Tuesday, June 9, 2015

காரணம் என்ன?

  " குருவே,  முக்காலமும்  உணர்ந்த  கிருஷ்ணர்,  பாண்டவர்கள்  சூதாடப்போனபோதே  தடுத்திருக்கலாமே.  அவர்கள்  தோற்று  அவமானப்படுவார்கள்  என்பது  அவருக்குத்  தெரிந்திருக்குமே...பிறகு  ஏன்  தடுக்கவில்லை?"  கேட்டான்  சீடன்  ஒருவன்.
     புன்னகைத்த  குரு  சொன்னார், " மகனே,  முன்  கூட்டியே  அறிந்தாலும்  நடக்க  இருப்பதைத்  தடுப்பது  ஆண்டவன்  செயல்  அல்ல.  ஏனெனில்  அப்படித்தான்  நடக்கும்,  நடக்கவேண்டும்  எனத்  தீர்மானித்தவனே  அவன்தானே...!  அதனல்தான்,  துரியோதனான்  தனக்கு  பதில்  தன்  மாமா  சகுனி  ஆடுவார்  என்று  சொன்னபோது,  தருமருக்கு,  எனக்குப்  பதில்  கிருஷ்ணர்  விளையாடுவார்  என்று  சொல்லவும்  தோன்றாமல்  போய்விட்டது...!"
     " அப்படியானால்,  பிறகு  அவரே  சென்று  உதவியது  ஏன்?"
     " அழைத்தால்  வருவது  ஆண்டவன்  குணம்.  முதலை  கவ்விய  யானக்கும்,  துகிலை  இழந்த  திரௌபதிக்கும்  அவன்  உதவியதும்கூட  அழைத்த  பிறகுதானே...!"  குரு  சொல்ல,  உணர்ந்தான்  சீடன்.
--   குமுதம் பக்தி ஸ்பெஷல்,  டிசம்பர்  1 - 15 , 2012. 

No comments: