Tuesday, October 27, 2015

குளிக்கும்போது...


     நாம் குளிக்கும் போது அந்த தண்ணீரில் கங்கை முதலான எல்லா புண்ணிய நதிகளும் இருப்பதாக நம்பிக்கையுடன் நினைக்க வேண்டும்.  அப்போது அந்த நீர் புனித நீராகிறது.  நீராடும் முன் ஒரு சொம்பு தண்ணீரை கையில் எடுத்துக் கொண்டு, பின் வரும் சுலோகத்தைச் சொல்லி நதி தேவதைகளை வணங்கி, இந்த நீரில் எழுந்தருள்க என்று பிரார்த்தனை செய்து கொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
     குளிக்கும் போது சொல்ல வேண்டிய சுலோகம் இது :
' கங்கேச யமுனா சைவ கோதாவரி சரஸ்வதி நர்மதா
 சிந்து காவேரி ஜலேஸ்மின் சாந்நிதம் குரு '
--   தினமலர். பக்திமலர். ஜனவரி 9, 2014.                                                     

No comments: