Thursday, June 4, 2015

விஷ்ணு விசேஷச் செய்திகள்.

*  நாகர்கோவிலில்  இருந்து  திருவனந்தபுரம்  போகிற  வழியில்  உள்ள திருவட்டாறு  ஆதிகேசவப்  பெருமாள்  கோயிலில்  அல்லாவுக்கு  பூஜை  நடக்கிறது.
*  திருநெல்வேலி  நெல்லையப்பர்  கோயிலில்  உள்ள  பெருமாளின்  உற்சவத்  திருமேனியின்  மார்பில்  சிவலிங்க  அடையாளம்  உள்ளது.
*  திருக்கண்ணபுரத்தில்  கண்ணபுரத்தான்  பத்மாசனத்தில்  ஸ்ரீதேவி,  பூதேவி,  பத்மினி,  ஆண்டாள்  என  நான்கு  தேவியருடன்  சங்கு  சக்கரம்  தாங்கிக்
   காட்சியளிக்கிறார்.
*  ஆசியாவிலேயே  மிகப்பெரிய  பள்ளிகொண்ட  பெருமாள்  உள்ள  தலம்  திருமயம்.  ஒரே  மலையைக்  குடைந்து  அமைத்த  சிவன் - திருமால்  கோயில்
   இதுமடும்தான்.
*  திருச்சி  முசிறி  சாலையில்  உள்ள  வேதநாராயணன்  கோயிலில்  பெருமாள்  அனைத்து  வேதங்களையும்  தலையணையாக  வைத்துப்  படுத்திருக்கிறார்.
   இதனால்  அவருக்கு  வேதநாராயணன்  என்று  பெயர்.
*  கர்நாடகத்தில்  உள்ள  ஸ்ரீரங்கப்பட்டினத்தில்  உள்ள  ரங்கநாதர்  எழுந்தருளியுள்ள  ஆதிசேஷனுக்கு  ஏழு  தலைகள்  இருப்பது  வித்தியாசமானது.
*  திருமலை,  தான்தோன்றிமலை,  உப்பிலியப்பன்  கோயில்,  குணசீலம்  ஆகிய  நான்கு  பெருமாள்  கோயில்களிலும்  தாயாருக்கு  சன்னதி  இல்லை.
-- குமுதம் பக்தி ஸ்பெஷல்,  டிசம்பர்  1 - 15 , 2012. 

No comments: