Saturday, September 19, 2015

இதையும் தெரிஞ்சுக்கலாம் !

*  சென்னை நேரம் கிரீன்விச் நெரத்திலிருந்து 5 மணி 21 நிமிடங்கள் 14 நொடிகள் என இருந்திருக்கிறது.  இந்தியாவுக்கான பொது நேரத்தை
   ( Indian Standard Time ( IST ) 1906 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி அன்றைய பிரிட்டிஷ் இந்திய அரசு ஏற்றுக்கொண்டது.
*  செங்கல் தரமானதா என்பதை நம்மால் அறிய முடியும்.  சில செங்கற்களை 24 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.  பிறகு, விரலால் சுரண்டிப்
   பார்க்கும்போது பிசிறு பிசிறாக வந்தால், அது தரம் குறைந்த செங்கல்.
*  தற்போது கட்டுமானத்தில் ' இண்டர்லா செங்கற்கல் ' என்றோரு வகையும் பயன்பாட்டில் உள்ளது.  நிலக்கரி சாம்பல், சுண்ணாம்பு, ஜிப்சம் கலந்து
   தயாரிக்கப்படும் இக்கல் மூன்று செங்கற்களுக்கு இணையானது.  இது வேலையை மிகவும் சுலபமாக்கும்.
*  பாசியை நீக்குவது : தண்ணீர் டியூப்புகளில் அதிக ப்ரஷர்.கொடுத்து நீரை வெளியேற்றி மேற்கூரையில் உள்ள தூசி, துரும்புகளை அகற்றலாம்.  அதிக
   ப்ரஷரில் நீர் பாய்ச்சும்போது, நீரின் வலிமை காரணமாக அழுக்கையும் பாசியையும் கூரைகளைச் சுத்தப்படுத்தும் முறைகளில் இது ஒரு வழிமுறையாகும்.
*  மேற்கூரை மற்றும் சுவர்களில் உள்ள பாசியைச் சுரண்டி எடுப்பதன் மூலம் இப்பிரச்சினையைப் போக்கலாம்.  இந்த முறையைக் கையாண்டால் அதிக
   நேரமும் உழைப்பும் தேவைப்படும்.  ஆனால், சுத்தப்படுத்துவதற்கு இது சிறந்த வழி.  இந்த முறையைப் பின்பற்றினால் சுவர் மற்றும் கூரையில் இருக்கும்
   கடைசித் துளி பாசி வரை நீக்கிவிடலாம்.  சுரண்டி எடுத்த பின் அந்த இடத்தில் ரசாயன மருந்தைத் தெளித்துப் பாசி மீண்டும் வராமல் பார்த்துக்
   கொள்ளலாம்.
-- சொந்த வீடு.  கனவு மெய்பட வேண்டும்.
--  ' தி இந்து' நாளிதழ். இணைப்பு. சனி, டிசம்பர் 28, 2013. 

No comments: