி மனிதன் அதன்படி நடக்க வேண்டும்.  நடையின் முடிவில் கூடம் ( ஹால் ) வரும்.  எல்லோரும் ஒன்று கூடும் இடம் கூடம்.  நல்வழியில் நடப்பவர்கள் எல்லாம் சமுதாயத்தில் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்.  இதையே,  'சத்சங்கம், நல்லார் இணக்கம்'  என்று சொல்வார்கள்.  கூடத்திற்கு அடுத்தது முற்றம்.  வாழ்வில் லட்சியம் முற்றுப் பெறுவது போல வீடும் முற்றத்தில் முடிவுறும்.  அடுத்தது கொல்லைப்புறம் என்னும் வெளிப்பகுதி.  இறுதியில் மனிதன் கடவுள் என்னும் பெரு வெளியில் கலந்து விடுகிறான்.
--  தினமலர் ஆன்மிக மலர். கோவை பதிப்பு . நவம்பர் 4, 2014  இதழுடன் இணைப்பு.
-- இதழ் உதவி :  K. கல்யாணம்,  சிறுமுகை ( கோவை ).  

Friday, December 2, 2016

முத்தம் - பாக்டீரியா

10 நொடி முத்ததில் 8 கோடி பாக்டீரியா ஆய்வில் தகவல்.
மனிதனின் வாயிலும், உமிழ் நீரிலும் 700 வகையான பாக்டீரியாக்கள் ( நுண்ணுயிர்கள் ) இருக்கின்றன. இந்நிலையில், உதட்டில் முத்தமிடும்போது, இந்த பாக்டீரியாக்கள் பிறருக்கு பரவ வாய்ப்பு மிகவும் அதிகம். எந்த அளவுக்கு இந்த பாக்டீரியாக்கள் முத்ததின் மூலம் பரவுகின்றன என்பதை அறிய, 21 தம்பதிகளை தேர்ந்தெடுத்து, நாளொன்றுக்கு அவர்கள் எத்தனை முறை முத்தத்தை பரிமாறிக்கொள்கின்றனர்; என்னளவு நேரம் முத்தமிடுகின்றனர் போன்ற கேள்விகள் அவர்களிடம் கேட்கப்பட்டன. பின்னர், அவர்கள் முத்தமிடுவதற்கு முன்பும், 10 நொடிகள் முத்தமிட்ட பின்பும் நாக்கிலும், உமிழ்நீரிலும் இருக்கும் பாக்டீரியாக்களின் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்தனர்.
இதில், ஒருவரின் வாயிலிருந்து மற்றவருக்கு 8 கோடி பாக்டீரியாக்கள் செல்வதாக தெரியவந்துள்ளது. முத்தமிட்டுக் கொள்பவர்கள் தங்கள் வாயை சுத்தமாக பேணுவதன் மூலம் இதுபோன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் பரவுவதை குறைக்க முடியும் என்று, நெதர்லாந்து டிஎன்ஓ அறிவியல் ஆய்வி மையத்தின் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
-- 'தி இந்து' நாளிதழ். செவ்வாய், நவம்பர் 18, 2014.

Thursday, December 1, 2016

மாயாஜால சேலை

மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை ஒரு நாள் காவிரிபுராணம் படித்துக் கொண்டிருந்தார். அப்போது, தெருவில் சென்ற ஒரு துறவி, "அத்தினத்துக்கும் ஓட்டை கைக்கும் ஆயிரம் காதம். ஆனாலும் நடக்குது சேலை வியாபாரம்" என்று பாடிக் கொண்டே சென்றார். பண்டிதரான வித்வானுக்கு அந்த பாட்டின் பொருள் புரியவில்லை. துறவியை அழைத்து விளக்கம் கேட்டார். "அர்த்தம் சொல்லணுமா சாமி! அஸ்தினாபுரம் என்னும் சொல்லே 'அத்தினம்' என சுருங்கி விட்டது. 'ஓட்டை கை' என்பது துவாரகை. 'துவாரம்' என்பதற்கு 'ஓட்டை' என்றும் பொருளுண்டு. அஸ்தினாபுரம் அரண்மனியில் திரவுபதியின் துயிலை உரித்தபோது, நெடுந்தொலைவில் துவாரகையில் இருந்தாலும், கிருஷ்ணர் சேலையைக் கொடுத்து மானத்தைக் காத்தார். மாயாஜால கண்ணன் அவளுக்கு சேலை அளித்ததையே சேலை வியாபாரம்" என்று பாடியதாக தெரிவித்தார். விளகம் கேட்ட வித்வான் வியந்து போனார்.
-- தினமலர் ஆன்மிக மலர். கோவை பதிப்பு . நவம்பர் 4, 2014 இதழுடன் இணைப்பு.
-- இதழ் உதவி : K. கல்யாணம், சிறுமுகை ( கோவை ).

Wednesday, November 30, 2016

வேதம் -- ஜோதிடம்

வேதபுருஷனின் ஆறு அங்கங்கள்:
1. சிக்ஷா என்பது நாசி என்றும்
2. கல்பம் என்பது கரங்கள் என்றும்
3. வியாகரணம் என்பது வாக்கு என்றும்
4. நிருத்தம் என்பது செவி என்றும்
5. சந்தஸ் என்பது பாதம் என்றும்
6. ஜோதிடம் என்பது நேத்திரம் ( கண்கள் ) என்றும் கூறப்படுகின்றது.
வேதத்தின் கண்கள் என்று கூறப்படுகின்ற ஜோதிடம்,
ரிக்வேதத்தில் 'ஆர்ச்ச' என்றும்
யஜுர் வேதத்தில் 'ஜ்யோதிஷம்' என்றும்
அதர்வண வேதத்தில் 'ஆதர்வண' என்றும் குறிப்பிடப்படுகிறது.
சாம வேதத்தின் 'ஜோதிடம்' இப்போது நம்மிடம் இல்லை.
ஜோதிட சாஸ்திரத்தை சிவபெருமானாகப்பட்டவர் உமா மகேஸ்வரியாகிய பார்வதிக்கு உபதேசித்தும், பார்வதி சுப்ரமண்ய ஸ்வாமிக்கும், சுரமண்யர் குரு முனிக்கும், அவர் தனது சிஷ்யர்களுக்கும் உரைத்தார் என்று சொல்லப்படுகிறது.
மேலும் ஜோதிடக்கலையானது
1. அத்திரி 2. ஆங்கிரஸ 3. வசிஷ்டர் 4. நாரதர் 5. கஸ்யபர் 6. அகஸ்தியர் 7. போகர் 8. புலிப்பாணி 9. வியாசர் 10 . பராசரர்
11. ரோமர் 12. கர்கர் 13. புகர் 14. சௌனகர் 15. கௌசிகர் 16. ஜனகர் 17. நந்தி 18. ஜெயமுனி ஆகிய 18 சிதர்களாலும் வழிவழியே வளர்க்கப்பட்டுவந்தது.
-- ( ஜோதிடம் தெளிவோம் ) பகுதியில்...
-- ஜோதிட ரத்னா மன்னை ஸ்ரீமதி வி. அகிலாண்டேஸ்வரி ஐயர்.
-- 'தி இந்து' நாளிதழ். பெண் இன்று . ஞாயிறு , நவம்பர் 16, 2014.

Tuesday, November 29, 2016

இறப்பு தேதி

உங்களின் இறப்பு தேதி தெரிய வேண்டுமா?
வாஷிங்டன், நவ, 4 -
ஒருவரின் உயரம், எடை, வாழ்க்கைமுறை போன்றவற்றின் மூலமாக, அவரின் இறப்பு தேதியை அறிந்து கொள்ளும் வசதியுடைய செயலியை ( ஆப்ஸ் ), அமெரிகாவில் உருவாக்கியுள்ளனர்.
'டெட்லைன்' என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலியில், ஒருவரின் உயரம், எடை, ரத்த அழுத்தம், தூக்கம், உடல் தொடர்பான நடவடிக்கைகளை பதிவு செய்தால், அவரின் இறப்பு தேதியை மதிப்பீடு செய்து தெரிந்து கொள்ளும் மென்பொருள் வசதி வடிவமைக்கப்பட்டு உள்ளது.
'ஐ-போன்'களில் உள்ள ஹெல்த் கிட் மூலமாக இந்த வசதியை, அமெரிக்காவில் உள்ளவர்கள் பெறமுடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-- தினமலர் சென்னை. செவ்வாய், 4-11-2014
-- இதழ் உதவி : S.B.மாதவன், விருகம்பாக்கம். சென்னை. 92.

Monday, November 28, 2016


கூகுள்

கூகுள் குரல் வழி தேடலில் தமிழ் மொழி.
இணைய தள தேடு பொறியில் முன்னணியில் உள்ள, கூகுள் நிறுவனம், குரல் வழி மூலமாக, தகவல்களை தேடும் வசதியையும் அறிமுகப்படுத்தி உள்ளது, ஆங்கிலம் உள்ளிட்ட சில மொழிகளில், இந்த வசதி ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், இந்தியாவில் இணையதளம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, அதிகரித்து வருவதை அடுத்து, அவர்களுக்கு உதவும் வகையில், இந்தி மொழி மூலமாக குரல் வழி தேடுதல் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.
கூகுள் இந்தியா நிறுவனத்தின், மேலாண்மை இயக்குனர் ராஜன் ஆனந்தன் கூறியதாவது :
இந்தியாவில் 20 கோடி பேர் இணையத்தை பயன்படுதுகின்றனர். ஒவ்வொரு மாதமும், 50 லட்சம் பேர், புதிதாக இந்த பட்டியலில் இணைகின்றனர்.
இவர்களுக்கு உதவுவதற்காகவே, தற்போது, குரல் வழி தேடுதலில் இந்தி மொழியை இணைத்து உள்ளோம். அடுத்தகட்டமாக தமிழ், மராத்தி ஆகிய மொழிகளையும் இணைக்கும் திட்டம் உள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.
-- தினமலர் சென்னை. செவ்வாய், 4-11-2014
-- இதழ் உதவி : S.B.மாதவன், விருகம்பாக்கம். சென்னை. 92.

Sunday, November 27, 2016

அந்தக் கால கணக்கு

ஏற்கனவே புழங்கிட்டு இருந்த 'பனம்' 'துட்டு' 'காசு' 'தம்பிடி' 'சல்லி'ங்கிற சிறு நாணயங்கள் காலப்போக்கில் வட இந்திய அரசர்
ஷெர்ஷா சூரி 1540 -ல் அறிவித்த அந்தக் கால ரூபாயோடு இணைந்தன.
அந்தக் கால 1 ரூபாய்க்கு 192 தம்பிடிகள். 12 தம்பிடி = 1 அணா, 16 அனா = 1 ரூபாய்.
ஒரு அணா -- ஆறுபைசா
ஒரு பணம் -- ரெண்டு அணா
ஒரு அணா -- மூணு துட்டு
ஒரு துட்டு -- ரெண்டு பைசா
ஒரு சல்லி -- கால் துட்டு
காலணா -- முக்கால் துட்டு
அரையணா -- ஒன்றரைத் துட்டு
ஒரு அணா -- நான்கு காலணா ( அ ) மாகாணி ரூபாய்
இரண்டு அணா -- அரைக்கால் ரூபாய்
நாலணா -- கால் ரூபாய்
எட்டு அணா -- அரை ரூபாய்
கழஞ்சு -- ஒரு பொற்காசு ( வராகன் )
வராகன் எடை -- 3.63 கிராம்
சக்கரம் -- ஒரு வெள்ளிக் காசு
பதினாறு சக்கரம் -- ஒரு வராகன்
சக்கரம் -- பதினாறு காசு ( செப்பு ) என மக்கள் பலவிதமாக நாணயக் கணக்கை கையாண்டனர். இன்று நாம் கையாளும் ரூபாய் கணக்கு 1957 முதல் நடைமுறைக்கு வந்தது.
--- வெற்றிக்கொடி.
-- 'தி இந்து' நாளிதழ். திங்கள், நவம்பர் 17, 2014.

Saturday, November 26, 2016

'டெங்கு டேஞ்சர்'

கொலைகார கொசுக்கள்.
டெங்கு... பத்து ஆண்டுகளுக்கு முன்பு தலைநகர் தில்லியை புரட்டிப் போட்ட இந்த காய்ச்சலுக்கு வைரஸ் கிருமிகள்தான் அடிப்படை. அதன் பின்னர் நாடு முழுவதும் அவை ஏற்படுத்தி வரும் பாதிப்பின் தாக்கம் 'பகீர்' ரகம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரையும் பாரபட்சமின்றி பதம் பார்க்கும் டெங்குவின் தாய் வீடு கொசுக்கள்...
இந்தக் கொலைகார கொசுக்கள் நான்கு வகை. அவற்றில் 'ஏடிஸ் இஜிப்டை' என்கிற கொசுதான் டெங்கு பரவக் காரணம். புலியின் உடலில் தெரியும் வெள்ளை நிறப் புள்ளிகள் மாதிரி, 'ஏடிஸ்' வகை கொசுக்களின் உடல் மீதும் புள்ளிகள் இருக்கும். அதனால் இதற்கு 'டைகர் கொசு' (!) என்கிற செல்லப் பெயரும் உண்டு.
பெரும்பாலும் மாலை நேரத்தில் வீடுகளுக்குப் படையெடுக்கும் குணம் கொசுக்களுக்கு உண்டு. என்றாலும், ஏடிஸ் காலை நேரத்தில் ரீங்கார மிட்டபடி உலவும். அப்போது மனிதர்களைக் கடிக்கும். அடுத்த இரண்டு நாட்களில் பாதிப்பின் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும்.
கடித்த இடத்தில் சிவப்பு நிற தடிப்புகள் உருவாகும். தொடர்ந்து தேய்க்கும் போது அந்த இடம் வீங்கும். திடீரென காய்ச்சல் வரும். காய்ச்சல் 103 டிகிரி வரை உயரும். பாதிக்கப்பட்டவர் சுருண்டு படுத்து விடுவார். தலைவலியோடு சுரப்பிகள் சுரப்பதில் சுணக்கம் வரும்.
விழிகள் அசையும் போது கண்களின் உள்ளே வலி வரும். பொதுவாக, இது மற்ற நோய் பாதிப்பின் போது வருவதில்லை. பாதிக்கப்பட்டவர் வாந்தி எடுப்பதால் உடலில் இருக்கும் நீர்ச் சத்து விரைவாக வெளியேறும். நோயாளி துவண்டு போவார்.
இதனால் உயிருக்கு ஆபத்து வருமா? என்பது குறித்து மருத்துவத் துறை வட்டாரத்தில் கேட்டபோது, ரத்தக் குழாய்களிலிருந்து வெளியேறும் ரத்தம் அதன் சுவர்களுக்கு வெளியே சென்று தங்கிவிடும். இதனால் ரத்த ஓட்டம் தடைபட்டு முக்கியமான உறுப்புகள் செயலிழக்கும். ஏடிஸ் கொசுக்கள் உருவாகாமல் கட்டுப்படுத்தினாலே டெங்குவை எளிதில் தடுத்துவிட முடியும். நோய் பாதித்தவர்களுக்கு சாதாரண 'பாராசிட்டமால்' மாத்திரைகள் கொடுத்தால் போதும் காய்ச்சல் குறைந்துவிடும் என்கின்றனர்.
-- எஸ்.அன்வர்.
-- குமுதம் வார இதழ். 13-11-2014.
-- இதழ் உதவி : P.சம்பத் ஐயர், திருநள்ளாறு.

Friday, November 25, 2016

தாமோதர மாதம்.

பொதுவாக கிருஷ்ண பக்தர்கள், வைணவ பாரம்பரியத்தின் அடிப்படையில் அனைது மாதங்களையும் கிருஷ்ணரின் பெய்ரைக் கொண்டே அழைக்கின்றனர். அக்டோபர், நவம்பர் ., 'தாமோதர மாதம்' என்று அழைக்கப்படுகிறது.
தாமோதரர் என்றால் கிருஷ்ணரை குறிக்கும். 'தாம' என்றால் கயிறு என்றும் , 'உதர' என்றால் வயிறு என்றும் அர்த்தம். குழந்தை கண்ணனை தாய் யசோதை, கயிற்றால் உரலில் கட்டியதால், அவருக்கு அந்த திருநாமம் வந்தது.
தாமோதர மாதங்களில் கிருஷ்ணரின் புகழை எடுத்துச் சொல்வதன் மூலம், இறைவனின் திருவடியில், மோட்ச நிலை அடையலாம் என்பர்.
-- தினமலர். ஞாயிறு. நவம்பர். 2014. கோவை பதிப்பு.

Thursday, November 24, 2016

அக்னிதீர்த்தம்.

ரிக் வேதத்தில், அக்னி வழிபாடு பற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ளது. தூய்மையின் அடையாளமான அக்னியை சாட்சியாக வைத்து புதுமண மக்களுக்கு சட்ங்கு நடத்தப்படுகிறது. எந்த கடவுளுக்கு யாகம், ஹோமம் நடந்தாலும் அதை அந்தக் கடவுளிடம் சேர்ப்பவர் இவரே. புனிதமானது மட்டுமில்லாமல், தன்னைத் தீண்டியவர் யாராக இருந்தாலும் அவர்களையும் தன் வசமாக்கும் சக்தி இவருக்கு உண்டு. கற்பு நெறி தவறாத பெண்களை அக்னியின் பெயரோடு சேர்த்து 'கற்புக்கனல்' என்று குறிப்பிடுவர். கனல் என்றால் நெருப்பு. அசோகவனத்தில் இருந்து வந்தபோது, கற்புக்கரசியான சீதையை அக்னி சூழ வேண்டி நேர்ந்தது. இதனால் தனக்கு பாவம் ஏற்பட்டதாக கருதிய அக்னி, ராமேஸ்வரம் கடலில் நீராடினார். இதனால், இக்கடலுக்கு 'அக்னிதீர்த்தம்' என்று பெயர் ஏற்பட்டது. இங்கு நீராடினால் எத்தகைய கொடிய பாவமும் தீரும் என்பது ஐதீகம்.
-- பக்திமாலை. கோவை பதிப்பு .
-- தினமலர் ஆன்மிக மலர். நவம்பர் 4, 2014 இதழுடன் இணைப்பு.
-- இதழ் உதவி : K. கல்யாணம், சிறுமுகை ( கோவை ).

Wednesday, November 23, 2016

படியளக்கும் பரமசிவம்.

சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்த அன்னத்தை, எறும்பு போன்ற ஜீவராசிகள் தாமாகவே வந்து எடுத்துக் கொள்ளும். பின், அந்த அன்னத்தின் ஒரு பகுதியை மேள தாளத்துடன் அப்பகுதியிலுள்ள நீர் நிலைகளுக்கு கொண்டு சென்று, அதில் கரைப்பர். இவ்வேளையில், நீரில் வாழும் ஜீவராசிகளுக்கும் சிவனுக்கு படைத்த உணவு கிடைக்கும். அன்னாபிஷேக அன்னத்தில் தயிர்
சேர்த்து கலந்து பக்தர்களுக்கு பிரசாதமாகத் தருவர். எல்லா உயிர்களுக்கும் பரமசிவனே படியளப்பதாக ஐதீகம். அன்று தரிசிப்பவர்களுக்கு உணவுக்கு குறைவிருக்காது.
சிந்தாமல் சாப்பிடணும்!
இறைவனே அன்னத்தின் வடிவமாக இருக்கிறார். எனவே, சாப்பிடும் உணவை தரையில் சிந்தக்கூடாது. இதனால், பெரியவர்கள் குழந்தைகளைச் சிறுவயது முதலே அரிசி, உணவைக் கீழே சிந்தாமல் சாப்பிடுவதற்கு பழக்குவர். அன்னத்தை வீண்டிப்பது, இறைவனையே அவமதிப்பது போலாகும். உணவின் பெருமையை 'அன்னம் பரப்பிரம்மம் சொரூபம்' என்ற ஸ்லோகம் உனர்த்துகிறது. 'உண்ணும் உணவு கடவுளின் வடிவம்' என்பது இதன் பொருள். நல்ல உணவின் மூலம் நல்ல உணர்வும் உண்டாகிறது.
-- பக்திமாலை. கோவை பதிப்பு .
-- தினமலர் ஆன்மிக மலர். நவம்பர் 4, 2014 இதழுடன் இணைப்பு.
-- இதழ் உதவி : K. கல்யாணம், சிறுமுகை ( கோவை ).

Tuesday, November 22, 2016

வெளிநாட்டுக் கோயில்கள்.

டேடன் இந்துக் கோயில், ஓஹியோ.
ஆலய வரலாறு : ஓஹியோ மாகாணத்தின் டேடன் பகுதியில் அமைந்துள்ளது இந்த அழகிய இந்து ஆலயம். இக்கோயில் டேடன் பகுதியில் வாழ்ந்த இந்து சமூக மக்களால் 1976ம் ஆண்டு இந்து மதத்தின் அடையாளமாக கட்டப்பட்டதாகும். இக்கோயிலில் 2 புரோகிதர்களைக் கொண்டு இந்து சமய வழிபாட்டு முறைகளின்படி பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.
இக்கோயிலில் ராமர், லட்சுமணர், சீதை திருவுருவங்கள் உள்ளன. இது தவிர சில தெய்வங்களுக்கும் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது லாப நோக்கமற்ற அமைப்பாக பதிவு செய்யப்பட்டது. இவ்வாலயத்தில் 2013ம் ஆண்டு மே 12ம் தேதி மகாகும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
ஆலய நேரம் : திங்கள் - வெள்ளி. காலை 9 மணி - 11 மணி.
மாலை 5 மணி - 8 மணி.
சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில்,
காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை ஆலயம் திறந்திருக்கும்.
ஆலய முகவரி :
Hindu Temple of Dayton
2615 Temple Lane
Beavercreek, Oh 45431.
தொலைப்பேசி : ( 937 ) 429 4455.
இணையதளம் : http : // daytontemple.com/
-- தினமலர் பக்திமலர். 13 -11- 2014.

Monday, November 21, 2016

ஜவஹர்லால் நேரு

ஜவஹர்லால் நேருவின் 125வது பிறந்த நாள் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த வேளையில் தி.மு.க.தலைவர் கருணாநிதி, 44 ஆண்டுகளுக்கு முன், 1970ம் ஆண்டு நவம்பர் 14ம் தேதி சென்னையில் 'நேரு கண்ட ஜனநாயகம்' என்ற தலைப்பில் இயற்றிப் படித்த கவிதை.
கவிஞர்கள் எஸ்.டி.சோமசுந்திரம், கொத்தமங்கலம் சுப்பு, முருகு சுந்தரம், அப்துல்ரகுமான், கண்ணதாசன் ஆகியோர் கலந்துகொண்ட கவியரங்கில் தலைமை வகித்த படித்த கவிதை வரிகளில் இருந்து ...
'புன்னை மரம் நிழல் விரிக்கத் - தமிழ்
அன்னை மடி சுகம் அளிக்க
சென்னை நகர் ஒளி தெளிக்க
முன்னை இருள் விலகுவதற்கு
முயல்கின்ற தமிழ் அரசு
முதுபெரியோன் காந்தியாரின்
மூத்த பிள்ளை நேருவுக்கு
முதமிழால் கவி தொடுக்கும்.
பணமலைக்கிடையே பிறந்தார்
எனினும் ஏழையை அணைக்கும்
குணமலையாய் திகழ்ந்தார் என்போம்!
நீதிக்கு எதிரானவற்றையெல்லாம்
நேர் நின்று எதிர்த்ததாலே நேருவானார். இந்திய
நீள் எல்லைக்கோடு தன்னைப் பெரும்பகைவர்
கடந்த போது என்ன
நேருமோ என்றெங்கி இருந்த மக்கள் நெஞ்சின்
துயர் துடைத்து, எதுவும்
நேராது நான் இருக்கின்றேன் எனச் சொல்லி
நேருவானார்.
கண்ணிய அரசியலைப் போற்றிடும் நாட்டில்
கண் நிகர் நேருவைப் புகழ்வோம் பாட்டில்!
-- தினமலர். 16-11-2014.

Sunday, November 20, 2016

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்.

* வடுகநம்பியால் எழுதப்பட்ட ராமானுஜரின் வரலாறு... யதிராஜ வைபவம்.
* கூரத்தாழ்வானுக்கு பெற்றோர் இட்ட பெயர்.. .. திருமறுமார்பன்.
* ஆதிசேஷனின் அவதாரமாக அவதரித்த மகான் ... ராமானுஜர்.
* வைகுண்டத்தில் திருமாலுக்கு சேவை செய்பவர்கள் ... நித்தியசூரிகள்.
* பெருமாளின் படைக்கு தலைவராக இருப்பவர் ... விஷ்வக்சேனர்.
* அரபிக்கடல் ஓரத்தில் உள்ள பாடல் பெற்ற சிவத்தலம் ... திருக்கோகர்ணம் ( கர்நாடகா ).
* பாம்பன் சுவாமிகளின் சமாதிக் கோவில் உள்ள தலம் ... திருவான்மியூர் ( சென்னை ).
* சூரபத்மன் பயில் வடிவில் முருகனை பூஜித்த தலம் ... மயிலம் ( விழுப்புரம் ).
* திருஞானசம்பந்தர் பதிகம் பாடியதால் உயிர் பெற்றவள் ... பூம்பாவை.
* ஆரோக்கியத்துடன் வாழ அமுத கலசத்துடன் அருள்புரிபவர் ... தன்வந்திரி.
--- அர்ச்சனைப்பூக்கள். பக்திமாலை. கோவை பதிப்பு .
-- தினமலர் ஆன்மிக மலர். நவம்பர் 4, 2014 இதழுடன் இணைப்பு.
-- இதழ் உதவி : K. கல்யாணம், சிறுமுகை ( கோவை ).

Saturday, November 19, 2016

தத்துவமயமான தாமோதரன்!

நாராயணனின் திருவுருவமே தத்துவமயமானது. பெருமாளுடைய திருமார்பை கவுஸ்துப மணி அலங்கரிக்கிறது. இவர் ஜெகத்தின் ஆத்ம சொரூபமாக இருப்பவர் என்பதை இது காட்டுகிறது. மார்பில் திருமறு இருக்கிறது. இதை 'ஸ்ரீவஸ்தம்' என்பார்கள். பிரதானமாக இருக்கக் கூடிய மூல பிரக்ருதியை காட்டும் அடையாளம் இது.
பெருமாளின் கையில் இருக்கும் சங்கு, ஐம்பூத தத்துவங்களுக்கு காரணமாக இருக்கக் கூடிய தாமச அகங்கார தத்துவத்தை உணர்த்துகிறது.
அவர் கையில் இருக்கும் சாரங்கம் என்னும் வில் இந்திரியங்களுக்கு காரணமாக இருக்கும் ராஜ அகங்கார தத்துவத்தைக் காட்டுகிறது. நாராயணனின் கையில் உள்ள சக்கரம், வாயுவை விட வேகமாகச் செல்லும் மனஸ் என்னும் தத்துவத்தை உணர்த்துகிறது.
அவர் முத்து, மாணிக்கம், மரகதம், நீலம், வைரம் என்னும் பஞ்ச ரத்தினங்களான வைஜயந்தி மாலையை அணிந்திருக்கிறார்.
இது பஞ்சபூத தத்துவத்தையும், பஞ்ச தன்மாத்திரை தத்துவத்தையும் காட்டக் கூடியது. ஞானேந்திரியங்களையும், தந்தேமந்திரியங்களையும் அவர் கைகளில் உள்ள பாணங்கள் காட்டுகின்றன.
உறையில் இடப்பட்டு அவர் இடுப்பை அலங்கரிக்கும் கத்தியானது அவித்யா தத்துவத்தால் மூடப்பட்டு உள்ள வித்யாமயமான ஞானத்தைக் காட்டுகிறது. இப்படி அவர் எல்லாமாக இருக்கிறார். தத்துவமயமானவர் என்கிறது விஷ்ணு புராணம்.
-- தினமலர் .பக்திமலர்.13-11-2014.

Friday, November 18, 2016

ராக்கெட்டும் பஞ்சாங்கமும்

அமெரிக்காவில் விஞ்ஞான ஆய்வு மையத்தில் இருந்து கொண்டு ராக்கெட் ஏவுபவன்கூட நம்மூர் பஞ்சாங்கக் கணக்குகளைத்தான் பின்பற்றுகிறான். பூமியில் இருக்கும் வரைதான் இரவு, பகல் எல்லாம். பூமியில் தான் கடிகாரங்களுக்கு வேலை இருக்கும். வான மண்டலத்தைக் கடந்துவிட்டால் இரவேது பகலேது? அந்த நிலையில் பூமியிலிருந்து ராக்கெட் எந்த இடத்தில் எந்த டிகிரியில் இருக்கிறது ... ராக்கெட்டிலிருந்து எந்தெந்தக் கிரகம் எந்தெந்த டிகிரியில் இருக்கின்றன என்ற கணக்குதான் நேரம் அறிய துணை செய்யும். விஞ்ஞான பூர்வமான இந்த விஷயங்களை நம்மூர் ஜோதிடக்காரன் காவிரிக் கரையில் உள்ள ஒரு குக்கிராமத்தில் இருந்து கொண்டு சோழிகளை உருட்டியே சொல்லி விடுகிறான் என்பது ஆச்சரியத்திற்குரிய விஷயம்.
-- தினமலர் .பக்திமலர்.13-11-2014.

Thursday, November 17, 2016

f இணைய வெளியிடையே t

* பொறுத்தார் பூமி ஆள்வார். குனிந்தார் தமிழகம் ஆள்வார்.
g for guru@ twitter.com
* குடித்து விட்டு வீட்டிற்கு வந்தான் அவன்... ஆனால் தள்லாடியது அவன் குடும்பம் .
mil45v @twitter.com
* எங்கே மடிய வேண்டும் எனத்தெரிந்தே வைத்திருக்கிறது உன் இடை.
thalabathe@twitter.com
* ஊழல்வாதிகளுக்கு தண்டனை அளித்தால் ஒப்பாரி வைக்க ஆளிருக்கிறது. மீன் பிடித்ததற்காக தண்டனை கொடுத்தால்
ஏறிட்டுப் பார்க்க கூட நாதியில்லை.
udanpirappe@twitter.com
* ஒருவர் உங்களை வெறுக்க காரணம், உங்களை போல ஆகமுடியவில்லையே என்பதாக கூட இருக்கலாம்.
vignasuresh@twitter.com
* நாய் வளர்ப்பதை ஒரு கவுரவமா பார்க்கும் இந்த சமூகம், மரம் வளர்ப்பதில் பார்ப்பதில்லை.
karunaimalar@twitter.com
* பேசிக்கிட்டு இருக்கும் போதும் நடுவுல கொஞ்சம் திட்டுனா அது காதலி. திட்டிகிட்டு இருக்கும்போது நடுவுல கொஞ்சம்
பேசுனா அது மனைவி.
venkytwitts@twitter.com
* சுவிஸ் பேங்க்ல அக்கவுன்ட் வெச்சவன் வரிகூட கட்டமாட்டான். அவனை விட்டுருங்க. ஸ்டேட் பேங்க்ல அக்கவுன்ட்
வெச்சவங்கிட்ட வந்து இருபது இருபதா புடுங்குங்க.
su bass2@twitter.com
-- சண்டே ஸ்பெஷல்.
-- தினமலர் . 9 - 11 - 2014.

Wednesday, November 16, 2016

நம்ப முடிகிறதா?


* இசை ஒலித்தால் பூக்கள் வேகமாக வளரும்.
* உலகில் விற்பனை செய்யப்படும் மிகப்
பெரிய உணவு ஒட்டகம்.
* இரட்டையர் ஒட்டிப் பிறப்பது 2 லட்சம்
பிரசவங்களில் ஒரு முறைதான் நிகழ்கிறது.
* அமெரிக்காவில் ஒவ்வொரு 5 விநாடிகளுக்கும்
60 ஆயிரம் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகின்றன.
* சராசரி மனிதனால் 150 நபர்களை மட்டுமே நன்றாக நினைவில் வைத்திருக்க
முடியும்.
* ஹிட்லரை கொல்ல 42 முறை முயற்சிகள் நடந்துள்ளன. ஆனால், அவர் தற்கொலை செய்துகொண்டார்.
* முழுவதும் இரும்பால் செய்யப்பட்ட ஈபிள் கோபுரத்தின் மொத்த எடை பத்தாயிரம் டன்.
* சனி கிரகத்தின் வளையங்கள் பனியால் ஆனவை.
-- தொகுப்பு : மிது கார்த்தி.
--மாயாபஜார்.
-- 'தி இந்து' நாளிதழ். புதன், நவம்பர் 12, 2014.

Tuesday, November 15, 2016

பஞ்சபூதங்கள்.

மேற்கத்திய மரபில் ஐம்பூதங்கள் கிடையாது. ஆகாயம் நீங்கலாக, அங்கே நான்கு பூதங்கள்தான் ( எலிமன்ட்ஸ் - elements ). ஆகாயம் என்று அழைக்கப்படும் வெளியையும் ஒரு அடிப்படை இயற்கைப் பொருளாக வைத்திருப்பது இந்திய மரபின் சிறப்பு. பிரபஞ்சம் முதல் நம் உடல் வரை ஐம்பூதங்களின் சேர்க்கைதான் என்று இங்கே நம்பப்படுகிறது. பௌதிகம் என்ற சொல்லுக்கு ஐம்பூதங்களால் ஆனது என்பது பொருள். உயிரற்ற நமது உடலை பூதவுடல் என்று மரியாதையாகச் சொல்வதை இதனுடன் தொடர்புபடுத்திப் பார்க்கலாம். அதேபோல், பஞ்சதம் என்ற ஒரு சொல் மரணத்தைக் குறிக்க முன்பு பயன்பட்டிருக்கிறது. பஞ்ச பூதங்களும் பிரிந்து தனிதனியாவதால் மரணம் ஏற்படும் என்பது இதன் அடிப்படைப் பொருள். பஞ்சபூதங்களின் சேர்க்கை இயற்கையாக நடைபெற்றதேயொழிய கடவுளின் முயற்சியால் அல்ல என்று நம்பும் உலகாயதவாதத் தத்துவம்தான் பூதவாதம்.
-- ஆசைத்தம்பி. ( அறிவோம் நம் மொழியை ).
-- கருத்துப் பேழை.
-- 'தி இந்து' நாளிதழ். வெள்ளி, நவம்பர் 13, 2014.

Monday, November 14, 2016

வட்டாரச் சொல்

ஆள்காட்டிப் பறவையில் செம்மூக்கு ஆள்காட்டி ( Red - wattled lapwing ) என்றொரு வகை இருக்கிறது. இந்தப் பறவையை வேலூரை ஒட்டிய பகுதிகளில் 'தித்தித்தூ குருவி' என்று அழைப்பார்கள். வயல் வெளிகளிலும் திரிந்துகொண்டிருக்கும் இந்தப் பறவை ஆளரவம் கேட்டாலோ, ஆபத்து நேரிடுவதுபோல் தோன்றினாலோ 'தித்தித்தூ...தித்தித்தூ' என்று அலறியபடி அங்கு மிங்கும் பறந்துகொண்டிருக்கும். அந்தப் பறவையின் ஒலியை ஆங்கிலத்தில் 'டிட் ஹி டூ இட்' ( Did- he- do- it? ) 'அவனா செய்தான்?' என்று பொருள் வரும்படி ஒலிபெயர்ப்பு செய்வார்கள். அதனாலேயே அந்தப் பறவைக்கு ஆங்கிலத்தில் 'டிட்-ஹி-டூ-இட் பேர்ட்' என்ற பெயர் உண்டு. அதைப் போன்றே தமிழிலும் ஒரு பெயர் இருக்கிறது என்று அறிந்துகொண்டதில் பெருமகிழ்ச்சி!.
-- ஆசைத்தம்பி. ( அறிவோம் நம் மொழியை ).
-- கருத்துப் பேழை.
-- 'தி இந்து' நாளிதழ். வெள்ளி, நவம்பர் 13, 2014.

Sunday, November 13, 2016

நேரு.

சீரிய நெற்றி எங்கே சிவந்த நல் இதழ்கள் எங்கே
கூரிய விழிகள் எங்கே குறுநகை போனதெங்கே
நேரிய பார்வை எங்கே நிமிர்ந்தநன் நடைதானங்கே
நிலமெலாம் வணங்கும் தோற்றம் நெருப்பினில் வீழ்ந்ததிங்கே
ரோஜா மலரே ஏன் மலர்ந்தாய்?
எங்கள் ராஜா இல்லையே மார்பினில் சூட.
-- கவிஞர் கண்ணதாசன், நேரு இறந்தபோது எழுதிய இரங்கற்பாவிலிருந்து...
-- கருத்துப் பேழை.
-- 'தி இந்து' நாளிதழ். வெள்ளி, நவம்பர் 14, 2014.

Saturday, November 12, 2016

வேதங்கள்

வேதங்கள் இந்து சமயத்தின் அடிப்படை. இந்து சமயத்தின் பழக்க வழக்கங்கள், இயல்புகள், சடங்குகள், பரிகாரங்கள் இவற்றை விளக்கக்கூடிய அற்புத பொக்கிஷங்களாக வேதங்கள் விளங்குகின்றன.
சதுர் வேதங்கள்:
'வேதார்த்த பிரகாசிகா' என்ற நூலே முதன் முதலில் எழுத்து வடிவில் தோன்றிய வேத நூல். இது 14ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இதற்கு முன்பாக வேதங்கள் வாய்வழியே சொல்லி மனப்பாடம் செய்தே நினைவில் கொள்ளப்பட்டன.
ரிக் வேதம் :
வேதங்கள் சிந்து சமவெளியில் வாழ்ந்த ஆரியர்களால் உருவாக்கப்பட்டவை. ரிக் வேதமே காலத்தால் முற்பட்டது. இது கி,மு.1500 -க்கும் முன்பே உருவானது. காலம் கி.மு. 2200 முதல் கி.மு. 1600 வரை. ரிக் வேதத்தில் 10,000 பாடல்கள் பாடப்பட்டுள்ளன. ரிக்வேதிகள் இந்திரனையும், அக்னியையும் வழிபட்டுவந்தனர். மேய்ச்சல், விவசாயம், தச்சு வேலை, மண் வேலைகள், பருத்தி, கம்பளி நூற்றல், சிற்ப வேலைகள், அறுசுவை உணவுகள் ஆகியவற்றில் சிறந்து விளங்கினர்.
பிந்தைய வேதங்கள் :
யஜுர் வேதம் கி,மு.1400 முதல் கி.மு. 1000 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்தது. பிந்தைய காலத்தில் ஆரியர்கள் சிந்து சமவெளியை விட்டுக் கிழக்கு நோக்கி நகர்ந்துவிட்டனர். அதனால் பழக்கவழக்கங்களும், வாழ்வியல் நடைமுறைகளும், தெய்வ வழிபாடுகளும் மாறிவிட்டன. முதலில் இயற்கையை வணங்கியவர்கள் பிறகு சிவன், பிரம்மா, விஷ்ணுவை வழிபட்டனர்.
சாம வேதம் சடங்குகளின்போது இசைப்பதற்காக படைக்கப்பட்டது. இதிலிருந்துதான் இந்தைய இசை தோன்றியது.
அதர்வணம்தான் இறுதியான வேதம். இதுவும் சடங்குகளைப் பற்றியே பேசுகிறது. நல்லவை, அல்லவை ( மந்திரம், மாந்திரீகம் ) இரண்டையும் கொண்டுள்ளது.
வேதங்களின் நான்கு பாகங்கள்:
சம்ஹிதை என்பவை தொகுப்பு மந்திரங்களாக உள்ளன. இவை தெய்வங்களால் தரப்பட்ட பாடல்கள் என அழைக்கப்படுகின்றன.
பிரமாணங்கள் என்பவை உரை அல்லது சடங்குகளின் வழிமுறைகள் பற்றிக் கூறுகின்றன.
ஆரண்யகம் என்பவை காட்டில் வாழ்கின்ற முனிவர்கள் நமக்குத் தந்த உரைகள்.
வேதத்தில் கூறப்பட்ட தத்துவ உரைகள் மற்றும் அவற்றுக்கான விளக்கங்கள், தத்துவ விவாதங்கள் ஆகியவை வேதத்தின் அந்தமாக வருவதை 'வேதாந்தம்' என்று கூறுகிறார்கள்.
வேதத்தின் அங்கங்கள் :
சிக்ஷா, சந்தஸ், நிருத்தம், வியாகரணம், கல்பம், ஜொதிஷம் ஆகிய ஆறும் வேதத்தின் அங்கங்களாகும். இதில் ஜோதிஷம் வேதத்தின் கண்கள் என்று சொல்லப்படுகிறது. நாம் பின்பற்ற வேண்டிய நல்ல விஷயங்களைத் தெரிந்துகொள்ள ஜோதிடம் முக்கியக் காரணியாக விளங்குகிறது.
-- (ஜோதிடம் தெளிவோம் ) ஜோதிட ரத்னா வி. அகிலாண்டேஸ்வரி.
-- 'தி இந்து' நாளிதழ். பெண் இன்று இணைப்பு. ஞாயிறு, நவம்பர் 9, 2014.

Friday, November 11, 2016

கண்ணீர் வராத வெங்காயம்.

* ஊறுகாய் பாட்டிலில் சில்வர் ஸ்பூன் போட்டு வைக்கக்கூடாது. அப்படிப் போட்டு வைத்தால், ஊறுகாய் விரைவில்
கெட்டுப் போய்விடும்.
* ரஸ்னா, சர்பத் கலக்கும்போது இரண்டு ஸ்பூன் தேன் விட்டுக் கலந்தால் சுவையாக இருக்கும். உடலுக்கும் நல்லது.
* பழைய வெள்ளி ஆபரணங்களைச் சில மணி நேரம் மோரில் போட்டுவைத்தால், பளிச்சென மாறிவிடும்.
* கண்ணாடி மேஜை கறையாக உள்ளதா? கடலை மாவு அல்லது டால்கம் பவுடரைத் தூவிப் பிறகு நன்றாகத்
துடைத்துவிடுங்கள். கறை நீங்கிவிடும்.
* வாஷ்பேஸினில் கறை படிந்துள்ளதா? கொஞ்சம் வினிகரைத் தெளித்து சிறிது நேரம் கழித்துத் தண்ணீரில் கழுவினால்
பளபளக்கும்.
* பருப்புப் பொடியுடன் சிறிது கசகசாவையும் வறுத்துப் பொடி செய்து சேர்த்தால் குழம்பு, கூட்டு கெட்டியாக இருக்கும்.
* பொரியல் செய்யும்போது காரப்பொடிக்குப் பதிலாகத் தேங்காய்ப் பொடி சேர்த்தால் பொரியலின் சுவை கூடுதலாக
இருக்கும்.
* வெங்காயத்தை பிளாஸ்டிக் பைக்குள் போட்டு, முதல் நாள் இரவே பிரிட்ஜில் வைத்து விடுங்கள். மறுநாள் காலை
நறுக்கும்போது கண்களில் கண்ணீர் வராது. தோலையும் எளிதில் உரிக்கமுடியும்.
-- குறிப்புகள் பலவிதம் பகுதியில் , எஸ்.மேகலா, சென்னை.
-- 'தி இந்து' நாளிதழ். பெண் இன்று இணைப்பு. ஞாயிறு, நவம்பர் 9, 2014.

Thursday, November 10, 2016

தகவல் பலகை.

* ஆப்பிள் பழம் ரோஜாப்பூ குடும்பத்தைச் சேர்ந்தது என்றால், நம்பமுடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.
* நிலவாழ் உயிரினங்களில் யானை, காண்டாமிருகத்திற்கு அடுத்த 3 வது பெரிய உயிரினம் நீர்யானை. குதிக்கத் தெரியாத
நீர்யானைகளால் நிலத்தில் மணிக்கு 30 கிமீ வேகத்தில் ஓடவும், நீரில் மணிக்கு 8 கிமீ வேகத்தில் நீந்தவும் முடியும்.
* இயற்கையாக கிடைக்கும் வேர், பூ, இலை, காய்களை பயன்படுத்தி செய்யப்படும் மருத்துவத்திற்கு அரோமா தெரபி
என்று பெயர் .
* சீனாவில் வெள்ளையும், துரிக்கியில் நீலமும், எகிப்தில் மஞ்சளும், நம் நாட்டில் கறுப்பும் துக்கத்தை குறிக்கும் நிறங்களாக
கடைபிடிக்கப்படுகிறது.
* உலகிலேயே இலங்கையில் உள்ள கண்டி கதிர்காமம் முருகன் பெயருக்கு மட்டுமே காசோலை எழுதி உண்டியலில்
செலுத்தினால் அது செல்லுபடியாகும்.
* வலி நிவாரணியாக பயன்படுத்தும் அமிர்தாஞ்சன் தைலம், ஆந்திராவைச் சேர்ந்த காசிநாத்துனி நாகேஸ்வரராவ் என்பவரால்
1894ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
-- தினமலர் நாளிதழ்களிலிருந்து.

Wednesday, November 9, 2016

பூணூல்

பூணூல் அணிவதன் நோக்கம் என்ன?
வேதம் படிக்கவும், வேதநெறி நிற்பதற்கும் வழங்கப்படுகின்ற அதிகார அடையாளமே பூணூல். இது பற்றி இரு இடங்களில் ட்திருமூலர், திருமந்திரத்தில் கூறியுள்ளார். பூணூலிம், குடுமியும் வேதாந்தத்தையும், ஞானத்தையும் உணர்த்தும் அடையாளங்களாக அந்தணர்களுக்கு உரியது என 'அந்தணர் ஒழுக்கம்' என்னும் பகுதியிலும், ஆறாம் தந்திரத்தில் 'திருநீறு' அதிகாரத்தில்,
'நூலும் சிகையும் உணரார் நின் மூடர்கள்
நூலது வேதந்தம் நுண்சிகை ஞானமாம்'
எனவும் இதன் மகத்துவத்தைக் குறிப்பிடுகிறார்.
-- கேளூங்க சொல்கிறோம்! -- பகுதியில் , மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாதசிவாச்சாரியார்.
-- தினமலர் ஆன்மிக மலர் .இணைப்பு . சென்னை. செப்டம்பர். 16, 2014.
-- இதழ் உதவி : SB. மாதவன், விருகம்பாக்கம். சென்னை. 92.

Tuesday, November 8, 2016

மகிழ்ச்சி

மரத்தைச் சுற்றினால் மகிழ்ச்சி.
தெய்வீக மரமான அரசமரம், மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் அம்சமாக கருதப்படுகிறது. இதற்கு, அஸ்வத்த மரம்' என்றும் பெயருண்டு. இதற்கான புராணக்கதை ஒன்று கூறப்படுகிறது. எந்த தெய்வத்தைக் குறித்து ஹோமம் நடத்தினாலும், அதில் இடப்படும் ஹவிஸை ( ஆகுதி ) அந்த தெய்வத்திடம் சேர்ப்பவர் அக்னி. இந்த பணியையே தொடர்ந்து செய்ததால், அவருக்கு சலிப்பு ஏற்பட்டது. தேவலோகத்தை விட்டு கிளம்பிய அவர், குதிரை வடிவெடுத்து மறைந்து வாழ்ந்தார். தேவர்கள் அவரை தேடிய போது, அரசமரமாக மாறி நின்றார். குதிரையை சமஸ்கிருதத்தில் 'அஸ்வம்' என்பதால், அரசமரத்திற்கும் 'அஸ்வத்த மரம்' என்று பெயர் வந்தது.
அக்னியின் அம்சமான அரசமரத்தின் குச்சிகளேயாக குண்டங்களில் பயன்படுத்தப்படுகிறது. இதையே 'போதி மரம்' என்பர். புத்தருக்கு போதி மரத்தடியில் தான், 'ஆசையே உலக துன்பங்களுக்கு காரணம்' என்ற ஞானம் கிடைத்தது. போதி என்ற பாலி மொழி சொல்லுக்கு 'அரச மரம்' என்று அர்த்தம். அரசமரம் அதிகமான ஆக்சிஜனை வெளியிடும் என்பதால், விநாயகர், நாகர் சிலைகளைப் பிரதிஷ்டை செய்தனர். திங்கட்கிழமையும், அமாவாசையும் இணைந்து வரும் நாளில் ( பஞ்சாங்கம், காலண்டரில் அமா சோமவாரம் என குறிப்பிட்டுள்ள நாட்கள் ) அரசமரத்தை வலம் வந்து வழிபட்டால், விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.
-- குட்டிச்செய்திகள்.
-- தினமலர் ஆன்மிக மலர் .இணைப்பு . சென்னை. செப்டம்பர். 16, 2014.
-- இதழ் உதவி : SB. மாதவன், விருகம்பாக்கம். சென்னை. 92.

Monday, November 7, 2016

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்.

* திருமாலுக்குரிய வைணவ ஆகமம்ங்கள் ... பாஞ்சராத்ரம், வைகானசம்.
* மகாபாரதத்தை வியாசர் விருந்து என்னும் பெயரில் எழுதியவர் ... ராஜாஜி.
* இந்தியில் துளசிதாசர் எழுதிய ராமாயணம் ... ராமசரித மானஸ்.
* ராமர் மீது பக்தி கொண்ட குலசேகராழ்வார் எழுதியது ... பெருமாள் திருமொழி.
* திருமாலுக்கு விரதம் இருக்க உகந்த நட்சத்திரங்கள் ... திருவோணம், ரோகிணி.
* எத்திசை நோக்கி நின்று திருநீறு பூச வேண்டும் ... கிழக்கு, வடக்கு.
* ஞானசம்பந்தர் 'மந்திரமாவது நீறு' என்று பாடிய தலம் ... மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்.
* விபூதி என்பதன் பொருள் .... மேலான செல்வம்.
* 'தாசமார்க்கம்' என்னும் அடிமை நெறியில் சிவனை அடைந்தவர் ... திருநாவுக்கரசர்.
* அக்னியைப் பற்றிக் கூறும் நூல் ... ஆக்னேய புராணம்.
-- பக்திமலர். அர்ச்சனைப்பூக்கள்.
-- தினமலர் ஆன்மிக மலர். இணைப்பு . சென்னை. செப்டம்பர். 16, 2014.
-- இதழ் உதவி : SB. மாதவன், விருகம்பாக்கம். சென்னை. 92.

Sunday, November 6, 2016

பாவம் நீக்கும் பஞ்சபுராணம்.

சிவனை வணங்கி பாடப்பெற்ற ஐந்து புராணங்கள், 'பஞ்ச புராணங்கள்' எனப்படுகின்றன. அவற்றின் ஆசிரியர்கள் :
தேவாரம்...................................திருஞானசம்பந்தர்.
................................. திருநாவுக்கரசர்.
..................................சுந்தரர்.
திருவாசகம் .............. ...............மாணிக்கவாசகர்.
திருவிசைப்பா .........................கருவூர்த்தேவர்.
திருப்பல்லாண்டு ....................சேந்தனார்.
திருத்தொண்டர் புராணம்......சேக்கிழார்.
சிவனை வணங்கும்போது, இப்புராணங்களைப் படித்து வழிபட்டால் பாவங்கள் நீங்கும், முக்தி கிடைக்கும்.
-- குட்டிச்செய்திகள்.
-- தினமலர் ஆன்மிக மலர் .இணைப்பு . சென்னை. செப்டம்பர். 16, 2014.
-- இதழ் உதவி : SB. மாதவன், விருகம்பாக்கம். சென்னை. 92.

Saturday, November 5, 2016

ரிஷபாந்திகர்

ரிஷப வாகனத்தின் மீது சிவபெருமான் அமர்ந்த நிலையில் இருந்தால், அவர் ரிஷபாரூடர். ரிஷபவாகனத்திற்கு அருகில் நிற்பதுபோல் காட்சி தந்தால் ரிஷபாந்திகர் என்று சொல்வார்கள்.
-- எஸ்.மதுமிதா, பெருந்துறை.
கிருஷ்ணன் வணங்கும் ஆறு பேர்!
'நான் ஆறுபேரை வணங்குகிறேன்' என்று கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார். யார் அந்த ஆறு பேர் தெரியுமா?
ப்ராதஸ்நாதி ( அதிகாலையில் குளிப்பவர் ). அச்வத்வசேவி ( அரசமரத்தை வணங்குபவர்). த்ருணாக்னிஹோத்ரி ( மூன்று தீயை இடையறாது வளர்ப்பவன்). நித்யான்னதாதா ( நாள்தோறும் ஏழைகளுக்கு உணவளிப்பவன் ). சதாபிஷேகி ( நூற்றாண்டு விழா செய்துகொண்டவர் ). பிரம்மஞானி ( இறைவனை உணர்ந்தவர் ).
-- பைரவி, பெருந்துறை.
-- குமுதம் பக்தி ஸ்பெஷல். ஜுன் 16- 30, 2014.

Friday, November 4, 2016

ஒரு வரிச் செய்திகள்

* காசியில் 64 ஸ்நான கட்டங்கள் உள்ளன.
* சிவன், விஷ்ணு, ஆஞ்சநேயர் மூவர் சகஸ்ரநாமத்திலும் வரும் பெயர் சுந்தரர்.
* வில்லிப்புத்தூரார் தவிர ராமாயணம் எழுதியவர் பெருந்தேவனார்.
* காயத்ரி மந்திரத்தை கண்டறிந்தவர் விசுவாமித்திரர்.
* மதங்க முனிவரின் மாணவி சபரி.
* மகான்களின் திருஅவதார நாட்களை வர்தந்தி என்று குறிப்பிடுவார்கள்.
* அரசர்களாக இருந்து ஆழ்வார்களாக மாறியவர்கள் குலசேகர ஆழ்வார், திருமங்கை ஆழ்வார்.
* தொண்டர் சீர் பரவுவார் என்ற சிறப்புப் பெயர் பெற்றவர் சேக்கிழார்.
* திருவெண்பாவை பாடல்கள் 20 இயர்றியவர் மாணிக்கவாசகர்.
* பாசரப்படி ராமாயணத்தைத் தொகுத்தவர் பெரியவாச்சான் பிள்ளை.
* விஷ்ணு சகஸ்ரநாமத்தை இயற்றியவர் சனகாத்யர். மகாபாரதத்தில் இதை இணைத்தவர் பீஷ்மர். கேட்டவர் தருமபுத்திரர்.
* ஜடாயுவின் சகோதரன் சம்பாதி.
* விப்ரநாராயணர் தொண்டரடிப் பொடியாழவார் என அழைக்கப்பட்டார்.
* மதுரையில் உள்ள கூடலழகர் கோயிலில் நவக்கிரகங்களும் இருக்கின்றன.
* இந்தியாவிலேயே மிக நீளமான சன்னதித் தெரு உள்ள இடம் திருநெல்வேலி.
* கர்னாடகாவிலுள்ள மூலுபாகுல் என்னும் இடத்தில் உள்ள ஆஞ்சனேயருக்கு தாழம்பூ அணிவிக்கிறார்கள்.
* பூதங்குடி என்னும் ஊரில் சீதாதேவிக்கு கோயில் உள்ளது.
* தாலி பாக்கியம் நிலைக்க காண வேண்டிய விழா சுசீந்திரம் ஆருத்ரா தரிசன விழாவாகும்.
-- பத்மா வெங்கற்றாமன், ரெட்டிப்பாளயம்.
-- குமுதம் பக்தி ஸ்பெஷல். ஜுன் 16- 30, 2014.

Thursday, November 3, 2016

f இணைய வெளியிடையே...t

* முதியோர் இல்லத்திற்கு பணம் கொடு, பொருள் கொடு, உணவு கொடு உன் பெற்றோரை கொடுத்து விடாதே!!!
hasinabanu@ twitter,com
* வாகனம் ஓட்டும்போது ஐம்புலன்ஸும் சரியாக இருந்தால் ஆம்புலன்ஸில் ஏறாமல் தவிர்க்கலாம்.
Kavitha@twitter.com
* ஏசி என்பது நாம் இருக்கும் சின்ன அறையை குளிராகவும் இந்தப் பெரிய பூமியை சூடாகவும் மாற்றுகிறது.
jebz4@twitter.com
* யாரோ ஒருவரின் நிராகரிப்புக்காக வருந்தாதீர்கள் ... துணிக்கடைகளில் பல மனிதர்களால் நிராகரிக்கப்பட்ட ஓர் ஆடை
யாரோ ஒருவரால் விரும்பி அணியப்படுகிறது.
Urs- priya@twitter.com
* மழை இரவில் நான்கு டாஸ்மாக் கடைகளை தாண்டிவந்த பின்பே கண்டுபிடிக்க முடிந்தது, அவசரத்துக்குத்தேடிய மருந்து
கடையை!
Indiavasan@ twitter.com
* தாத்தா பாட்டியுடன் சேர்ந்து வாழும் குடும்பங்களில், குழந்தைகளுக்கு இரண்டு பெற்றோர். பெற்றோருக்கு நான்கு
குழந்தைகள்.
priyakathiravan @twitter,com
* பஸ் ஸ்டாண்டில் பார்க்கிங் காண்ட் ராக்ட் எடுப்பவர்கள், அமெரிக்கர்களை விட ஆபத்தானவர்கள்... கொஞ்சம் பெட்ரோல்
இருந்தாலும் விடமாட்றாய்ங்க.
boopathy@@twitter.com
-- தினமலர். சண்டே ஸ்பெஷல். 02-11-2014.

Wednesday, November 2, 2016

தெரியுமா?

* "குஷ்பு, தி.மு.க - வில் இருந்து என்ன காரணம் சொல்லி விலகினார்?"
பதில் : 'என் உழைப்பு ஒருவழிப் பாதையாக இருக்கிறது' என்று சொல்லி விலகினார்.
* "L.K.G. , U.K.G. -- விரிவாக்கம் என்ன?"
பதில் : L.K.G. -- LOWER KINDERGARDEN.
U.K..G. -- UPPER KINDERGARDEN. ஜெர்மன் மொழியில் KJNDERGARDEN என்றால், 'குழந்தைகளின்
தோட்டம்' என்று பொருள் !
* "ட்விட்டர் வலைதளத்தின் சின்னமான நீல நிறப் பறவையின் பெயர் என்ன"
பதில் : மவுன்டேய்ன் ப்ளூ பேர்ட் ( Mountain Blue Bird).
* "சமையலறைகளில் இருக்கும் அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் பொருட்கள் என்னென்ன>"
பதில் : கடுகு, மிளகு, வெந்தயம், சீரகம், துவரம்பருப்பு.
-- நா.சிபிச்சக்கரவர்த்தி.
-- ஆனந்த விகடன். 02-07-2014.

Tuesday, November 1, 2016

'எனக்கு எதுக்குடா வாங்கின?"

"காதலி, மனைவி, அம்மா -- என்ன வித்தியசம்?"
" 'எனக்கு என்ன வாங்கிக் குடுப்ப?" -- காதலி.
'எனக்கு என்னதான வாங்கிக் குடுத்துக் கிழிச்சீங்க' -- மனைவி.
"எனக்கு எதுக்குடா வாங்கின?" -- அம்மா.
-- ஆ.சிவமணி, பிளியம்பட்டி.
"20 ஆயிரம் கோடி ஏமற்றிய 'சகாரா'வின் சட்ட ஆலோசகர் ரவி சங்கர் பிரசாத். நீதித் துறைக்கே அமைச்சராகிவிட்டாரே?"
" 'சிலம்பை உடைத்து
என்ன பயன்?
அரியணையிலும் அதே கொல்லன்'
என்ற ஈரோடு தமிழன்பனின் இந்த ஹைக்கூ , உங்களுக்கே உங்களுக்காக!"
-- தாமு,தஞ்சாவூர்.
"சுருங்கச் சொல்லி விளங்கவைப்பது என்றால் என்ன?"
" 'வீரன் ஒருமுறைதான் சாவான்; கோழை பலமுறை சாவான்' என்பதை கலைஞர் இப்படிச் சொன்னார்: 'வீரன் சாவதே இல்லை;
கோழை வாழ்வதே இல்லை'!"
-- அ.யாழினி பர்வதம், சென்னை -78.
--( நானே கேள்வி... நானே பதில்! பகுதியில்... )
-- ஆனந்த விகடன். 02-07-2014.

Monday, October 31, 2016

"மறக்க முடியாத வாசகம் ?"

"மறக்க முடியாத வாசகம் ?"
" குடலில் ஒரு அவுன்ஸ் மலமும், மூளையில் ஒரு அவுன்ஸ் அவமானமும் மிச்சம் இல்லாத மனிதன் எவனும் இல்லை!"
"புத்தகங்களில் கையெழுத்துப் போட்டுக் கொடுக்கும்போது என்ன எழுதித் தருவீர்கள்?"
"சிறகிருந்தால் போதும்
சிறியதுதான் வானம்!"
"நீங்கள் ரசித்துக்கேட்ட அனுபவ மொழி?"
"முஸ்லீம் பெரியவர் ஒருவர் சொன்னது. 'நீ ராஜாவோ... பிச்சைக்காரனோ... உண்டது, உடுத்தது, கொண்டது, கொடுத்தது...
இந்த நாலும்தான் மிச்சம்'!"
"மனிதனின் உண்மை முகம் எது?"
"எந்தத் துறையில் ஒருவன் பொருள் ஈட்டினானோ அல்லது புகழ் ஈட்டினானோ, அந்தத் துறையைக் கழித்துவிட்டு மிச்சப்படுவது எதுவோ அது!"
"ஒரு குறுங்கதை சொல்ல முடியுமா?"
"பார்வையற்ற பெண்ணைக் காதலித்தான் ஒருவன். 'பார்வை கொடுத்தால் உன்னையே மணப்பேன்' என்றாள் அவள். அவனும் பார்வை கொடுத்தான். கண்திறந்து பார்த்தவள் தன் காதலன் கண் இல்லாதவன் என்பதை கண்டு, 'நான் உன்னை மணக்க மாட்டேன்' என்று மறுத்துவிட்டாள். காதலன் கண்ணீரோடு முணுமுணுத்தான், 'என்னை நிராகரித்தவளே... என் கண்ணை நிராகரிக்க முடியாதல்லவா!"
"உங்கள் வர்ணனையில் உங்களுக்குப் பிடித்த வரிகள்?"
" 'சோழன் குயில் பாடுகையில் சோலைக் குயில் ஓய்வெடுக்கும்.
மெல்லினங்கள் பாடு கண்ணே வல்லினங்கள் வாய் வலிக்கும்!"
-- வைரமுத்து 60 கேள்விகள்.
-- ஆனந்த விகடன், 18-07-2014.

Sunday, October 30, 2016

'மெனோபாஸ்'

ஒவ்வொரு பெண்ணும் பூப்பெய்த்தியதில் இருந்து, தோராயமாக 35 வருடங்களாகவது, மாதத்திற்கு மூன்று அல்லது நான்கு நாட்களை கொஞ்சம் பயம், கொஞ்சம் சுகவீனம் கலந்தே நகர்த்தி வருகிறார்கள். 47-51 வயதை எட்டும்போது மாதவிடாய் நின்று, 'இனிமேல் இது இல்லை,' என்ற விடுதலையைத்தான் 'மெனோபாஸ்' என்கிறார்கள். இது நல்ல உடல்வாகைப் பெற்றிருக்கும் 35 சதவிகிததுக்கும் குறைவான பெண்களுக்குத்தான், மீதமுள்ள 65 சதவிகிதத்தினர் இந்த நாட்களில் படும் அவஸ்தைகள், அனுபவித்தால் மட்டுமே புரியும். சாதாரண ரத்தசோகையில் இருந்து, வாந்தி, தலைவலி, பிழியும் வயிற்று வலி, வயிற்று உப்புசம் ... என உபாதைகள் அவஸ்தையாக, 'சனியன் ... இது எப்போ ஒழியும்?' என்று உதிரத்துக்கு முன்னதாகவே கண்ணீர் ஊற்று எடுக்க, இறுதி யுத்தத்துக்குக் காத்திருப்பார்கள். உடலும் மனமும் வதைபடும் இந்த நாட்களில் என்ன செய்ய வேண்டும், எதைச் சாப்பிட்டால் மீண்டும் புத்துணர்வு பெறலாம், இது நோயா... அல்லது வெறும் பயமா? ஏராளமான சந்தேகங்கள் மெனோபாஸ் பருவப் பெண்களை அலைக்கழிக்கும். ஆங்கிலத்தில் இதனை Empty nest syndrome என்பார்கள்.
-- மருத்துவர் கு. சிவராமன். ( நலம் 360 0 தொடரில் ) .
-- ஆனந்த விகடன், 18-07-2014.

Saturday, October 29, 2016

வெளிநாட்டுக் கோயில்கள்.

வெல்லிங்டன் ஸ்ரீ குறிஞ்சிக் குமரன் ஆலயம்.
குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருப்பான் என்று சொல்வது வழக்கம். குன்றுகள் கடந்து, கடல் கடந்து அயல் தேசங்களிலும் குமரன் குடிகொண்டு அருள்பாலிக்கிறான்.
நியூசிலாந்து தலைநகரம் வெல்லிங்டன். இந்த நகருக்கு அருகில் உள்ளது நியூலாண்ட்ஸ் பகுதி. இங்கே வசிக்கும் தமிழ் பக்தர்களால் அமைக்கப்பட்டிருக்கிறது ஸ்ரீ குறிஞ்சிக் குமரன் ஆலயம்.
இங்கே குமரன், வள்ளி மற்றும் தேவயானியுடன் அருள்பாலிக்கிறார்.
ஆலய வரலாறு : முதன்முதலாக அக்டோபர் 1992ல் கந்தசஷ்டி விழா ஆறு நாட்கள் கொண்டாடப்பட்டது. அதைத் தொடர்ந்து மே 1993ல் நியூசிலாந்து இந்து அசோசியேஷன் இக்கோயிலைப் பதிவு செய்தது. கோயில் கட்டப்பட்டு மார்ச் 1999 -ம் ஆண்டு வழிபாட்டுக்கு தொடங்கப்பட்டது.
ஆலய முகவரி : Kurinchi Kumaran Temple.
3 Batchelor st Newlands.
Wellington 6037, New zealand.
இணைய தளம் : http:// hinduterm-ple.co.nz/
-- தினமலர் பக்திமலர். 16-10-2014.

Friday, October 28, 2016

ஓணம் கொண்டாடக் காரணம்.

அசுரர்களின் குருவான சுக்ராச்சாரியார் தலைமையில், 'விஸ்வஜித்' என்னும் யாகத்தை மலைநாட்டு மன்னன் மகாபலி நடத்தினான். அந்த யாக குண்டத்தில் இருந்து வில், அம்பு, அம்புராத்துணி, கவசம் என ஆயுதங்கள் வெளிப்பட்டன. அவற்றை மகாபலிடம் வழங்கிய சுக்ராச்சாரியார், இவற்றின் மூலம் தேவர்களை வென்று, உலகையே ஆளும்படி வாழ்த்தினார். இதன்பின் தேவலோகம் மகாபலியின் வசம் வந்தது. மகாபலி நல்லவனாயினும், வெற்றி மமதையில் தனக்கு நிகர் தானே என்ற ஆணவமும் கொண்டிருந்தான்.
இதனிடையே, தேவர்களின் தாயான அதீதி, தன் பிள்ளைகள் தேவர் உலகை இழந்தது கண்டு தவித்தாள். மகாபலியின்
ஆணவத்தை ஒடுக்கி, தங்கள் உலகை மீட்டுத்தர வேண்டுமென்று விஷ்ணுவை நினைத்து விரதம் இருந்தாள். அவளது வேண்டுகோளை ஏற்ற மகாவிஷ்ணு, வாமன மூர்த்தியாக ( குள்ள வடிவ அந்தணர்) ஆவணி மாதம் திருவோணத்தன்று அவதாரம் செய்தார். மகாபலியிடம் மூன்றடி நிலம் கேட்டு, உலகையே அளந்தார். எல்லாம் அவர் வசம் வந்தது. மகாபலியை ஆட்கொண்டு பாதாள லோகத்திற்கு அனுப்ப்னார். தேவர்கள் மகிழ்ந்தனர். தான் ஆட்கொள்ளப்பட்ட நாளை, விழாவாகக் கொண்டாட வேண்டுமென அவன் மகாவிஷ்ணுவிடம் கோரிக்கை வைத்தான். அவனால் பல நன்மைகளைப் பெற்ற மக்கள், இன்று வரை திருவோணத் திருநாளன்று வரவேற்று மகிழ்கின்றனர். அந்த நாளே ஓணம் பண்டிகையாக மக்களால் கொண்டாடப்படுகிறது.
--- குட்டிச்செய்திகள்.
-- தினமலர் ஆன்மிக மலர். இனைப்பு . சென்னை . செப்டம்பர் 2, 2014.
-- இதழ் உதவி : SB.மாதவன், விருகம்பாக்கம். சென்னை .92.

Thursday, October 27, 2016

ஒரு ரோமத்துக்கு,

ஒரு வருஷம் சொர்க்கம்.
யாகம் நடத்தும் அந்தணர்களுக்கு, தட்சிணை கொடுக்காவிட்டால் யாக பலன் பூர்த்தியாகாது என்கிறது சாஸ்திரம். யாகம் நடத்துவதற்கு முன்பே தட்சிணையின் ஒரு பகுதியை கொடுத்து, அந்தணரை அழைக்க வேண்டும். யாகம் நடத்தும் முறை பற்றி கூறும் ஆபஸ்தம்பர் என்ற மகான், குள்ளப்பசுவைக் கன்றோடு அந்தணர்களுக்கு தட்சிணையாகக் கொடுப்பது நல்லது என்கிறார். விஷ்ணு வாமனராக குள்ளவடிவில் வந்து தானம் பெற்றதை நினைவூட்டும் விதமாக குள்ளப்பசுவைத்தேர்ந்தெடுத்து கன்றுடன் தருவது மரபு. இதன்மூலம் அந்த பசுவின் உடம்பில் எத்தனை ரோமம் இருக்கிறதோ, அத்தனை ஆண்டுகள் சொர்க்கத்தில் வாழும் பாக்கியத்தை தானம் கொடுத்தவர் பெறுகிறார்.
-- குட்டிச்செய்திகள்.
-- தினமலர் ஆன்மிக மலர். இனைப்பு . சென்னை . செப்டம்பர் 2, 2014.
-- இதழ் உதவி : SB.மாதவன், விருகம்பாக்கம். சென்னை .92.

'எனக்கு எதுக்குடா வாங்கின?"


Wednesday, October 26, 2016

சூரிய சக்தி விமானம்

* பெயெர்னெ *
சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த சோலார் இம்பல்ஸ் நிறுவனம் தயாரித்த முழுக்க முழுக்க சூரிய சக்தியால் மட்டுமே இயங்கும் விமானத்துக்கு 'சோலார் இம்பல்ஸ்' என்றே பெயரிடப்பட்டுள்ளது. சுமார் 12 ஆயிரம் சோலார் பேனல்கள் மூலம் இவ்விமானம் பறப்பதற்கான எரிசக்தி பெறப்படுகிறது. முந்தைய சோலார் கண்டுபிடிப்புகளால் இரவில் பறப்பது சிரமம். அந்தத் தடையையும் தகர்த்து இரவிலும் பறக்கும் திறனை 'சோலார் இம்பல்ஸ்' பெற்றிருக்கிறது.
வரும் 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் அபுதாபியில் தன் பயணத்தைத் தொடங்கும் 'சோலார் இம்பல்ஸ்' - முதல் நாடாக இந்தியாவுக்குப் பயணிக்கிறது.
இந்தியாவில், ஆமதாபாத், வாரணாசி ஆகிய இரு இடங்களில் 'சோலார் இம்பல்ஸ்' தரையிறங்க அனுமதி கோரப்பட்டுள்ள இது, ஒற்றை விமானியால் இயக்கப்படவுள்ளது.
புதிய தொழில்நுட்பத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் இப்பயணம் அமையும். விமானத்தின் எடை 2.750 கிலோ. மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் பறக்கும் திறனுடையது.
135 மைக்ரான் தடிமன் ( மனித மயிரிழையில் தடிமன் ) கொண்ட 12 ஆயிரம் சூரிய சக்தித் தகடுகள் இவ்விமானத்தில் பொருத்தப்பட்டுள்ளன. 144 பக்கவரிசைகளில் 50 செ.மீ. இடைவெளியில் நேர்த்தியாக இத்தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. விமானத்தின் மேற்புறம் சூரியசக்தித் தகடுகளாலும், அடிப்பாகம் மின் இலகுவான செயற்கை இழைகளாலும் ( அல்ட்ரா லைட் பேப்ரிக் ) வடிவமைக்கப்பட்டுள்ளன. விமானத்தின் இறகுப் பகுதி முழுக்க கார்பன் பைபர் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
பகலில் சூரிய சக்தி மூலம் பறந்தபடி , உபரி மின்சாரம் பேட்டரிகளில் சேமிக்கப்படும். அந்த பேட்டரி மூலம் இரவில் தொடர்ந்து பறக்கும். இவ்விமானத்தின் எடையில் மூன்றில் இரண்டு பங்கு பேட்டரிகளாகும். 'சோலார் இம்பல்ஸ்' தொடர்ந்து 120 மனி நேரம் இயக்கலாம்.
-- பிடி ஐ. ( சர்வதேசம் ).
-- 'தி இந்து' நாளிதழ். புதன், அக்டோபர் 29, 2014.

Tuesday, October 25, 2016

* பெயெர்னெ *

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த சோலார் இம்பல்ஸ் நிறுவனம் தயாரித்த முழுக்க முழுக்க சூரிய சக்தியால் மட்டுமே இயங்கும் விமானத்துக்கு 'சோலார் இம்பல்ஸ்' என்றே பெயரிடப்பட்டுள்ளது. சுமார் 12 ஆயிரம் சோலார் பேனல்கள் மூலம் இவ்விமானம் பறப்பதற்கான எரிசக்தி பெறப்படுகிறது. முந்தைய சோலார் கண்டுபிடிப்புகளால் இரவில் பறப்பது சிரமம். அந்தத் தடையையும் தகர்த்து இரவிலும் பறக்கும் திறனை 'சோலார் இம்பல்ஸ்' பெற்றிருக்கிறது.
வரும் 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் அபுதாபியில் தன் பயணத்தைத் தொடங்கும் 'சோலார் இம்பல்ஸ்' - முதல் நாடாக இந்தியாவுக்குப் பயணிக்கிறது.
இந்தியாவில், ஆமதாபாத், வாரணாசி ஆகிய இரு இடங்களில் 'சோலார் இம்பல்ஸ்' தரையிறங்க அனுமதி கோரப்பட்டுள்ள இது, ஒற்றை விமானியால் இயக்கப்படவுள்ளது.
புதிய தொழில்நுட்பத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் இப்பயணம் அமையும். விமானத்தின் எடை 2.750 கிலோ. மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் பறக்கும் திறனுடையது.
135 மைக்ரான் தடிமன் ( மனித மயிரிழையில் தடிமன் ) கொண்ட 12 ஆயிரம் சூரிய சக்தித் தகடுகள் இவ்விமானத்தில் பொருத்தப்பட்டுள்ளன. 144 பக்கவரிசைகளில் 50 செ.மீ. இடைவெளியில் நேர்த்தியாக இத்தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. விமானத்தின் மேற்புறம் சூரியசக்தித் தகடுகளாலும், அடிப்பாகம் மின் இலகுவான செயற்கை இழைகளாலும் ( அல்ட்ரா லைட் பேப்ரிக் ) வடிவமைக்கப்பட்டுள்ளன. விமானத்தின் இறகுப் பகுதி முழுக்க கார்பன் பைபர் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
பகலில் சூரிய சக்தி மூலம் பறந்தபடி , உபரி மின்சாரம் பேட்டரிகளில் சேமிக்கப்படும். அந்த பேட்டரி மூலம் இரவில் தொடர்ந்து பறக்கும். இவ்விமானத்தின் எடையில் மூன்றில் இரண்டு பங்கு பேட்டரிகளாகும். 'சோலார் இம்பல்ஸ்' தொடர்ந்து 120 மனி நேரம் இயக்கலாம்.
-- பிடி ஐ. ( சர்வதேசம் ).
-- 'தி இந்து' நாளிதழ். புதன், அக்டோபர் 29, 2014.
* கார்களுக்குப் பதிவு எண் வழங்குவதை அறிமுகப்பட்டுத்தியது சுவீடன்.
* கண்ணாடியில் சாலைகள் போட்டுள்ள நாடு ஜெர்மனி.
* பிளங் பால் என்ற பறவை ஓய்வெடுக்காமல் ஒரே மூச்சில் 3,600 கி.மீ. தூரத்தைக் கடந்துவிடும்.
* ஒரு கிலோ குங்குமப்பூவைச் சேகரிக்க ஒரு லட்சத்து 40 ஆயிரம் செடிகள் வேண்டும்.
* ஒரு மயிலிறகில் ஒன்பது வண்ணங்கள் இருக்கின்றன.
* உலகில் அதிகத் தொலைக்காட்சி நிலையங்கள் இருக்கும் நாடு அமெரிக்கா.
* தான் பிறந்த நாட்டை தந்தையர் நாடு என்று சொல்பவர்கள் ஐரோப்பியர்கள்.
* வங்கிகளில் டிராப்ட் தரும் முறையை அறிமுகப்படுத்திய நாடு சீனா.
* உலகிலேயே மிக உயரமான கலங்கரை விளக்கம் ஜப்பானில் உள்ள ஸ்டீல் டவர்.
* மனித உடம்பில் இருக்கும் நரம்பின் சராசரி நீளம் 72.4 கி.மீ.,
* கம்ப்யூட்டர் கண்டுபிடிக்கப்பட்ட போது அதற்கு இடப்பட்ட பெயர் அனாலிட்டிக்கா இன்ஜின்.
-- தொகுப்பு : சரஸ்வதி பஞ்சு.
-- 'தி இந்து' நாளிதழ். மாயாபஜார் . இணைப்பு . புதன், அக்டோபர் 29, 2014.

Monday, October 24, 2016

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்.

1. வாமனரின் பெற்றோர்... காஸ்யபர், அதிதி.
2. மகாபலியின் கொள்ளுத்தாத்தா... பிரகலாதன்.
3. பிரகலாதனின் மகன் ... விரோசனன்.
4. விரோசனனின் மகன் ... வைரோசனன்.
5. வைரோசனின் மகன் ... மகாபலி.
6. மகாபலி யாகம் நடத்திய நதிக்கரை ... நர்மதை.
7. விந்தியாவளி என்பவள்ன் ... மகாபலியின் மனைவி.
8. கிருஷ்ணாஜினம் என்பது ... வாமனர் அணிந்திருந்த மேலாடை.
9. வாமனருக்கு தானம் அளிப்பதை தடுக்க முயன்றவர் ... சுக்ராச்சாரியார்.
10. தர்ப்பைப் புல்லால் யாருடைய கண்ணை வாமனர் குத்தினார் ... சுக்கிராசாரியார்.
11. வாமனர் மூன்றடி நிலத்தை அளக்க எடுத்த வடிவம் ... திரிவிக்ரமன் ( உலகளந்த பெருமாள் ).
12. திருப்பாவையில் திரிவிக்ரம அவதாரம் பற்றி எத்தனை பாடல்கள் வருகிறது ... மூன்று.
-- பக்திமாலை . அர்ச்சனைப்பூக்கள்.
-- தினமலர் ஆன்மிக மலர். இனைப்பு . சென்னை . செப்டம்பர் 2, 2014.
-- இதழ் உதவி : SB.மாதவன், விருகம்பாக்கம். சென்னை .92.

Sunday, October 23, 2016

பஞ்ச 'வ' காரங்கள்.

வாழ்வில் 'வ'காரப் பண்புகள் மிகவும் முக்கியம் வேண்டியவை. அவை :
1. வஸ்த்ரா ( நல்ல உடை அணிதல் ).
2. வபுஷா ( சிறந்த உடல்கட்டுடன் இருத்தல் ).
3. வாசா ( நல்ல பேச்சுத் தன்மையுடன் இருத்தல் ).
4. வித்யா ( கல்வி, படிப்பறிவுடன் இருத்தல் ).
5. விநயம் ( பணிவும், அடக்கத்துடனும் இருத்தல் ).
-- சித்ரா நாராயணன். ( நல்ல வார்த்தை நாலஞ்சு! தொடரில்... )
-- தினமலர் ஆன்மிக மலர். இனைப்பு . சென்னை . செப்டம்பர் 2, 2014.
-- இதழ் உதவி : SB.மாதவன், விருகம்பாக்கம். சென்னை .92.

Saturday, October 22, 2016

பிறப்பு - இறப்பு.

ஒவ்வொரு பிறப்பும் கற்றுக்கொள்ள
வருகிறது;
ஒவ்வோர் இறப்பும் கற்றுத்தந்து
போகிறது.
இயல்பான மரணம் மூன்று நிலை
களைத் தாண்டுகிறது.
உறுப்புகள் தாமாகவே இயங்குவது
ஒரு நிலை.
உறுப்புகள் மருத்துவர்களால் இயங்குவது
இரண்டாம் நிலை.
உறுப்புகள் எந்திரங்களால் இயங்குவது
மூன்றாம் நிலை.
உறுப்புகள் எந்திரங்களால் இயங்கத் தொடங்கிவிட்டால், மரணம் பெரும்பாலும் வார்டுக்கு வெளியே வராண்டாவில் நிற்கிறது என்று பொருள்.
சிறுநீரகம் செய்த வேலையை எந்திரங்கள் செய்யத் தொடங்கியபோதே, நம்பிக்கையில் பாதி நசிந்துபோனது.
-- கவிப்பேரரசு வைரமுத்து. ( தனது தந்தையார் ராமசாமி அவர்கள் மரணமடைந்தபோது எழுதியது... ).
-- ஆனந்த விகடன்.03-04-2013.

Friday, October 21, 2016

சர்.சி.வி.ராமன்..

" 'கம்பெனி கொடுப்பதற்காக மது அருந்தினேண்' -- 'நட்புக்காக குடித்தேன்' என்றெல்லாம் கூறுபவர்களுக்கு ஓர் அறிவுரை...?"
" பிரபல் விஞ்ஞானி சர்.சி.வி.ராமன் மேலை நாட்டுக்குச் சென்றபோது விருந்து ஒன்றில் ஒயின் குடிக்க அன்புடன் வற்புறுத்தப்பட்டார். அப்போது ராமன், "I want to see Raman's effect in Raman" என்று கூறி அன்புடன், அதே சமயம் உறுதியாக மறுத்தார். ஏற்றுக்கொள்வது மட்டுமல்ல, மறுப்பதும் ஒரு கலை. அதை அவசியமானபோது அவசியம் பயன்படுத்துங்கள்!"
-- கே.சரஸ்வதி, ஈரோடு.
"மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசுக்கு உள்ள சிறப்பு என்ன ?"
" நீர் - நீர்மூழ்கிக் கப்பல் ஊழல்
நிலம் -- விவசாயிகள் நிவாரண ஊழல்
காற்று -- 2ஜி அலைக்கற்றை ஊழல்
ஆகாயம் -- ஹெலிகாப்டர் பேர ஊழல்
நெருப்பு -- நிலக்கரி பேர ஊழல்
ஆக, பஞ்சபூத ஊழல் அரசு என்று மன்மோகன் சிங் அரசைக் குறிப்பிடலாம்!"
-- ( நானே கேள்வி... நானே பதில்! ) பகுதியில்.
-- ஆனந்த விகடன்.03-04-2013.

Thursday, October 20, 2016

எது நல்ல கொழுப்பு?

ரத்தத்தில் உள்ள மொத்தக் கொலஸ்ட்ரால் அளவு 200 மில்லி கிராமுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இதில் 20 சதவீதத்திலிருந்து 25 சதவீதம்வரை 'நல்லகொழுப்பாக' அமைய வேண்டும். அதாவது 40-45 மில்லி கிராம் அளவுக்காவது நல்ல கொழுப்பு இருக்க வேண்டும். இதை ஆங்கிலத்தில் ஹெச்.டி.எல். கொழுப்பு ( High - density lipoprotein -- HDL ) என்கிறார்கள். இயல்பாகவே பெண்களுக்கு மாதவிடாய் நிற்பதற்கு முன்பு, அவர்களுடய உடலில் இருக்கும் ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோனின் காரணமாக, சரியான விகிதத்தில் ஹெச்.டி.எல். அமைவதால் பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவாக இருக்கிறது.
ஹெச்.டி. எல். கொழுப்பு ஒரு போலீஸ்காரரைப் போல் செயல்பட்டு ரத்தக் குழாய்களில் ஆங்காங்கே படிந்த கெட்ட கொழுப்பை ( இதை low - density lipoprotein -- HDL என்கிறார்கள் ) கல்லீரலுக்கு இழுத்து வந்து பித்த நீர் வழியாக வெளியேற்றிவிடுகிறது. பொதுவாக ஹெச்.டி.எல். கொழுப்பு 35 மில்லி கிராமுக்குக் கீழே இருப்பது உடலுக்கு நல்லதல்ல.
நல்ல கொழுப்பை அதிகரிக்க வேண்டுமென்றால் முடிந்தவரை மாமிச உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். முட்டையில் மஞ்சள் கரு, கோழிக்கறியின் தோல், மூளை , ஈரல் முதலியவற்றைச் சாப்பிடக் கூடாது. நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
மாதவிடாய் நின்ற பெண்கள் ஹார்மோன் மாத்திரை ( HRT) சாப்பிடுவதன்மூலம் ரத்தத்தில் நல்ல கொழுப்பு குறையாமல் பார்த்துக்கொள்ளலாம். மாரடைப்பைத் தவிர்க்கலாம்.
-- 'நலம் தரும் மருத்துவம்' என்ற நூலிலிருந்து, சி. பன்னீர்செல்வன்.
-- 'தி இந்து' நாளிதழ்.( நலம் வாழ - இணைப்பு.) செவ்வாய், அக்டோபர் 28, 2014.

Wednesday, October 19, 2016

ஜன்னல் இல்லாத விமானம்

உலகில் முதன்முறையாக ஜன்னல் இல்லாத விமானம்.
பயணிகள் வான்வெளியை ரசிக்க முடியும்.
விமானத்தில் பயணம் செய்கிறவர்கள் இனி ஜன்னல் ஓர இருக்கையை கேட்டுப் பெற வேண்டிய அவசியம் இருக்காது. உலகிலேயே முதன்முதலாக ஜன்னல் இல்லாத, அதேநேரம் பயணிகள் வான்வெளியைப் பார்த்து ரசிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட விமானம், அதில் ஜன்னல்களுக்கு பதிலாக எடை குறைவான ஸ்மார்ட்ஸ்கிரீனை பொருத்த திட்டமிட்டுமிட்டுள்ளார்கள். இதன் மூலம் எரிபொருள் செலவு மிச்சமாவதால், விமானக் கட்டணமும் குறையும் என எதிர் பார்க்கப்படுகிறது.
இந்த ஸ்கிரீனுக்கு வெளிப்புறத்தில் கேமராக்கள் பொருத்தப்படும். இத்துடன் ஆர்கானிக் ஒளி உமிழும் டயோடு ( ஓஎல்இடி) தொழில்நுட்பத்தின் மூலம் இந்த விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் இன்டர்நெட்டில் உலவிக்கொண்டே வான்வெளியில் என்ன நடக்கிறது என்பதை ஸ்கிரீனில் பார்த்து ரசிக்க முடியும்.
மேலும் இந்த ஸ்மார்ட்ஸ்கிரீன் ஆன், ஆப் வசதி கொண்டதாக இருக்கும். இதன்மூலம் விரும்பும்போது வான்வெளியைப் பார்க்கவும், விரும்பாதபோது மூடிவிடவும் முடியும். இந்த விமானம் விரைவில் பரிசோதனை செய்யப்பட உள்ளது. எனினும் வர்த்தக ரீதியாக செயல்பாட்டுக்கு வர இன்னும் 10 ஆண்டுகள் ஆகலாம் என எதிர்பர்க்கப்படுகிறது.
-- தி.கார்டியன். ( சர்வதேசம் ).
-- 'தி இந்து' நாளிதழ். செவ்வாய், அக்டோபர் 28, 2014.

Tuesday, October 18, 2016

தில்லையும் திருப்பெருந்துறையும்.

நாம் ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சுகள் விடுகிறோம். 1 மணிக்கு 900 மூச்சுகள் ஒரு நாளைக்கு 21 ஆயிரத்து 600 மூச்சுகள் விட்டுக் கொண்டிருக்கிறோம்.
தில்லையம்பலத்திலே ஸ்ரீ நடராஜர் கருவறைக்கு மேல் உள்ள பொன் வேய்ந்த அந்தத் தகடுகளிலே அடிக்கப் பெற்றுள்ள தங்க ஆணிகள் 21 ஆயிரத்து 600. இது போல திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோயிலில் அருவமாகத் தகழும் ஆத்ம லிங்கத்திற்கு மேல் தளத்திலே அடிக்கப் பெற்றுள்ள ஆணிகள் 21 ஆயிரத்து 600.
-- தினமலர். பக்திமலர். மார்ச் 24, 2011 .இணைப்பு.

Monday, October 17, 2016

பூசைகளில் சிறந்த தலங்கள்

திருவனந்தல் -- திருக்குற்றாலம்.
காலை பூசை -- ராமேஸ்வரம்.
மத்தியான பூசை -- திருவானைக்கால்.
சாயங்கால பூசை -- திருவாரூர்.
ராக்கால பூசை -- மதுரை.
அர்த்தசாம பூசை -- சிதம்பரம்.
-- தினமலர். பக்திமலர். மார்ச் 24, 2011 .இணைப்பு.

Sunday, October 16, 2016

தெரியுமா? தெரியுமே1

* மகாபலியின் மகனின் பெயர் -- நமுசி.
* அத்திரி மகரிஷியின் மனைவி பெயர் -- அனுசூயா தேவி.
* சடாயு இறக்கைகளை இழந்த இடத்தின் பெயர் -- சிறகிழந்தநல்லூர்.
* ராமன், சீதையை தொலைத்த இடம் -- கோதாவரி நதிக்கரையில் உள்ள பஞ்சவடி.
* சங்கரலிங்க கோமதி அம்மன் ஸ்தலம் உள்ள ஊர் -- திருநெல்வேலிக்கு மேற்கே 35 மைல் தொலைவில் உள்ள சங்கரன்
கோவில்
* நாகதோஷம் நீக்கும் ஸ்தலம் -- திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகாவில் உள்ள திருப்புத்தகை எனும் புத்தகளூர் எனும்
ஸ்தலம்.
* கோபுரத்தின் நடுவே தெரியும் கூண்டு அமைப்பிற்கு தளம் என்று பெயர். எத்தனை தளங்கள் கொண்டதாக கோபுரம்
அமைகிறதோ அதற்கு ஏற்றாற்போல் கலசங்களும் 5, 7, 9, 11 என்ற கணக்கில் வைக்கப்படுகின்றன.

Saturday, October 15, 2016

சதாசிவ மூர்த்திகள்.

முகங்கள் -- திசை -- தொழில்
-----------------------------------------------------------------
சத்யோனாதம் மேற்கு அருளல்
வாமதேவன் வடக்கு மறைத்தல்
அகோரம் தெற்கு அழித்தல்
தத்புருஷம் கிழக்கு காத்தல்
ஈசானம் உச்சி படைத்தல்.
-- தினமலர். பக்திமலர். மார்ச் 31, 2011 .இணைப்பு.

Friday, October 14, 2016

அம்பிகையின் அங்கங்கள்

அம்பிகையின் அங்கங்களாக விளங்கும் அட்சரங்கள்!
1. அ - நெற்றிக்கு மேல் தலை உச்சி.
2. ஆ - நெற்றி.
3. இ - வலது கண்.
4. ஈ - இடது கண்.
5. உ - வலது காது.
6. ஊ - இடது காது.
7. ரு - வலது கபோலம்.
8. ரூ - இடது கபோலம்.
9. லு - வலது நாசித்துவாரம்.
10. லூ - இடது நாசித்துவாரம்.
11. ஏ - மேல் உதடு.
12. ஐ - கீழ் உதடு.
13. ஓ - மேல்பல் வரிசை.
14. ஔ- கீழ்ப்பல் வரிசை.
15. அம் - வலது தாடை.
16. அ: - இடது தாடை.
17 - 21. க1, க2. க3. க4, நு - இவை ஐந்தும் வலது கை.
22 - 26. ச.1, ச2, ஜ, ஜ்ஜ, ஞ -- இவை ஐந்தும் இடது கை.
27 - 31. ட1, ட2, ட3, ட4, ண -- இவை ஐந்தும் வலது கால்.
32 - 36. த1, த2, த3, த4, ந -- இவை ஐந்தும் இடது கால்.
37. ப1 -- வயிறு.
38. ப2 -- வலது ஸ்தனம்.
39 . ப3 -- இடது ஸ்தனம்.
40. ப4 -- கழுத்து.
41. ம -- ஹ்ருதயம்.
42 - 48 -- ய, ர, ல, வ, ச, ஷ, ஸ -- ஏழும் தோல், எலும்பு, ரத்தம், மாமிசம், மஞ்ஞை, மேதஸ், சுக்லம் என்னும் சப்த
தாதுக்களாகும்.
49. ஹ் -- நாபி ( தொப்புள் ).
50 , 51 -- எ, க்ஷ: -- உபசாரங்கள்.
-- தினமலர். பக்திமலர். மார்ச் 31, 2011 .இணைப்பு.

Thursday, October 13, 2016

வயிற்று வலி

வயிற்று வலிக்கான காரணங்கள்!
* நடுவயிற்றிலும், வலதுபக்க விலாவுக்குக் கீழ்கும் வலி வந்தால், அது வயிற்றுப் புண்ணாகவோ, பித்தக்கல் வலியாகவோ,
கணைய அழற்சி வலியாகவோ இருக்கலாம்.
* இரைப்பை, குடல் பகுதிக்குப் போகும் ரத்தக்குழாய்களில் உண்டாகும் அடைப்பு தீவிர வலி உண்டாக்கலாம்.
* நடுவயிற்றில் எரிச்சலுடங்கூடிய வலி, வயிற்றுப்புண் சார்ந்த வலியாக இருக்கலாம்.
* விலா எலும்பில் பின் முதுகின் இரு பக்கங்களில் இருந்து முன் பக்கம் சிறுநீர்ப்பை நோக்கி வரும் வலி, சிறுநீரகக் கல்லின்
வலியா இருக்கலாம்.
* பெண்களுக்கு அடிவயிற்றின் இரு பக்கவாட்டில் வரும் வலி, சினைப்பைக் கட்டிகளின் வலியாக இருக்கலாம். அடிவயிற்றின்
மையப் பகுதியில் வரும் வலி நார்க்கட்டி வலியாக இருக்கலாம்.
இதைத் தண்டி அப்பெண்டிக்ஸ் வலி, அடினோமயோசிஸ் வலி... என வலிக்கு பல காரணங்கள் இருக்கின்றன. எல்லா வலிக்கும் 'ஒரு சோடா குடிச்சா, சரியாப் போயிடப்போகுது' என்ற அலட்சியமும், 'ஓ பகவான் கூப்பிட்டுட்டார்' என்ற பதற்றமும் ஆகாது. குடும்ப மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டு நடப்பது முக்கியம் !
-- மருத்துவர் கு.சிவராமன். ( நலம் 3600 ).
-- ஆனந்த விகடன். 6-8-2014.

Wednesday, October 12, 2016

"உயிர்க்கொலை"


"உயிர்க்கொலை செய்து உணவாக அருந்துவது பாவம் இல்லையா?"
"தர்ம வியாதர்னு ஒரு துறவியை கௌசிக முனிவர் சந்திச்சு பல தத்துவ விளக்கங்கள் கேட்கிறார். அதே தர்ம வியாதர் காலையில் சந்தையில் மாட்டு இறைச்சி விக்கிறார். 'அய்யா, உயிர்க்கொலை பாவம் இல்லையா?னு கௌசிக முனிவர் கேட்டார். 'எங்க பரம்பரைத் தொழிலை நான் செய்கிறேன். இதில் தப்பு இல்லை. இந்த உலகத்தில் வலிமையான உயிர்கள், பலவீனமான உயிர்களை அடிச்சுச் சாப்பிடுகிறது இயற்கை நியதி. எலியை பூனையும், பூனையை நாயும், நாயை ஓனாயும், மானைப் புலியும் அடிச்சு சாப்பிடுது. ஒரு ஆட்டைக் கொலை பண்ணா, ஒரு உயிர்தான் போகுது. ஒரு கை சாதத்துல உயிருள்ள சுமார் 500 நெல் வெந்து அரிசியாகியிருக்கு. ஒரு நெல்லும் உயிருள்ளதுதான்; ஒரு ஆடும் உயிருள்ளதுதான். நெல்லுக்கு உயிர் இருக்குனு, நாம சாப்பிடாம இருக்க முடியுமா? 500 வருஷ ஆலமரம் கீழே விழுந்து மண்ணோட மக்கிப்போகும்போது, அந்த ஆலமரத்தின் சாற்றை உண்டுதான் புதுச் செடி முளைக்கிறது. ஆக, உயிர்க்கொலை தவிர்க்க முடியாது'னு சொன்னாராம். இது மகாபாரதக் கூற்று.
என்னைக் கேட்டா, 40 வயசு வரைக்கும் உடல் பலத்துக்கு அசைவம் சாப்பிடுங்க. அப்புறம் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க சைவத்துக்கு மாறிடுங்க!"
-- விகடன் மேடை. ( வாசகர் கேள்விகள்... சிவகுமார் பதில்கள்.)
-- ஆனந்த விகடன். 6-8-2014.

Tuesday, October 11, 2016

நீர் ஆதாரம் கண்டுபிடிப்பு

பூமியின் ஆழத்தில் பரந்து கிடக்கும் நீர் ஆதாரம் கண்டுபிடிப்பு
எதிர்காலத்தில், கோடிக்கணக்கான மக்களின் தாகத்தை தீர்ப்பதற்குத் தேவையான நீர் ஆதாரத்தை, விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
விஞ்ஞானிகள், பூமிக்கு உள்ளே, உலகின் மிகப் பெரிய, கடலைப் போன்று மூன்று மடங்கு அதிகமான நீர் ஆதாரத்தை கண்டுபிடித்துள்ளனர்.
பிரேசிலில் உள்ள ஒரு எரிமலையில் இருந்து வெளியேறிய கற்களில், ஒரு சதவீதத்துக்கு, தண்ணீர் இருந்ததை ஆதாரமாகக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது.
இதையடுத்து, வட அமெரிக்காவின் நிலப்பரப்பிற்குக் கீழ், எரிமலைக் குழம்புகளாலான பாறைகள் நிறைந்துள்ளதையும், அப்பகுதியில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரத்தையும் கண்டுபிடித்தனர். பூமிக்கடியில், 640 கி.மீ., ஆழத்தில், பாறை இடுக்குகளில், தனிம மூலக்கூறு வடிவில் தண்ணீர் நிறைந்துள்ளது.
இதன் மூலம், பூமிக்கடியில் பரந்த அளவில் தண்ணீர் இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய முழுக் கடலளவை விட மூன்று மடங்கு அதிக தண்ணீரைக் கொண்டதாக உள்ளது.
-- தினமலர் சென்னை. ஞாயிறு 15-6-2014.

Monday, October 10, 2016

துளசி செடி

உலகில் நாள் முழுவதும் ஆக்ஸிஜனைத் தரும் தாவரங்கள் அரசமரம், மூங்கில் மற்றும் துளசி ஆகியவை. இதில் அரசமரம் வளந்து பயன்தர குறைந்தது 10 வருடங்கள் ஆகும். மூங்கில் வளர்ந்து பலன்தர 3 முதல் 5 ஆண்டுகள் ஆகும். ஆனால், துளசிச் செடி 2 மாதங்களில் வளர்ந்து சுவாசப்பலன் தரத் துவங்கிவிடும். வீட்டு மொட்டை மாடியில் கூட துளசிச்செடிகளை வளர்க்கலாம். மற்ற எந்த செடிக்கும் இல்லாத அறிவியல் தன்மை துளசிச் செடிக்கு உண்டு என்பதை அறிவியலாளர்கள் நிரூபித்துள்ளனர்.
பிற செடிகளில் நாள் ஒன்றுக்கு 0.06 லிட்டர் வரை மட்டுமே ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யமுடியும். ஆனால், துளசிச்செடி ஒரு குறு மரத்திற்கு இணையாக ஒரு லிட்டருக்கு மேலும் கூட ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் ஆற்றல் பெற்றது. இதனால்தான் தமிழர்கள் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வீடுகளில் துளசிச் செடிகளை வளர்த்து வந்துள்ளனர். இது மட்டுமல்லாமல் உயரிய மருத்துவ குணமும் துளசிக்கு உண்டு. தினமும் 4 துளசி இலைகளை உட்கொண்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது மருத்துவ விஞ்ஞானம் நிரூபித்துள்ள உண்மை. ஒரு மனிதன் சராசரியாக நாள் ஒன்றுக்கு 16 லிட்டர் கார்பன் -டை- ஆக்ஸைடை வெளிவிடுகிறான். வளர்ந்த மரம் 3 முதல் 8 லிட்டர் வரை ஆக்ஸிஜனை வெளிவிடுகிறது. துளசிச்செடியோ 24 மணினேரத்தில் ஒரு லிட்டர் ஆக்ஸிஜனை வெளிவிடுகிறது. ஒரு வீட்டில் 16 துளசிச் செடிகளை வளர்த்தால் வளி மண்டலத்தில் வெளிவிடப்படும் கரியமில வாயு மாசுவை ஓரளவிற்காவது ஈடு செய்ய முடியும். எனவே வீடுகளில் துளசிச் செடிகளை வளர்ப்போம், காற்றில் 'பிராணவாயு' எனப்படும் ஆக்ஸிஜன் அளவை நிலை நிறுத்துவோம்.
--தினமலர். திருச்சி 26-10-2014.

Sunday, October 9, 2016

காஷ்மீர்


காஷ்மீருக்கு தனி அந்தஸ்து தேவையா?
இப்போதைய சிறப்பு அந்தஸ்துப்படி, ஜம்மு - காஷ்மீர், ஒரு மாநிலமாக இருந்தாலும், தனி நாடு போன்றே, அதிகாரங்களை பெற்றுள்ளது. வெளிமாநிலத்தவர் யாரும், அங்கு நிலம் வாங்க முடியாது.
மத்திய அரசின், ராணுவம், உள்துறை போன்ற சில துறைகளின் செயல்பாடுகள்தான், இந்த மாநிலத்தை கட்டுப்படுத்தும். மத்திய அரசின் பல சட்டத்திட்டங்கள், இங்கு செல்லுபடியாகாது. உதாரணமாக, கல்வி உரிமை சட்டம், சிறுபான்மையினருக்கான சலுகைகள், பஞ்சாயத்துக்கள், மாநகராட்சிகளுக்கான அதிகாரங்கள் இந்த மாநிலத்தில் செயல்படாது.
இந்திய அதிகார சட்டங்கள், குற்ற ஒழுங்குமுறை சட்டம், மனித உரிமைகள் சட்டம், சி.பி.ஐ.,யின் செயல்பாடுகள் போன்றவையும், இந்த மாநிலத்திற்கு பொருந்தாது. மத்திய அரசின் விசாரணை கமிஷன்கள், இங்கு விசாரணை நடத்த இயலாது.
பார்லிமென்ட் வழியாக, மற்ற மாநிலங்களூக்கு சட்டம் இயற்றும், ஜம்மு - காஷ்மீர் மாநில மக்கள் பிரதிநிதிகள், அந்த சட்டத்தை, இங்கு செயல்படுத்த முடியாது. இங்கு தேசியக் கொடியோடு, காஷ்மீருக்கான கொடியும் உள்ளது. இங்கு பதவி ஏற்கும் மக்கள் பிரதிநிதிகள், இந்தைய அரசியல் சட்டத்தின்படி பதவியேற்பது இல்லை.
இங்குள்ள மக்கள், வெளிமாநிலத்தவரை திருமணம் செய்தால், காஷ்மீர் குடிமகன் என்ற அந்தஸ்தை இழப்பர். இது குடிமகனின் அடிப்படை உரிமையை மீறுவதாகும்.
மற்ற மாநிலங்களில், சட்டசபையின் பதவிக் காலம், ஐந்து ஆண்டுகள் என்றால், இங்கு ஆறு ஆண்டுகள். இந்த மாநிலத்தில், நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே, மாநில சட்டசபை தேர்தலில் ஓட்டளிக்க முடியும். மற்றவர்கள், பஞ்சாயத்து உறுப்பினர்கள் கூட ஆக முடியாது. ஆனால், லோக்சபா தேர்தலில், இங்கு வசிப்பவர்கள் ஓட்டளிக்கலாம்.
இப்படி, அரசியல் சட்டத்தின் படி , ஏராளமான சலுகைகள் தரப்பட்டு உள்ளன. இது தேவையா?
-- கே.ஆர். ஆல்பர்ட், , சென்னை.
-- தினமலர் சென்னை. ஞாயிறு 15-6-2014.

Saturday, October 8, 2016

சூரியகாந்த புயல்

பூமியை நோக்கி வரும் சூரியகாந்த புயல்
பல ஆண்டுகளுக்குஒரு முறை, சூரியனின் மேற்பரப்பில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களால், கொந்தளிப்பு ஏற்பட்டு, சூரியப்புயல் தோன்றும்.
மூன்று விதங்களில் சூரியகாந்தப் புயல் தோன்றும். முதலில், மின்காந்தத் தூண்டல் கதிர்வீச்சும், இரண்டவதாக, புரோட்டன்கள் நிறைந்த அதிர்வலை கதிவீச்சும், மூன்றாவதாக, சூரியனின் கரோனா என்னும் மேற்பரப்பில் தோன்றும், பிளாஸ்மா கதிர்வீச்சும் நிகழும்.
இந்த கதிவீச்சுக்கள், பூமியை நோக்கி வந்தாலும், பூமிக்கு எந்தவித பெரிய பாதிப்பும் ஏற்படாது.
ஆனால், உலக நாடுகள் அனைத்தும், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, பல செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்பியுள்ளன.
இந்த செயர்கைக் கோள்களின் உதவியால்தான், பூமியில் தகவல் மற்றும் தொலைத்தொடர்புகள் இயங்குகின்றன. இந்திலையில், கடந்த இரு தினங்களுக்கு முன், சூரியனின் வலது மேற்புறத்தில், பிளாஸ்மா புயல் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட காந்த அலைகள் பூமிய நோக்கி வருவதை, அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.
இந்த அலைகள், செயற்கைக்கோள்களைக் கடந்து வரும்போது, அவற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது என அவர்கள் கூறுகின்றனர்.
மேலும், பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் இந்த அலைகள், பூமியின் எந்தப் பகுதியை தாக்கும் என்பது தெரியவில்லை என்றும், இந்த புயலுக்கு, 'எக்ஸ்' என்று பெயரிட்டுள்ளதாகவும், விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
-- தினமலர் சென்னை. ஞாயிறு 15-6-2014.

Friday, October 7, 2016

வெளிநாட்டுக் கோயில்கள்.

மகா கைலேஸ்வர் மந்திர்
இந்தியாவில் சில சிவன் கோயில்களில் சகஸ்ரலிங்கம் உள்ளது. உதாரணத்திற்கு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சகஸ்ரலிங்கம் உள்ளது. சகஸ்ரலிங்கம் ஆயிரம் லிங்கங்களால் ஆன லிங்கம் என்று பொருள்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சண்டா கிளாரா பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ மகா கைலேஸ்வர் ஆலயம். அமெரிக்காவின் முதல் ஜோதிர்லிங்க சிவ ஆலயம் இதுவே ஆகும்.
இந்த ஆலயத்தில் 2010ம் ஆண்டு, ஆகஸ்ட் 28ம் தேதி சென்னை காளிகாம்பாள் ஆலயக் குருக்களான சுவாமி சதாசிவத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, திறந்து வைக்கப்பட்டது.
இந்த ஆலயத்தில் நிறுவப்பட்டுள்ள சகஸ்ரலிங்கம், 2 டன் எடை கொண்டது. கிரானைட் கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே லிங்கத்தில் 1116 சிறிய சிவலிங்கங்களை கொண்ட சகஸ்ரலிங்கம் இந்த ஆலயத்தில் மூலவராக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலயத்தில் இந்துக்களின் பாரம்பரிய முறையிலான உடைகளை அணிந்து வர அனுமதிக்கப்படுகிறது.
ஆலய முகவரி :
Sri Maha Kaleswar mandir
2344 A Walsh Avenue ( Bldg. F. Santa Clara Commerce Park )
Santa Clara, CA 95051
இமெயில் : info@ srimahakalmandir. org.
இணையதளம் :
http:// srimahaka- lmandir.org/
-- தினமலர். பக்திமலர். 9-10-2014.

Thursday, October 6, 2016

Wednesday, October 5, 2016

பஞ்சபூதங்கள்.

மேற்கத்திய மரபில் ஐம்பூதங்கள் கிடையாது. ஆகாயம் நீங்கலாக, அங்கே நான்கு பூதங்கள்தான் ( எலிமண்ட்ஸ் -- elements ). ஆகாயம் என்று அழைக்கப்படும் வெளியையும் ஒரு அடிப்படை இயற்கைப் பொருளாக வைத்திருப்பது இந்திய மரபின் சிறப்பு. பிரபஞ்சம் முதல் நம் உடல் வரை ஐம்பூதங்களின் சேர்க்கைதான் என்று இங்கே நம்பப்படுகிறது. பௌதிகம் என்ற சொல்லுக்கு ஐம்பூதங்களால் ஆனது என்பது பொருள். உயிரற்ற நமது உடலை பூதவுடல் என்று மரியாதையாகச் சொல்வதை இதனுடன் தொடர்புபடுத்திப் பார்க்கலாம். அதேபோல், பஞ்சதம் என்ற ஒரு சொல் மரணத்தைக் குறிக்க முன்பு பயன்பட்டிருக்கிறது. பஞ்சபூதங்களும் பிரிந்து தனித்தனியாவதால் மரணம் ஏற்படும் என்பது இதன் அடிப்படைப் பொருள். பஞ்சபூதங்களின் சேர்க்கை இயற்கையாக நடைபெற்றதேயொழிய கடவுளின் முயற்சியால் அல்ல என்று நம்பும் உலகாயவாதத் தத்துவம்தான் பூதவாதம்.
-- ஆசைத்தம்பி. ( அறிவோம் நம் மொழியை ).
-- 'தி இந்து' நாளிதழ். வியாழன், செப்டம்பர் 13, 2014.

Tuesday, October 4, 2016

பாரதியின் நினைவு நாள்!

தமிழ் ஆராய்ச்சியாளர் பேரவை வலியுறுத்தல்
மகாகவியாக இன்றும் போற்றப்படும் பாரதியாரின் நினைவு நாளில் குழப்பம் உள்ளது. சென்னை திருவல்லிக்கேணி டி.பி. கோவில் தெருவில் வாழ்ந்தபோதுதான் பாரதியாருக்கு மரணம் ஏற்பட்டது. இதுகுறித்து செப்-21-ல் சென்னை மாநகராட்சிப் படிவேட்டில் பாரதி மறைந்த நாள் செப்.12, 1921- என்று பதிவும் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வை உறுதிப்படுத்தும் வகையில் பாரதியின் பாடல்களை ஆய்வுப் பதிப்பாக ம.ரா.போ. குருசாமியை பதிப்பாசிரியராகக் கொண்டு தமிழ் பல்கலைக்கழகம் வெளியிட்ட நூலில் 1921 நாள் செப்டம்பர் 12, 1.30 மணி என குறிப்பிடப்பட்டுள்ளது.
1996-ல் பாரதி வரலாற்று ஆய்வாளர்களில் ஒருவரான சீனி. விசுவநாதன் வெளியிட்ட 'மகாகவி பாரதி வரலாறு' என்ற நூலில், தென்னாட்டுக்கவி சிரேஷ்டர் எனப் போற்றப்பட்ட வரகவி பாரதி 1921 செப்.12-ம் தேதியில் இந்த உலக வாழ்வைத் துறந்து விண்ணவர்க்கு விருந்தாகிவிட்டார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்.
வானதி பதிப்பகத்தார் வெளியிட்ட மகாகவி பாரதியார் கட்டுரைகள் என்னும் பெயரில் வெளியிடப்பட்ட நூலில் 1921 செப் 12-ம் நாள் யாமம் 1.30 மணி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் தமிழக அரசும், புதுவை அரசும் செப்-11 ம் தேதியை பாரதியின் நினைவுநாளாகக் கடைபிடிக்கின்றன. இதற்கு காரணம் பாரதி மறைந்தது செப்-11ம் தேதி பின்னிரவு 1.30 ( அதாவது செப்-12ம் தேதி அதிகாலை 1.30 ) என்பதுதான். எனவே, தமிழக மற்றும் புதுவை அரசுகள் இந்த ஆண்டிலிருந்து பாரதியாரின் நினைவு நாளை செப்- 12-ல் கடைப்பிடிக்க வேண்டும்.
-- ( மாநிலம் ).
-- 'தி இந்து' நாளிதழ். வியாழன், செப்டம்பர் 4, 2014.

Monday, October 3, 2016

'1950 டிஏ' விண்கல்

'1950 டிஏ' என்று பெயரிடப்பட்ட அந்த விண்கல், 44,800 டன் எடையும், ஒரு கி.மீ. அகலத்தோடும் இருக்கிறதாம். இது விநாடிக்கு ஒன்பது மைல் வேகத்தில் பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. 2880 -ம் ஆண்டில், இது மணிக்கு 38 ஆயிரம் மைல் வேகத்தில் பூமி மீது மோதலாம் என்று பயமுறுத்துகிறார்கள் விஞ்ஞானிகள். 'அப்படி மோதினால், பூமி அதிபயங்கர சத்ததுடன் வெடித்து, தட்பவெப்ப நிலையில் மாற்றம், சுனாமி, நிலநடுக்கம்... என அடுக்கடுக்கான பாதிப்புகளால் பேரழிவு ஏற்படும். அதனால், மனித குலம் முற்றிலுமாக அழிந்தேவிடும்!' என்கிறார்கள். இன்னொரு தரப்பு விஞ்ஞானிகளோ, 'அது பூமியை நோக்கி வருவது உண்மைதான். ஆனால், அது பூமியில் மோத 300-ல் ஒரு பங்குதான் வாய்ப்பு இருக்கிறது!' என்கிறார்கள். -- இப்பவே பயமுறுத்துற மாதிரி ஆராய்ச்சி பண்ணுங்கப்பா!
வெனிசுலா
வெனிசுலா நாட்டில் ஒரு பாக்கெட் பால் வாங்க உங்கள் கைரேகையைப் பதிக்க வேண்டும். காரணம், அந்த அளவுக்கு உணவுப் பஞ்சம். ஒரே நபர் அதிகப் பொருட்களைப் பெறுவது, கள்ளச்சந்தை உருவாக்குவது போன்ற செயல்களைத் தடுக்கவே இந்த நடைமுறை. -- ஃபிங்கர் பிரின்ட் ஸ்கேனர் இருக்கு... பால் இல்லையா?
-- இன்பாக்ஸ்.
-- ஆனந்த விகடன். 3-9-2014.