Monday, December 28, 2015

பொது அறிவு

*  முதலாம் ராஜராஜ சோழன் காலத்தில், அவருடைய நாட்டில் வாழ்ந்த 400 சிறந்த நடனக் கலைஞர்களின் பெயர்கள் தஞ்சை
   பெரிய கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.
*  அறக்கட்டளை ஒன்றுக்கு நிதி சேகரிக்கும் நன்முயற்சியாக, 400 விஷ சிலந்திகளுடன் மூன்று வாரங்கள் வசித்து உலக சாதனை
    படைத்தார் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரைச் சேர்ந்த 67 வயதான நிக் லீ சொய்ப் என்ற பெண்மணி.
*  எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூறு எனும் தொகைநூல் 400 பாடல்களைக் கொண்ட புறத்திணை சார்ந்த சங்கத்
    தமிழ் பாடல்கள் கொண்ட நூலாகும்.
*  சென்னையின் புகழ்பெற்ற அண்ணா சாலை ( மவுன்ட் ரோடு ), உருவாக்கப்பட்டு 400 ஆண்டுகள் ஆகின்றன.
*  பூமியின் அளவும், எடையும் கொண்ட ( கற்பாறைகள் மற்றும் இரும்பால் ஆன ) கோள் ஒன்று, சுமார் 400 ஒளி ஆண்டுகள்
   தொலைவில் இருப்பதாக கண்டரியப்பட்டு, கெப்லர் 78 பி ( KEPLER 78B ) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
*  கவிஞர் கண்ணதாசன் எழுதிய ஏசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை கவிதை வடிவில் கூறும், 'ஏசு காவியம்' என்ற நூல்,
   400 பக்கங்களைக் கொண்டதாகும்.
*  400 கி.மீ.நீளம் கொண்ட தென்னிந்தியாவின் முக்கிய ஆறுகளில் ஒன்றான தென் பெண்ணை ஆறு, கர்நாடக மாநிலம் சிக்க
    பல்லபூர் மாவட்டம், நந்தி மலையில் பிறந்து, தமிழ்நாட்டின் பல மாவட்டங்களை கடந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
-- அவள் விகடன். 11-3-2014.  இதழ்...400.
-- இதழ் உதவி : செல்லூர் கண்ணன்.   

No comments: