Monday, April 13, 2015

அறிவோம்! தெளிவோம்!v

  கோயில்களில்  அம்மன்  கிழக்கு  மற்றும்  தெற்கு  முகமாக  அமைந்திருப்பது  ஏன்?
     சிவன்  கோயில்களில் மூன்று  விதமாக  அம்மன்  சன்னிதியை  அமைக்கலாம்  என்று  ஆகம்  சாத்திரங்கள்  கூறுகின்றன.
     ஒன்று,  சிவன்  சன்னிதி  எந்த  திசை (  கிழக்கு  அல்லது  மேற்கு )  நோக்கி  அமைந்துள்ளதோ  அந்தத்  திசை  நோக்கி  அம்மனையும்  பிரதிஷ்டை  செய்வது.  அதாவது,  சுவாமியும்  அம்பாளும்  ஒரே  திசை  நோக்கி  காட்சி  தருவர்.  இதை  ஸமான  வீஷணம்  என்பர்.  கல்யாணக்  கோலம்  என்றும்  வழக்கத்தில்  இருக்கிறது.  மதுரை  மீனாட்சி  அம்மன்  கோயில்  இந்த  அமைப்பிலேயே  உள்ளது.
     இரண்டாவது,  சிவன்  சன்னிதி  கிழக்கு  அல்லது  மேற்கு  முகமாக  இருந்தாலும்  அம்மன்  சன்னிதி  தெற்கு  முகமாகவே  அமைந்திருக்கும்.  இதை  அனுக்கிரஹவீஷணம்  என்பர்.  சுவாமியை  தரிசிக்கும்  முறையில்  அம்மன்  பிரதிஷ்டை  அமைந்திருக்கும்.  சுவாமியின்  அனுக்கிரகத்தைப்  பெற்று  நமக்கு  அருள்வதாகப்  பொருள்.  இந்தநிலை  அனேகமாக  எல்லா  கோயில்களிலுமே  உள்ளது.
     முன்றாவது,  சுவாமி  சன்னிதி  மேற்கு  நோக்கி  இருந்தால்  அம்மன்  சன்னிதி  கிழக்கு  நோக்கி  அமைந்திருக்கும்.  நேர்  எதிராகப்  பார்த்துக்கொள்ளும்  நிலை.  அபிமுகவீஷணம்  என்பர்.  எதிர்க்காட்சி  என்றும்  வழக்கத்தில்  உள்ளது.  இந்த  நிலை,  மிக  அபூர்வமானது.  திருக்கடவூர்,  காளஹஸ்தி  போன்ற  தலங்களில்  தரிசித்து  மகிழலாம்.  அருள்பாலிப்பதில்  எந்த  வேறுபாடும்  கிடையாது.  மூன்றுமே  ஒன்றுதான்.
-- ஏ.வி.சுவாமிநாத  சிவாச்சாரியார்,  மயிலாடுதுறை.
-- த்னமலர் ,  பக்திமலர்,  நவம்பர்  8,  2012. 

No comments: