Sunday, May 31, 2015

கவிதைத் தூறல்

வரதட்சிணை
நிலத்தை  விற்றாள்
கல்வி  கற்க
வீட்டை  விற்றாள்
பட்டம்  பெற
தன்னையே  விற்றாள்
திருமணம்  செய்ய!
- ஜெ.ஜெயா, கோவை.
தண்டனை
வாழைப்பழம்
குற்றம்  எதுவும்
செய்யவில்லை
இருந்தாலும்  எல்லோரும்
தோல்  உரிக்கிறார்களே...!
- க.சு.கீர்த்தி, பெரணமல்லூர்.
மழலை
எல்லாம்  தெரியும்
என்று  சொல்பவர்கலும்
ஏங்குகிறார்கள்,
ஒன்றுமே  தெரியாத
மழலையின்  அன்புக்கு!
- வி.ஜானகி, கே.கே.நகர்.
-- மங்கையர் மலர்.  மார்ச் 16-31, 2015.
-- இதழ் உதவி : சந்திராசிவசிதம்பரம், செம்பனார்கோயில்.  

No comments: