Thursday, May 14, 2015

தெரியுமா? தெரியுமே!

*  ராமானுஜரின்  மறு  அவதாரம்  என்று  போற்றப்படும்  மகான்,  மணவாளமாமுனிகள்.
*  மையப்  புள்ளியின்றி  ஒரு  வட்டத்தை  வரையமுடியாது.  இறைவன்தான்  நம்முடைய  வாழ்வின்  மையம்;  மற்றும்  சாரமும்  அவனே!  நம்  வாழ்வின்
   லட்சியமும்  இறைவனே  என்பதை  நினைவில்  கொண்டு,  நாம்  நமது  அன்றாடக்  கடமைகளைச்  செய்து  வருகிறோம்.  இதுவே  ஆலயத்தில்  நாம்
   பிரதட்சணம்  செய்வதின்  உட்பொருள்.
*  சோழ,  விஜயநகர  மன்னர்களின்  ஆட்சிக்காலத்தைக்  குறிக்கும்  ஆயிரம்  ஆண்டுகளுக்கும்  முற்பட்ட  ( கி.பி. 1101 )  பல  அரிய  கல்வெட்டுகள்
   கண்டறியப்பட்ட  திருத்தலம்  பாலூர்.
*  கிராம  தெய்வங்கள்  என்றாலே  குலவைச்  சத்தமும்  நாட்டுப்புறப்  பாடல்களுமே  பிரதானம்.
*  நெருப்புக்குப்  பக்கத்தில்  யார்  போனாலும்  வியர்க்கும்.  ஆனால்  நெருப்புக்கு  வியர்க்குமா?
---  குமுதம்  பக்தி  ஸ்பெஷல்,  நவம்பர்  16 - 30,  2012. 

No comments: