Thursday, October 8, 2015

பொன்மொழி

*  ஆங்கிலேயர்கள் இல்லாமலேயே ஆங்கில ஆட்சியை விரும்புகிறோம்.  புலி இருக்கக் கூடாது.  ஆனால், புலியின் சுபாவம்
    இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்.  - மகாத்மா காந்தி.
வலைஞர் வாக்கு.
*  நண்பன் ஜெயிச்சதுல இருக்குற சந்தோஷத்தைவிட நம்ம கூட அவனும் தோத்து உக்காந்தா கிடைக்கற சந்தோஷம் ஜாஸ்தி !
பொது அறிவு.
*  எந்த ஒரு மனிதனாலும் கண்ணைத் திறந்துகொண்டு தும்மல் போட முடியாது.
எண்ணங்கள்
*  நான் இப்போதும் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தனாகவே வாழ்கிறேன்.  அதற்காக எனக்கு ஒரு பக்குவம் வரக் கூடாதா என்ன...
   ரோம சாம்ராஜ்யம் எங்கள் முன்னோர்களைச் சிந்திக்கவிடாமல் சிலுவையைச் சாத்தி அமைதியாக்கியதுபோல, என்னையும்
   சிந்திக்காமல் அமைதியாக்கிவிட முடியாது.  பைபிளையும் ஜெபமாலையையும் பிரம்மாண்டமான தேவாலயங்களையும் எங்கள்
   பொறுப்பில் விட்டுவிட்டு, எங்கள் சொத்துகளை அவர்கள் எடுத்துச் சென்றுவிட்டார்கள். -- எழுத்தாளர் ஜோ டி குரூஸ்.
--  ' தி இந்து ' நாளிதழ்களிலிருந்து.  

No comments: