Wednesday, September 16, 2015

வாங்க தெரிஞ்சுக்கலாம் !

*  அந்தக் காலத்தில் பாய்ன்செட்டியா என்கிற செடியின் இலைகளை கிறிஸ்துமஸ் அலங்காரத்துக்குப் பயன்படுத்துவார்கள்.
*  முதலமைச்சர் பொறுப்பேற்றதிலிருந்து தனது 700 சதுர அடி வீட்டில் இருந்துதான்  புத்ததேவ் பட்டாச்சாரியா பணியாற்றினார்.
*  தற்போது திரிபுரா முதலமைச்சராக இருக்கும் மாணிக் சர்க்காரோ, முதலமைச்சருக்கான இருப்பிடத்திலிருந்து வெளியேறினால், கட்சி அலுவலகத்தில்
   உள்ள அறையில்தான் தங்குவார்.  அவருக்குத் தலைநகர் அகர்தலாவில் சொந்த வீடு கிடையாது.  சொந்த ஊரில் தகரம் போட்ட வீடுதான் அவருடையது.
*  டில்லி முதல்வராக பதவி ஏற்க இருக்கும் அரவிந்த் கேஜ்ரிவால் தனக்கு, முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு தேவை இல்லை எனவும், ஆடம்பர பங்களா
   தேவை இல்லை எனவும் அறிவித்திருப்பது ஒரு நல்ல ஆரம்பமே.
*  இந்திய ராணுவத்திலிருந்து 6 வீரர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்; காஷ்மீர் போலி எங்கவுன்டர் சம்பவத்தில் குற்றம் இழைத்தது தெரியவந்ததால்.
*  மதம் பிடித்ததால் தன் பாகனைக் கொன்று விட்ட யானை, பின்னர் தனது தவறை உணர்ந்து கண்ணீர் விட்டு அழுதது.  உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்த இந்த
   உருக்கமான சம்பவத்தைப் பார்த்து அனைவரும் கண்கலங்கினர்.
-- ' தி இந்து' நாளிதழ்.  வெள்ளி, டிசம்பர் 27, 2013.  

No comments: