Friday, October 16, 2015

வலைஞர் வாக்கு.

*  நாம் பெற்ற குழந்தையைப் போன்றது பொய் !  மிகக் கவனமுடன் பாதுகாக்க வேண்டும்.  -- ட்விட்டர் எம்.ஜி.ஆர்.
*  பெண் தனக்கு பாதுகாப்பான தூரத்தில் ஆணை நிறுத்திவிடுகிறாள்.  ஆணின் துரதிர்ஷ்டம் அது நடுத் தெருவாக
    அமைந்துவிடுகிறது.  -- அரசு.
*  விட்டுக்கொடுக்காமல் ஒரு சாலையையே கடக்க முடியாது.  வாழ்க்கையை எப்படி கடக்க முடியும். - அசோக் குமார்.
*  கல் கிடைக்கும்வரை நாய் மீது அன்புகாட்டுங்கள்... ராஜதந்திரம்...!  - சத்தியம்.
*  முதுகில் குத்துபவன் நண்பனாகவோ, எதிரியாகவோதான் இருக்க வேண்டும் என்று இல்லை.  மசாஜ் பார்லர் பெண்ணாகவும்
   கூட இருக்கலாம்.  - ரைட்டர் பிசாசு.
*  கொசு மாதிரி சாப்பாட்டுக்கு அலையக் கூடாது !  சிலந்தி மாதிரி சாப்பாட்டை நம்ம இடத்துக்கே வர வைக்கணும்!  அதான்
   வெற்றி!   --  ட்விட்டர் எம்.ஜி.ஆர்.
--   ' தி இந்து' நாளிதழ்களிலிருந்து

No comments: