Sunday, July 19, 2015

எரிகல் பூமியை நெருங்குகிறது

ரூ.30  லட்சம்  கோடி  பிளாட்டின  விண்கல்
     யு.டபிள்யூ- 158  என்று  பெயரிடப்பட்டுள்ள  ராட்சத  எரிகல்  நாளை  அதிகாலை  பூமிக்கு  மிக  நெருக்கமாக  சுமார்  15  லட்சம்  மைல்  தொலைவில்  கடந்துச்  செல்கிறது.
     பூமியை  நெருங்கி  வரும்  யு.டபிள்யூ- 158  எரிகல்  சுமார்  பத்து  கால்பந்து  மைதானங்களுக்கு  சமமானது  ஆகும்.  இதன்  மொத்த  எடை  9  லட்சம்  டன்  ஆகும்.  இந்த  எரிகல்லில்  பிளாட்டினம்  உலோகம்  நிறைந்து  காணப்படுகிறது.  அதன்  சர்வதேச  சந்தை  மதிப்பு  ரூ.30  லடசம்  கோடியாகும்.
     மேற்படி  எரிகல்  போன்று  விண்வெளியில்  பல்வேறு  உலோக  எரிகற்கள்  சுற்றி  வருகின்றன.  என்றாவது  ஒருநாள்  இந்த  எரிகற்களில்   இறங்கு  உலோகங்களை  வெட்டி  எடுக்க  முடியும்  என்று  விஞ்ஞானிகள்  நம்புகிறார்கள்.  அந்த  நாள்  வெகுதொலைவில்  இல்லை  என்றும்  தெரிவித்தனர்.
     விண்கல்  பூமியை  கடந்து  செல்வதை  இந்திய  நேரப்படி  நாளை  ( திங்கட்கிழமை )  அதிகாலை  4  மணி  முதல்  பல்வேறு  இணையதளங்களில்  நேரடியாக  இந்தியாவைச்  சேர்ந்தவர்கள்  காணமுடியும்.  இங்கிலாந்து  நேரப்படி  இன்று  இரவு  11  மணிக்கு  பூமியை  கடந்து  செல்கிறது.  இந்த  விண்கலம்  பூமியை  கடந்து  செல்வதை  வடமேற்கு  ஆப்பிரிக்காவைச்  கேனரி  தீவுகளில்  அமைக்கப்பட்டுள்ள  வானிலை  ஆய்வு  மையம்  இன்டர்நெட்டில்  நேரடியாக  ஒளிபரப்புகிறது.  
-- கடைசிப் பக்கம் .
--  'தி இந்து'  நாளிதழ். ஞாயிறு,  ஜூலை  19, 2015.
-- தினமலர்  திருச்சி  19-7-2015.  

No comments: