Sunday, July 12, 2015

இவை எல்லாமே ஆஹா தான்.

*  இறைவனின்  திருநாமத்தை  வாய்விட்டோ,  உதட்டளவிலோ  உச்சரிக்காமல்  மனத்திலிருந்து  திரும்பத்திருமப  சொல்லும்போது  அட்ரீனலின்  சுரப்பு
   குறைவதோடு  மூளையானது,  நைட்ரிக்  ஆக்ஸைடு  என்ற  வேதிப்பொருளை  வெளிப்படுத்தி  இரத்த  அழுத்தத்தைச்  சீராக்குகிறது  என்று  ட்யூக்
   பல்கலைக்கழக  ஆய்வாளர்கள்  கண்டுபிடித்துள்ளனர். இறைவனின்  நாமத்தை  உளமாற  ஜபித்து  உயர்  இரத்த  அழுத்தத்திலிருந்து  விடுபடலாமே!
*  கடலைப்  பருப்பு  ஒரு  கிலோ,அரிசி  கால்  கிலோ,  வரமிளகாய்  6,  ஓமம்  1  ஸ்பூன்.  இவற்றை  மிஷினில்  அரைத்து  வைத்துக்  கொண்டால்,  பஜ்ஜி,
    போண்டா,  ஓமப்பொடி  எதுவானாலும்  உடனடியாக  செய்யலாம்.
*  அல்வா  போன்ற  ஸ்வீட்  செய்யும்போது  வெண்ணெயை  அரைப்  பதமாக  உருக்கி  வைத்துக்கொண்டு,  கொஞ்சம்  கொஞ்சமாகச்  சேர்த்துக்
   கிளறினால்  நெய்  பதமாகக்  காய்ந்து  ஸ்வீட்  கமகமக்கும்.
*  தோல்  சீவிய  பிரண்டைத்  துண்டுகளை  வேக  வைத்து  காய  வைக்கவும்.  அதைப்  பொடி  செய்து  அதனுடன்  ஒரு  ஸ்பூன்  இந்துப்பு,  எலுமிச்சைச்சாறு
   கலந்து  உலர்த்திக்  கொள்ளவும்.  இந்தப்  பொடியைத்  தினமும்  சாப்பிடுவதற்கு  முன்  ஒரு  ஸ்பூன்  நீரில்  கலந்து  உட்கொண்டால்  உடல்  பருமன்
   குறையும்.
*  வீட்டில்  எலி  தொந்தரவா?  Rat  Gum  Pad  கடைகளில்  கிடைக்கிறது.  அதை  வாங்கி  எலி  நடமாடும்  இடங்களில்  வைத்தால்,  அதில்  எலிகள்
   சுலபமாக  ஒட்டிக்கொள்ளும்.
*  பட்டு  வாங்கும்போது  ஒரிஜினல்  பட்டுத்துணிதானா  என்பதைக்  கண்டுபிடிக்க,  கைவிரலை  துணிமீது  வைத்து  அழுத்தினால்  கைரேகை  பதிந்ததும்
   சட்டென  மறைந்துவிடும்.  வேறு  நூல்கள்  கலந்திருந்தால்  கைரேகை  அப்படியே  இருக்கும்.
*  விழாக்களின்  அழைப்பிதழ்கள்  தபாலில்  ஐம்பதுக்கும்  மேல்  அனுப்பும்போது,  அதற்குரிய  தொகையை  தபால்  அலுவலகத்தில்  செலுத்தினால்
   அவர்களே  எந்திரம்  மூலம்  அஞ்சல்  முத்திரையைப்  பதித்து  விடுவார்கள்.  ஸ்டாம்ப்  ஒட்டும்  வேலை  மிச்சம்.
-- மங்கையர் மலர்.  அக்டோபர்  2012.
-- இதழ் உதவி:  N.கிரி ,  நியூஸ்  ஏஜெண்ட்.  திருநள்ளாறு.  ( கொல்லுமாங்குடி )  

No comments: