Monday, December 14, 2015

அரசன் -- தெய்வம்


"அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்.  நீதி...?"
"எங்கோ, எப்போதோ படித்த கவிதை ஒன்று என் நினைவுக்கு வருகிறது...
 'ஒரு
  மருத்துவரின் தவறு
  ஆறடி மண்ணில்
  புதைந்துவிடுகிறது.
  ஒரு
  நீதிபதியின் தவறோ
  ஆறடி உயரத்தில்
  தொடங்கிவிடுகிறது !'
  புரிஞ்சுதா?"
-- முத்தூஸ், தொண்டி.
"லட்சக்கணக்கான மக்கள் வறுமையில் வாடும் இந்தியாவில், 450 கோடி செல்வுசெய்து ராக்கெட் விடுவது தேவையா?"
"லட்சக்கணக்கான மக்கள் வறுமையில் வாடும் இந்தியாவில், தீபாவளியன்று நாம் விடும் பொம்மை ராக்கெட்டுகளின் மதிப்பு
அந்த 450 கோடியையும் மிஞ்சும் சாரே.  அது தேவையா என்று முதலில் சொல்லுங்கள் !"
-- ஜெ.சரவணன், சென்னை.
-- நானே கேள்வி...நானே பதில் ! பகுதியில்...
-- ஆனந்த விகடன்.11-12-2013.                                 

No comments: