Sunday, December 27, 2015

கம்மல் கம்ப்யூட்டர்

முக அசைவுகளால் இயங்கும் கம்மல் கம்ப்யூட்டர்
ஜப்பான் விஞ்ஞானிகள் சாதனை.
    டோக்கியோ:
    கம்மலை போல் காதில் மாட்டிக்கொண்டு முக அசைவுகளால் இயங்கக்கூடிய 17 கிராம் எடை கொண்ட மிகச்சிறிய கம்ப்யூட்டரை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
    கம்ப்யூட்டர் யுகம் தொடங்கிய காலத்தில், வீடு அளவு பெரிதாக இருந்த கம்ப்யூட்டரில் வெறும் கணக்குகள் மட்டுமே போட முடியும் என்ற நிலை இருந்தது.  அதன்பின், கம்ப்யூட்டரின் அளவு குறைந்து, அதன் திறன் பலமடங்கு அதிகரிக்க தொடங்கியது.
    இந்த  கம்ப்யூட்டர், கைகளை பயன்படுத்தாமல் கண் சிமிட்டல், நாக்கை வளைப்பது, உதட்டை கோணுவது, புருவத்தை உயர்த்துவது, மூக்கை அசைப்பது போன்ற முக அசைவுகள் மூலமாகவே இயக்கலாம்.
    புளூடூத் வசதிக்கொண்ட இந்த கருவியில் சாப்ட்வேர் பதிவிறக்கம், தகவல்களை சேகரிப்பு போன்ற வசதிகள் உள்ளன.  மேலும், நாம் இருக்கும் இடத்தை அறிய உதவும் ஜிபிஎஸ், கைரோ சென்சார் தொழில்நுட்பங்களும் மைக், ஸ்பீக்கர் போன்ற வசதிகளும் உள்ளன.
    மலையேற்ற வீரர்கள் போன்ற, கைகளை பயன்படுத்தாமல் கம்ப்யூட்டர் உபயோகிக்க வேண்டிய தேவை உள்ளவர்களுக்கும்
மாற்றுத்திறனாளிகளுக்கும் இந்த கம்ப்யூட்டர் மிகவும் உபயோகமாக இருக்கும்.
    இந்த கருவியின் ஆற்றல் குறித்து பேசிய ஆராய்ச்சியாளர் கசுஹிரோ டனிகுச்சி, " இந்த கருவியை மாட்டிக்கொண்டு நாம் ஒரு நட்சத்திரத்தை பார்த்தால், நாம் எந்த நட்சத்திரத்தை பார்க்கிறோம், அதை எந்த கோணத்தில் பார்க்கிறோம், நாம் பார்க்கும் நட்சத்திரத்தை நம்மை போல் உலகில் வேறு யாரெல்லாம் பார்க்கிறார்கள் என்ற தகவல்களை கம்ப்யூட்டர் தெரிவிக்கும்.
    மேலும், நம் உடலிலேயே இந்த கருவி பொருத்தப்படுவதால், நமது உடல்நிலை குறித்த தகவல்களை தருவதோடு உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டால் நம்மை எச்சரிக்கவும் செய்யும்" என்றார்.
-- தினமலர்.  02-03-2014.  

No comments: