Friday, June 5, 2015

டிப்ஸ்...டிப்ஸ்...!

*  சூரிய  உதயத்துக்கு  முன்பு  வாசலில்  கோலம்  போடுவது  நல்லது.
*  வெறும்  தண்ணீரை  தெளிக்கக்கூடாது.  ( மண்  தரை  இல்லாத  இடத்தில் )  சிறிது  மஞ்சள்  தூள்  கலந்த  நீரையோ,  சாணத்தையோ  கலந்து  தெளிக்க
   வேண்டும்.
*  மாக்கோலம்  போடும்  போது,  மைதா  மாவு  கலந்து  போட்டால்  சிறிது  நாட்களுக்கு  அழியாமல்,  அழகாக  இருக்கும்.
*  அரைத்த  மாவில்  கோலம்  போட்டால்  ஈரம்  காயும்  முன்  செம்மண்  பூச  வேண்டும்.
*  கிழமை  கோலங்கள்  மற்றும் பிரார்த்தனை  கோலங்களை  பூஜை  அறையில்  பலகை  அல்லது  கல்லில்  அரிசி  மாவில்தான்  போடவேண்டும்.
*  வண்ணக்கோலங்கள்  போடும்  போது  சலித்த  நைஸ்  மணலுடனோ,  கோல  மாவுடனோ  கலந்து  போட்டால்  காற்றில்  பறக்காமல்  இருக்கும்.
*  கோல  மாவு  வாங்கும்  போது  சற்று  வெளுப்பு  அதிகமாக  இருக்கும்.  மாவு  வாங்கி  சலித்து  1/4  படி  மாவிற்கு  100  கிராம்  பச்சரிசி  மாவு  கலந்து
   போட்டால்  நன்றாக  இருக்கும்.  இந்த  மாவை  கோலக்குழாயில்  போட்டால்  துளைகள்  அடைபடாது.
_    தினமலர், கோல மலர்.  12.12.12.  

No comments: