Tuesday, August 18, 2015

சில டாக்டர்கள்

சில டாக்டர்கள் ஊசிபோடுவதற்கு முன்னால், ஊசி போடப்போகும் உடல் பகுதியை பஞ்சினால் வேகமாக துடைத்துவிட்டு ஊசி போடுகிறார்களே, என்ன காரணம்?
     அந்த திரவம் ஆல்கஹால்.  அந்த ஆல்கஹாலை ஊசிபோடும் இடத்தில் தடவும்போது,  அங்குள்ள சின்னஞ்சிறிய கிருமிகள் இறந்துவிடுகின்றன.   இப்படிச் செய்யாவிட்டால் ஊசி போதும்போது, அந்த ஊசியின் பக்கவாட்டில் நம் தோலில் உள்ள நுண்ணுயிர்கள் ஒட்டிக்கொண்டு நம் உடலுக்குள் சென்றுவிடலாம்.  இதைத் தவிர்க்கத்தான் டாக்டர்கள் அப்படிச் செய்கிறார்கள்.
--குட்டீஸ் சந்தேக மேடை ?!  -- ஜி.என்.எஸ்.
-- தினமலர். சிறுவர் மலர். அக்டோபர் 18, 2013.   

No comments: