Thursday, June 18, 2015

வழிபாடு.

  கோயில்களில்  ஆகம  ரீதியாக  வழிபாடுகள்  நடக்கின்றன.  சிவாலயங்களில்  காரணம்  மற்றும்  காமிக  ஆகம  வழிபாடு  பரவலாக  உள்ளது.  வைணவக்  கோயில்களில்  வைகானசம்  மற்றும்  பாஞ்சராத்ரம்  என்ற  இரண்டு  ஆகமங்களில்  ஒன்று  பின்பற்றப்படும்.
வாழைமரம்.
கல்யாணம்  மற்றும்  திருவிழாக்களில்  வாழையில்  அதுவும்  பூவும்  தாரும்  வைத்து  கட்டுகிறார்களே  அது  ஏன்?
      சுபநிகழ்ச்சிகள்  நடக்கும்  இடத்தை  மங்களம்  பொருந்தியதாக  அலங்கரிக்க  வேண்டும்.  மாவிலை,  தென்னங்குருத்து,  தோரணம்,  வாழைமரம்,  மாக்கோலம்  இவைகளை  மங்கலத்தின்  அடையாளங்களாக  சாஸ்திரங்கள்  கூறுகின்றன.  பொதுவாக,  நம்  குலம்  தழைக்க  வேண்டும்  என்பதையே  எல்லாரும்  பெரிதும்  விரும்புகின்றனர்.  பூவும்  தாருமாக  உள்ள  வாழைமரத்தைச்  சுற்றி  அதன்  கன்றுகள்  தோன்றி  தழைப்பது  போல  நம்  வம்சமும்  தழைக்க  வேண்டும்  என்பதற்காக  அப்படிச்  செய்யப்படுகிறது.
---    தினமலர்  பக்திமலர். டிசம்பர்  27,  2012.  

No comments: