Saturday, May 23, 2015

தீபாராதனை விளக்கம் !

  தீபாராதனையின்  போது  விதவிதமான  தீபங்களால்  ஆராதனை  நடத்தப்படுகிறது.  அவை  பற்றிய  விளக்கம்:
      நட்சத்திர  தீபம்:   நட்சத்திரங்கள்  இறைவனை  வழிபட்டு  ஒளி  பெறுவதைக்  குறிக்கும்.
      ஒன்பது  தீபம்:  நவசக்திகளைக்  குறிக்கும்.
      ஏழு  தீபம்:  சப்த  மாதர்களைக்  குறிக்கும்.
      பஞ்ச  தீபம்:  நிவர்த்தி  கலை,  பிரதிட்டா  கலை,  வித்யா  கலை,  சாந்தி  கலை,  சாந்தி  அதீத  கலை  என்று  ஐந்து  கலைகளைக்  குறிக்கும்.
      மூன்று  தீபம்:  சூரியன்,  சந்திரன்,  அக்னி  ஆகிய  மூன்று  ஒளிகளைக்  குறிக்கும்.
       ஒற்றை  தீபம்:  சரஸ்வதியைக்  குறிக்கும்.
       தீபாராதனை  முடிந்த  பிறகு  இறுதியில் ' கும்ப  தீபம் ' காண்பிப்பது  சதாசிவ  தத்துவத்தைக்  குறிக்கும்.
-- தினமலர் .  பக்தி மலர் .  டிசம்பர்  6,  2012.   

No comments: