Saturday, June 6, 2015

பகவானும் பழைய சாதமும்!

    பழையது  விடிய  விடிய  ஜலத்திலேயே  கிடக்கிறது.  பகவான்  எப்போதும்  கடலிலேயே  படுத்திருக்கிறார்.  பழையதைப்  போலவே  பகவானும்  நாரம்  அதாவது  தண்ணீர்  சூழ  இருப்பவர்.  அதனால்தான்  அவருக்கு  நாராயணன்  என்றே  பெயர்.  பழையதை  காலையில்  சாப்பிட  வேண்டும்.  பகவானையும்  காலையிலேயே  கும்பிட  வேண்டும்.  பழையதை  சாப்பிட்டால்  உடலுக்கு  குளிர்ச்சி  ஏற்படும்.  நாராயணனை  சேவித்தால்  மனசுக்கு  குளிர்ச்சி  கிடைக்கும்.  அதனால்  பகவானும்  பழையதும்  அப்படின்னு  சொல்ற  வழக்கம்  ஏற்பட்டது.
-- உபன்யாசம்  ஒன்றில்  கேட்டவர்:  ஆர்.கண்ணன்,  சென்னை. 33.
--   குமுதம் பக்தி ஸ்பெஷல்,  டிசம்பர்  1 - 15 , 2012. 

No comments: