Tuesday, December 29, 2015

டிப்ஸ்... டிப்ஸ்...

*  காய்களை விரைவாகவும் பதமாகவும் வேகவைக்க வேண்டுமா... தோல் சீவிய காய்களை வேகவிடும்போது, முதலில்
    தண்ணீரைக் கொதிக்கவிட்டு, பின்னர் காய்களைப் போட வேண்டும்.  தோலுடன்கூடிய காய்களை வேகவிடும்போது,
    காய்களை பச்சை தண்னீரில் போட்டு, பிறகு வேக வைக்க வேண்டும்.  'மைக்ரோவேவ் அவன்' என்றாலும், இதே போலவே
   வேகவைக்கலாம்.
* மோர்க்குழம்பு மிச்சம் இருக்கிறதா?... அதில் பாதியளவு அரிசி மாவைக் கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.  வாணலியில்
   நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, பெருங்காயம், உளுத்தம் பருப்பு, இரண்டு மூன்று மோர் மிளகாய்கள் ஆகியவற்றைத் தாளித்து,
  கரைத்து வைத்துள்ள மோர்க்குழம்பை ஊற்றி 2 நிமிடங்கள் கிளறினால்... மோர்க்களி தயார்.  அரிசி மாவை வறுத்துச் சேர்த்தால்
  உதிர் உதிரான மோர் உப்புமா கிடைக்கும்.
--- அவள் விகடன். 11-3-2014.  இதழ்...400.
-- இதழ் உதவி : செல்லூர் கண்ணன்.    

No comments: