Tuesday, December 8, 2015

பிட்காயின்

பிட்காயின்களுக்கு வியட்நாம் தடை.
      வியட்நாமிலுள்ள வங்கிகள் பிட் காயிங்களைக் கையாளக்கூடாது என அந்நாட்டு அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.  டிஜிட்டல் நாணயமான பிட் காயின்கள் யாரால் பரிவர்த்தனை செய்யப்படுகின்றன என்பதைப் பிறர் அறியாமல் பயன்படுத்த முடியும்.  சங்கேத குறியீடுகளைப் பயன்படுத்தி மின்னணு முறையில் பிட் காயின்கள்பரிவர்த்தனை செய்யப்படுகின்றன.
    "பிட்காயின்களின் உரிமையாளர்,வர்த்தகம், பரிவர்த்தனை, அதன் சொத்து மதிப்பு ஆகியவை அவற்றைப் பயன்படுத்துபவர்களுக்கு அபாயத்தை அளிப்பவை.  இதனைப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது.  பிட் காயின்கள் மூலம் முதலீடு செய்வது, பரிவர்த்தனைகளை மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகள் சட்ட விரோதமானவை" என வியட்நாம் ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.
     வியட்நாமில் பிட் காயின்கள் அதிக அளவு பயன்படுத்தப்படுவதில்லை.  இருப்பினும் பிட் காயின்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
     கடந்த செவ்வாய்க்கிழமை பிட் காயின்களின் மிகப் பெரிய பரிவர்த்தனை சந்தையான ஜப்பானின் எம்டி காக்ஸ் ( எம்டி ஜி ஓஎக்ஸ் ) திடீரென முடங்கியது.  இது பிட் காயின்களைப் பயன்படுத்துவோரிடையேபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
-- பி.டி.ஐ.  சர்வதேசம்.
--  'தி இந்து' நாளிதழ். சனி, மார்ச் 1,2014.  

No comments: