Thursday, June 11, 2015

தாவரமே! தந்த வரமே !

சூரிய  ஒளியில்  சோறு  சமைத்து
சத்தான  உணவை  எங்களுக்கு  தா  வரமே!  அது  நீ  தந்த  வரமே !
உன்  இலையால் எங்களுக்கு  விருந்தளித்து
உன்  காயால்  கறி  சமைத்து
உன்  பழத்தால்  நா  சுவைத்து
உன்  பூவால்  எங்களை  அலங்கரித்து
உன்  நிழலால்  எங்களை  குளிர்விக்க  வா  தா  வரமே !  அது  நீ  தந்த  வரமே !
நீ  உணவு  சமைப்பதால்  நாங்கள்  சுவாசிக்கிறோம்
நாங்கள்  சுவாசிப்பதால்  நீ  உணவு  சமைக்கிறாய் !
இந்த  உறவை  நீட்டிக்க  வா  தா  வரமே !  அது  நீ  தந்த  வரமே !
-- S.புவனேஸ்வரி  PST,  GHS  கோத்துக்குளம்.
--  ஆசிரியர்  நண்பர்,  டிசம்பர்  2012.  காரைக்கால்  பட்டதாரி  ஆசிரியர்  சங்க  திங்களிதழ்.
--- இதழ்  உதவி:  செல்லூர் கண்ணன்.  

No comments: