Monday, August 10, 2015

காசிக்கு போவோர்!

காசிக்கு போவோர் தம்பதியராகத்தான் போக வேண்டுமா?
     தம்பதியராகப் போவதுதான் விசேஷம்.  கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராட சில நியதிகள் உண்டு.  ஒன்று மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டு நீராட வேண்டும்.  அல்லது மகனின் கையைப் பிடித்துக்கொண்டு நீராட வேண்டும்.  இருவரும் இல்லாத பட்சத்தில் பசுமாட்டின் வாலைப்பிடித்துக் கொண்டாவது நீராட வேண்டும்.  இம்மூன்றிலும் தம்பதியராக நீராடுவதே உத்தமம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
-- அறிவோம்!  தெளிவோம்! .  ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்.
-- தினமலர். பக்திமலர். ஜூன் 2, . 2011.

No comments: