Tuesday, July 21, 2015

ஆன்மிக கேள்வி - பதில்!

*  விநாயகர்  அகவலை  இயற்றியவர்  யார்?  --  ஔவையார்.
*  திருவாரூர்  கமலாலயக்  குளக்கரையில்  உள்ள  விநாயகர்  பெயர்  என்ன?  --  மாற்று  உரைத்த   விநாயகர்.
*  சந்தானக்  குரவர்கள்  யாவர்?  --  மெய்கண்டார்,  மறைஞான  சம்பந்தர்,  அருனந்தி  சிவாச்சாரியார்,  உமாபதி  சிவம்.
*  சைவ  சமயக்  குரவர்கள்  யாவர்?  --  திருநாவுக்கரசர்,  சுந்தரர்,  திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர்.
*  பெருந்தமிழன்  என்று  தன்னைக்  கூறிக்கொண்ட  ஆழ்வார்  யார்?  --  பூதத்தாழ்வார்.
*  திருவிண்ணகரம்  என்று  அழைக்கப்படும்  தலம்  எது?  --  உப்பிலியப்பங்கோவில்.
*  பைந்தமிழின்  பின்சென்ற  பச்சைப்  பசுங்கொண்டல்  என்று  திருமாலைப்  புகழும்  நூல்  எது?  --  மீனாட்சியம்மை  பிள்ளைத்தமிழ்.
*  திருவாவினங்குடி  தலத்தின்  தற்போதைய பெயர்  எது?  --  பழனி.
-- தினமணி  வெள்ளிமணி,..11 - 5 - 2012.
-- இதழ் உதவி:  K.கண்ணன்,  செல்லூர்.

No comments: