Tuesday, July 7, 2015

உனவு கொடுங்கள்

   (  சிறப்பு ).
உனவு  கொடுங்கள்,  பைபிள்  வேண்டாம்.  --  நேபாள  பிரதமர்  கோபம்.
மரணத்திலும்  ஆதாயம்  தேடும்  கிறிஸ்துவ  அமைப்பு
   பூகம்பத்தால்  பாதிக்கப்பட்டு  சின்னாபின்னமாகி  இருக்கிற  நேபாள  மக்களுக்கு  இந்தியா  உட்பட  பல்வேறு  உலக
 நாடுகள் தங்களால்  ஆன  உதவிகளை  செய்வதோடு,  ஏராளமான  நிவாரணப்  பொருட்களையும்  அனுப்பி  வரும்  சூழ்நிலையில், கிறிஸ்துவ  அமைப்பு  ஒன்று, 1  லட்சம்  பைபிள்களை  நேபாளுக்கு  அனுப்பி  இருக்கிறது.  இது  நேபாள  பிரதமர்  சுஷில்  கொய்ராலாவுக்கு  கடும்  கோபத்தை  ஏற்படுத்தி  இருக்கிறது.  "என்  மக்கள்  ஆயிரக்கணக்கில்  இறந்துள்ளனர்.  80  லட்சத்துக்கும்  மேற்பட்டவர்கள்  உணவு, தண்ணீர்  இல்லாமல்  தவித்து  வருகின்றனர்.  கடும்  குளிரில்  போர்த்திக்கொள்ள  கம்பளி  இல்லாமல்  குழந்தைகள், பெண்கள்  அவதிப்படுகின்றனர்.  இந்த  நேரத்தில்  இதுபோல  பைபிளை  அனுப்பி  இருப்பது  முட்டாள்தனம்.  எங்களுக்கு  வேண்டியது,  உணவு,  தண்ணீர், இடிபாடுகளை  நீக்கும்  இயந்திரங்கள்,  குளிருக்கு  போர்த்திக்கொள்ள  கம்பளிகள்.  இந்த  பைபிளை, குளிருக்கு  போர்த்திக்  கொள்ள  முடியாது.  சாப்பிட  முடியாது.  ஒரு  விமானம்  முழுவதும், எதற்குமே  உதவாத  முட்டாள்தனத்தை  நிரப்பி  அனுப்பி  இருக்கிறீர்கள்.  இதைப்  பார்த்தவுடன்  கடும்  கோபம்  ஏற்படுகிறது.  முடிந்தால்  உண்மையான  உதவியை  செய்யுங்கள்.  இல்லையென்றால், விட்டுவிடுங்கள்.  இனி  இதுபோல  நடந்து  கொள்ள  வேண்டாம்  என்று  கடுமையாக  எச்சரித்துள்ளார்.
-- சுதேசி.  மாதமிருமுறை  இதழ்.  மே 1 - 15,  2015.
-- இதழ்  உதவி : செல்லூர்  கண்ணன். 

No comments: