Sunday, August 23, 2015

சிறுநீர் சிகிச்சை அமைப்பு.

 ( சிறப்பு )
   சீனாவில்  இயங்கி  வருகிறது சிறுநீர்  சிகிச்சை  அமைப்பு.  இதில்  1000  உறுப்பினர்கள்  இருக்கிறார்கள்.  தினமும்  அவரவர்  சிறுநீரை  ஒரு  தம்ளரில்  பிடித்து, குடித்து  வருகிறார்கள்.  சீன  சுகாதாரத்துறை  அமைச்சகம்  இதை  அங்கீகரித்திருக்கிறது.  தினமும்  சிறுநீர்  பருகுவதால்  உடல்  ஆரோக்கியம்  அதிகரித்திருக்கிறது,  புற்றுநோய்  கூட  குணமாகிறது  என்கிறார்கள்.  79  வயது  பாவோ  யாஃபு  இந்த  அமைப்பின்  தலைவராக  இருக்கிறார்.  இவரது  தந்தை  நோயால்  துன்புற்று  வந்தார்.  அவர்   சிறுநீர்  குடிக்க  ஆரம்பித்த  பிறகு  நோயிலிருந்து  மீண்டுவிட்டார்.  அதிலிருந்து  பாவோவும்  சிறுநீர்  குடிக்க  ஆரம்பித்துவிட்டார்.  "முதல்முறை   சிறுநீர்  குடிப்பது  கடினமான  செயல்தான்.  ஆனால்  ஒருமுறை  குடித்துவிட்டால்  பழகிவிடும்.  சில  சீன  மருந்துகளை  விட   சிறுநீர்  சுவையானது.  ஆரம்பத்தில்  100  மி.லி.தான்  குடித்தேன்.  இன்று  300  மி.லி.  சாப்பிடுகிறேன்.  குடிக்க  ஆரம்பித்த  ஆறே  மாதங்களில்  என்  வழுக்கைத்  தலையில்  முடிகள்  முளைக்க  ஆரம்பித்துவிட்டன.  கடந்த  22  வருடங்களில்  ஒருமுறை  கூட  ஜலதோஷம்  பிடித்ததில்லை.  என்  பார்வை  சக்தி  அதிகரித்திருக்கிறது"  என்கிறார்  பாவோ.  மருத்துவர்கள்   சிறுநீர்  குடிப்பதை  கடுமையாக  எதிர்க்கிறார்கள்.  உடலுக்குத்  தேவையில்லாத  கழிவுகள்தான்   சிறுநீர்  மூலம்  வெளியேறுகின்றன.  கழிவுகளை  மீண்டும்  குடிப்பதால்  எப்படி  ஆரோக்கியம்  திரும்பும்  என்று  கேட்கிறார்கள்.  ஆனால்  குடிப்பவர்களோ  கை உடைந்தபோது  தொடர்ந்து   சிறுநீர்  ஊற்றி  வந்ததில், எலும்பு  தானாகச்  சேர்ந்துவிட்டது.  தைராய்டு  பிரச்சினை  சரியாகிறது என்று  சொல்லிவருகிறார்கள்.  பாவோ  ஆண்டுக்  கணக்கில் சிறுநீரைச்  சேமித்து  வருகிறார்.  பரிசோதனைகள்  செய்கிறார்.  பழைய சிறுநீருக்குக்  கூடுதல்  சக்தி  இருக்கிறது.  அதன்மூலமே  தினமும்  முகம், கண்கள், காதுகளைச்  சுத்தம்  செய்வதாகக்  கூறுகிறார். சிறுநீர்  குடிப்பதால்  120  ஆண்டுகள்  வாழக்கூடிய  சாத்தியமும்  இருக்கிறது  என்கிறார். - ஐயோ ... என்ன  சொல்றதுன்னே  தெரியலையே...
--உலக  மசாலா.  ( தேசம் ).
-- 'தி இந்து' நாளிதழ். சனி, ஆகஸ்ட்  22, 2015. 

No comments: