Friday, December 25, 2015

பார்னம் விளைவு

  உளவியலில் பார்னம் விளைவு என்ற அம்சம் ஒன்று உண்டு.  பார்னம் சர்க்கஸின் வெற்றிக்குக் காரணம்.  அதன் விதவிதமான ஆட்டங்கள் பலதரப்பட்ட மக்களுக்குப் பிடித்திருப்பதுதான்.  எல்லோருக்கும் எல்லாமும் பிடித்திருக்க வேண்டிய கட்டாயம் கிடையாது.  ஆனாலும், ஒன்றிரண்டு ஆட்டங்கள் பிடித்திருப்பதால் சர்க்கஸ் முழுவதும் பிடித்திருக்கிறது.  இதே போன்று பல கணிப்புகள் சொல்லப்பட்டலும், பலித்திருக்கும் கணிப்பை மட்டும் நினைவில்கொள்கிறது.
    நம்பிக்கை சார்ந்த எதையும் மக்களுக்குத் தர்க்கரீதியாகப் புரியவைப்பது கடினம்.  சோதிடம் நம்பிக்கையைச் சார்ந்தது.
அறிவியலின் கடும் சோதனைகளுக்குத் தன்னை உட்படுத்திக்கொண்டிருக்கிறது.  அதனால் மாறுதல்களையும் அடைந்திருக்கிறது.  உதாரணமாக, புளூட்டோ என்ற 'முன்னாள்' கோள், இன்று கோளாக அடையாளம் காணப்படுவது இல்லை.  சோதிடம் இதே போன்று சோதனைகளுக்குத் தன்னை ஆட்படுத்திக்கொள்ள முடியுமா?
--- பி.ஏ.கிருஷ்ணன்.  கருத்துப் பேழை.
--  'தி இந்து' நாளிதழ். திங்கள்,  மார்ச் 3  ,2014.  

No comments: