Monday, June 8, 2015

தெரியுமா உங்களுக்கு?

*  புராணங்களின்படி  பூமி,  ஏழு  த்வீபங்களாக  ( தீவுகளாக )  பிரிக்கப்பட்டுள்ளது.  அவை: ஜம்பூ  த்வீகம்,  பிலக்க்ஷ  த்வீபம்,  சால்மல  த்வீபம்,
    சுக  த்வீபம்,  க்ரௌஞ்ச  த்வீபம்,  புஷ்கர  த்வீபம்,  சாகத்வீபம்  ஆகியவையே  .
*  சமஸ்கிருதத்தில்  நமஸ்தே  என்பது  நமஹ + தே  என்று  பிரிக்கப்படுகிறது.  இதன்  பொருள்  " நான்  உங்களைத்  தலை  தாழ்த்தி  வணங்குகிறேன்
   அல்லது  நான்  நெடுஞ்சாண்  கிடையாகக்  கீழே  விழுந்து  வணங்குகிறேன்"  என்பதாகும்.  ' நமஹ'  என்ற  சொல்லிற்கு  ' ந - மம'  ( என்னுடையது  அல்ல )
   என்று  பொருள்.
*  சனிபகவான்  சந்தோஷமாக  இருக்கும்  ஊர்,  சங்ககிரி.
*  சத்யமும்  தர்மமும்  எத்தகைய  சூழலிலும்  நம்மைக்  கைவிடாது  என்பது  வேத  புராண,  இதிகாச  வாக்கு.
--   குமுதம் பக்தி ஸ்பெஷல்,  டிசம்பர்  1 - 15 , 2012.  

No comments: