Saturday, July 18, 2015

பேல் பூரி.

கண்டது:
*  (  கோயம்புத்தூர்  காந்திபுரத்தில்  ஆம்னி  வேனின்  பின்புறத்தில் )
     போதிக்கும்போது  புரியாது
     பாதிக்கும்போது  புரியும்.
*  (  திருப்பூரில்  ஆட்டோவில்  கண்ட  வாசகம் )
     வழி  தவறுவதைவிட...
     வழி  கேட்பது  மேல்.
*  ( திண்டுக்கல்  கடிகாரக்கடை  ஒன்றில் )
     நகர்வது  முள்  அல்ல
     உங்கள்  வாழ்க்கை.
*  ( நெல்லை  பெருமாள்கோயில்  தெரு  தேநீர்க்கடை  ஒன்றில் )
     அன்பை  வாங்கினால்
     பிற்காலத்தில்  நன்மை  சேரும்.
     கடனை  வாங்கினால்
     பிற்காலத்தில்  வம்பு  சேரும்.
(  கிருஷ்ணகிரி  நேதாஜி  ரோட்டில்  உள்ள  ஒரு  முடிதிருத்தத்தில் )
     நண்பனுக்குக்  கடன்
     கொடுத்தால்
     கடனும்  போய்விடும்
     நண்பனும்  போய்விடுவான்.
--- தினமணி  கதிர்,  15 / 22  -  07 - 2012.
-  இதழ் உதவி:  K.கண்ணன்,  செல்லூர்.

No comments: