Thursday, April 16, 2015

பிறப்பு, இறப்பு தீட்டு.v

   நீர்,  நெருப்பு,  மண்,  காற்று,  சூரியன்,  தவம்,  வேள்வி.  அவி,  மணம்,  ஞானம்,  மெழுகுதல்,  பெருக்குதல்,  தீட்டுக்காலம்  ஆகியவற்றால்  மனிதர்க்கு  வலிமை  வரும்.
      குழந்தை  பிறப்பு  தீட்டு  தந்தைக்குப்  பதினோரு  நாள்.  தாய்க்கு  எண்ணற்ற  நாட்கள்,  தாய்க்கும்  தந்தைக்கும்  பிறர்  தொடக்கூடாதத்தீட்டு.
      பிறன்  மனைவியிடத்து  ஒருவனுக்குப்  பிள்ளை  பிறந்தால்  மூன்று  நாள்  தீட்டு.
      பிறப்புத்தீட்டு  ஏழு  தலைமுறைக்குட்பட்ட  பங்காளிக்கும்  உண்டு.  அவர்களின்  பொதுப்பெயர்  சபிண்டர்.  அதற்கு  மேற்பட்ட  முன்  தலை  முறைக்  கோத்திரப்  பங்காளிகளுக்கும்  அத்தீட்டு  உண்டு.  அவர்களின்  பொதுப்பெயர்  சோதகர்.
      குழந்தை  இறந்தாலும்  தீட்டு.  குழந்தை  பிறப்பில்  போலவே  தாய்க்கும்  தந்தைக்கும்  குழந்தை  இறப்பிலும்  தீட்டு.
      கருத்தரித்த  குழந்தை  கலைந்தால்  தீட்டு.  கரு  எத்தனை  மாதமோ  அத்தனை  நாட்கள்  தீட்டு.
-- காவ்யா  மநுதர்மம்  என்ற  நூலில்  தமிழ்நாடன்.
-- இதழ் உதவி:  P.சம்பத்  ஐயர்,  திருநள்ளாறு. 

No comments: