Wednesday, May 13, 2015

டிப்ஸ்...டிப்ஸ்...

*  தொட்டிகளில்  ரோஜா  செடி  வளர்ப்பவர்கள் ... தினமும்  தண்ணீர்  ஊற்றும்போது,  நீருடன்  சிறிது  உப்பு  சேர்த்து  கலந்து  ஊற்றினால்  ரோஜா
    பூக்கள்  அதிக  மணத்துடன்  மலரும்.
*  ஜாதி  மல்லிகைப்  பூ  பழுப்பு  நிறமாக  மாறுவதைத்  தடுக்க... பூவை  லெசாக  உலர்த்தி  செய்தித்தாளில்  போட்டு  பொட்டலாமாக  கட்டி  ஃப்ரிட்ஜினுள்
   வைத்துவிட்டால்  புத்தம்  புதிது  போல்  இருக்கும்.
*  பிடிகருனைக்கிழங்கை  வேக  வைக்கும்  போது  அதனுடன்  சில  கொய்யா  இலைகளை  போட்டு  வேகவைத்தால்  கிழங்கு  சீக்கிரம்  வெந்துவிடும்.
   காரமும்  இருக்காது.
*  ஒரு  பங்கு  மக்காச்சோளத்தை  ரவையாக  உடைத்து  அரை  பங்கு  உளுத்தம்  பருப்பு  சேர்த்து  ஊறவைத்து  அரைத்து  உப்பு  சேர்த்து  கலந்து
   இட்லி  வார்த்தால்  சுவையான  சத்தான  இட்லி  தயார்.
*  கோலக்  குழாயில் கோலப்  பொடியை  நிரப்பும்  போது  பொடி  அதிகம்  கொட்டாமல்  இருக்க  வேண்டுமா?  கோலப்பொடியுடன்  சிறிதளவு  மைதாமாவு
   ( அ )  கோதுமைமாவு  சேர்த்துக்  கொண்டால்  கோலப்பொடி  கொட்டவே  தொட்டாது.
*  கோலப்  பொடியை  நன்றாக  சலித்துவிட்டு  கோலக்  குழாயில்  நிரப்பைனால்...துளைகள்  அடைபடாமல்  இருப்பதோடு,  குழாயும்  தரையில்
   சீராக  உருளும்.
--- குமுதம்  சிநேகிதி,  டிசம்பர்  1 - 15 ,  2012.
-- இதழ் உதவி:  N.கிரி,  நியூஸ்  ஏஜென்ட் ,  திருநள்ளாறு.  (  கொல்லுமாங்குடி ).  

No comments: