Thursday, October 29, 2015

தெரிஞ்சுக்கோங்க...!

*  கோலம் :  அரிசி மாவினால் கோலம் போட வேண்டும்.  அந்த இல்லத்தில் லட்சுமி தாண்டவம் ஆடுவாள் என்கிறது சாஸ்திரம்.
                     கணவன் வீட்டைவிட்டு செல்லும் முன் போடப்பட வேண்டும்.  வேலைக்காரர்களை வைத்து கோலம்
                     போடக்கூடாது.  கோலத்துக்கு காவியும் தீட்டினால், அங்கு பகவானும் லட்சுமியும் எழுந்தருள்கிறார்கள் என்பது தர்ம
                      சாஸ்திரம்.  சுப காரியங்களை முன்னிட்டு கோலமிடும்போது ஒற்றைக்கோடு போடக்கூடாது.  அசுப காரியங்களுக்கு
                      இரட்டைக் கோடு ஆகாது.  இதை இழை கோலம் போடும்போது கவனத்தில் கொள்ளவேண்டும்.
கூடாது...கூடாது...
                      புண்ணிய தீர்த்தங்களில் குளிக்கும் போது, எடுத்தவுடன் காலை வைக்கக்கூடாது.  தீர்த்தத்தை வலது கையால்
                      எடுத்து தலையில் தெளித்துக் கொண்ட பின்பே , வலது காலை வைக்க வேண்டும்.  ஆடையின்றி குளிக்கக்கூடாது.
                      நீரில் எச்சில் உமிழக்கூடாது.  வாய் கொப்பளிக்கக்கூடாது.  தான் குளிக்கும் தீர்த்தத்தை இன்னொரு தீர்த்ததுடன்
                      ஒப்பிட்டுப் பேசி உயர்வு தாழ்வு கற்பிக்கக்கூடாது.
--  தினமலர். பக்திமலர். ஜனவரி 9, 2014.

No comments: