Wednesday, October 28, 2015

பஞ்சாட்சர மந்திரம்.

  பஞ்சாட்சர மந்திரம் ஸ்தூலம், சூக்குமம் என்று இரண்டு வகைப்படும்.  நமசிவாய என்பது ஸ்தூல பஞ்சாட்சரம்.  சிவாயநம என்பது சூக்கும பஞ்சாட்சரம்.  ஆரம்ப நிலை ( சமய தீட்சை ) தீட்சை பெற்றவர்கள் ஸ்தூல பஞ்சாட்சரமும்,  மேல்நிலை ( விசேஷ தீட்சை முதலியன ) தீட்சை பெற்றவர்கள் சூக்கும பஞ்சாட்சரமும் ஜபம் செய்ய வேண்டும்.  உபதேசம் பெறுவது முக்கியம்.
      பஞ்சாட்சர மந்திரத்தை காலை குளித்த பிறகு 108 தடவை, மதியம் சாப்பிடும் முன் 108 தடவை, மாலை விளக்கேற்றும் வேளையில் 108 தடவை ஜபம் செய்யவேண்டும்.  இதுவல்லாமல் இயன்ற பொழுதெல்லாம் உச்சரித்துக் கொண்டே இருக்கலாம்.
பிரதோஷ நாள்.
      பிரதோஷ நாளில் சிவனுக்கு மல்லிகை, நந்தியாவர்த்தம் போன்ற மலர்களினால் மாலை அணிவித்து, வில்வ இதழ்களினால் அர்ச்சனை செய்தும் பிரதோஷத்தில் வழிபட வேண்டும்.
-- மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாச்ச்சாரியார்.   அறிவோம்! தெளிவோம்!  தொடரில்...
-- தினமலர். பக்திமலர். ஜனவரி 9, 2014.

No comments: