Monday, December 21, 2015

இன்றைய பௌத்தம்.

அரச மரத்தைப் போற்றுவது ஏன்?
     தமிழகத்தில் பௌத்த, சமண எச்சங்கள் நம்மிடையே பல வகைகளில் இன்னமும் எஞ்சியிருக்கின்றன.  அதற்கான ஒரு நல்ல அடையாளம், அரச மரத்தைப் போற்றுவது.
     போதி என்று பாலி, வடமொழியில் அழைக்கப்படும் அரச மரம், பௌத்தர்களின் புனித மரம்.  அரச மரத்தடியில் நீண்ட காலம் செய்த தியானத்தின் முடிவில் புத்தருக்கு ஞானம் கிடைத்ததே இதற்குக் காரணம்.  இதனால் புத்தரைப் போலவே, அரச மரத்தைப் போற்றுவது பௌத்தர்களின் வழக்கம்.
     பழந்தமிழ் நூல்கள் பலவும் புத்தரைப் போதி மரத்துடன் இணைத்தே கூறுகின்றன.  பௌத்த மதத்தைப் பின்பற்றுவோரைத் தேவாரம் 'போதியர்'.  அதாவது அரச மரத்தைத் தொழுவோர் என்று குறிப்பிடுகிறது.  சங்ககாலத்தில் இருந்தே பௌத்த புலவர்களுக்கு 'இளம்போதியர்' என்று பெயர் இருந்ததாகப் பௌத்த அறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி குறிப்பிடுகிறார்.
-- ஆனந்த ஜோதி.
-- 'தி இந்து' நாளிதழ். வியாழன், மார்ச் 6,2014.    

No comments: